Sunday 9 March 2014

இரும்பைக்  காய்ச்சி உருக்கிடுவீரே !
யந்திரங்கள்  வகுத்திடுவீரே !
கரும்பைச்  சாறு  பிழிந்திடுவீரே !
கடலில்  மூழ்கி  நன்முத்தெடுப்பீரே !
அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல்
ஆயிரம்  தொழில் செய்திடுவீரே  !
பெரும் புகழ்  நுமக்கே  இசைக்கின்றேன்
பிரமதேவன் கலை இங்கு  நீரே !!

மண்ணெடுத்து  குடங்கள்  செய்வீரே !
மரத்தை வெட்டி  மனை  செய்குவீரே !
உண்ணக்  காய்கனி  தந்திடுவீரே !
உழுது  நன்செய்ப் பயிரிடுவீரே !
எண்ணெய்  பால்  நெய்  கொணர்ந்திடுவீரே !
இழையை  நூற்று  நல்லாடை  செய்வீரே !
விண்ணின்று  எமை  வானவர்  காப்பார்,
மேவிப்  பார்மிசைக்  காப்பவர்  நீரே !!

பாட்டும்  செய்யுளும்  கோத்திடுவீரே !
பரத  நாட்டியக்  கூத்திடுவீரே !
காட்டும்  வையப் பொருளின்  உண்மை
கண்டு  சாத்திரம்  சேர்த்துடுவீரே !
நாட்டிலே  அறம்  கூட்டி வைப்பீரே !
நாடும்  இன்பங்கள்  ஊட்டி வைப்பீரே !
தேட்டமின்றி  விழியெதிர்  காணும்
தெய்வமாக  விளங்குவீர்  நீரே !!

தான்  கண்ட  புதுமைப் பெண்ணை
பாராட்டி,
படத்தலையும்  காத்தலையும்
அவர்தம்    செயலாகக்  கருதி,
எங்கெங்கும்  காணினும்  சக்தியடா
என்று  முழங்கியவர்  பாரதியார்.

பெண்டிர்  அனைவருக்கும் 
மகளிர்தின  வாழ்த்துக்கள் .









1 comment:

  1. அருமையான நிறைவான வாழ்த்துகள்..
    இனிய நன்றிகள் ஐயா..!

    ReplyDelete