காலையில் தினமும் பாராயணம் செய்ய
சிற்றம் சிறு காலே
வந்துன்னை சேவித்து - உன்
பொற்றாமரை அடியையே
பற்றும் பொருள் கேளாய் !
பெற்றம் மேய்த்துண்ணும்
குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை
கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான்
அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்
பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்!
உனக்கே நாம் ஆட்செய்வோம் !
மற்றை நம் காமங்கள்
மாற்றேலோர் எம்பாவாய்!
அருளியவர் : ஸ்ரீ ஆண்டாள் (எ )
சூடிக் கொடுத்த நாச்சியார் ( எ )
கோதை நாச்சியார்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண்பாற் புலவர்.
ஸ்ரீரங்கத்து அரங்கனையே மணவாளனாகப் பெற்று
அவருடன் இரண்டற கலந்தவர்.
No comments:
Post a Comment