Thursday 23 January 2014

அபிராமி அந்தாதி ( 5 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  5


பொருந்திய  முப்புரை,   

செப்புரை  செய்யும்  

புணர்   முலையாள் !

வருந்திய வஞ்சி 

மருங்குல்  மனோன்மணி, 

வார்  சடையோன் 

அருந்திய  நஞ்சு  

அமுதாக்கிய  அம்பிகை !

அம்புய  மேல்  

திருந்திய  சுந்தரி !

அந்தரி  பாதம் 

என் 

சென்னியதே  !

சிவ பெருமான்  அருந்திய  ஆலகால  விஷத்தையே  அமுதமாக்கிய   அன்னையே,  அபிராமியே!!  உன்   பாதத்தில்,  தலை  வைத்து  வணங்குகின்றேன்.




No comments:

Post a Comment