இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே !
யந்திரங்கள் வகுத்திடுவீரே !
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே !
கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே !
அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே !
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன்
பிரமதேவன் கலை இங்கு நீரே !!
மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே !
மரத்தை வெட்டி மனை செய்குவீரே !
உண்ணக் காய்கனி தந்திடுவீரே !
உழுது நன்செய்ப் பயிரிடுவீரே !
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே !
இழையை நூற்று நல்லாடை செய்வீரே !
விண்ணின்று எமை வானவர் காப்பார்,
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே !!
பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே !
பரத நாட்டியக் கூத்திடுவீரே !
காட்டும் வையப் பொருளின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்துடுவீரே !
நாட்டிலே அறம் கூட்டி வைப்பீரே !
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே !
தேட்டமின்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே !!
தான் கண்ட புதுமைப் பெண்ணை
பாராட்டி,
படத்தலையும் காத்தலையும்
அவர்தம் செயலாகக் கருதி,
எங்கெங்கும் காணினும் சக்தியடா
என்று முழங்கியவர் பாரதியார்.
பெண்டிர் அனைவருக்கும்
மகளிர்தின வாழ்த்துக்கள் .
யந்திரங்கள் வகுத்திடுவீரே !
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே !
கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே !
அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடுவீரே !
பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன்
பிரமதேவன் கலை இங்கு நீரே !!
மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே !
மரத்தை வெட்டி மனை செய்குவீரே !
உண்ணக் காய்கனி தந்திடுவீரே !
உழுது நன்செய்ப் பயிரிடுவீரே !
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே !
இழையை நூற்று நல்லாடை செய்வீரே !
விண்ணின்று எமை வானவர் காப்பார்,
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே !!
பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே !
பரத நாட்டியக் கூத்திடுவீரே !
காட்டும் வையப் பொருளின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்துடுவீரே !
நாட்டிலே அறம் கூட்டி வைப்பீரே !
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே !
தேட்டமின்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே !!
தான் கண்ட புதுமைப் பெண்ணை
பாராட்டி,
படத்தலையும் காத்தலையும்
அவர்தம் செயலாகக் கருதி,
எங்கெங்கும் காணினும் சக்தியடா
என்று முழங்கியவர் பாரதியார்.
பெண்டிர் அனைவருக்கும்
மகளிர்தின வாழ்த்துக்கள் .
அருமையான நிறைவான வாழ்த்துகள்..
ReplyDeleteஇனிய நன்றிகள் ஐயா..!