திருவெம்பாவை
பாடல் 3
முத்தன்ன வெண் நகையாய் !
முன் வந்து , எதிரெழுந்து ,
" எப் அத்தன் , ஆனந்தன் , அமுதன் "
என்று அள்ளூறி ,
தித்திக்க பேசுவாய் ,
வந்துன் கடை திறவாய் !
பத்துடையீர் !
ஈசன் பழ அடியீர் !!
பாங்குடையீர் !!!
புத்தடியோர் புன்மை தீர்த்து
ஆட்கொண்டார் பொல்லாதோ ?
எத்தோ ...
நின் அன்புடைமை
எல்லோம் அறியோமோ ?
சித்தம் அழகியார்
பாடாரோ நம் சிவனை !
இத்தனையும் வேண்டும்
நமக்கேலோர் எம்பாவாய் !
தோழியர் ; முத்து போன்று ஒளிரும் புன்னகையை உடையவளே !
எல்லோருக்கும் முன்பாகவே எழுந்திருந்து ,
" என் அத்தன் , ஆனந்தன் , அமுதன் " என்று
வாய் திளைக்க, இனிக்க , இனிக்க பேசுவாய் !
( என்ன ஆயிற்று உனக்கு , இன்று ? ) வந்து கதவை திற !
நாயகி : பத்து குணங்களை உடையவர்களே !
இறைவனின் அடியார்களே முதிர்ச்சி பெற்றவர்களே !
நட்புடையவர்களே !
புதியவளாகிய என்னுடைய குற்றத்தையும் நீக்கி ,
என்னையும் அடியாராக ஆக்கிக் கொண்டால் குற்றமா ?
தோழியர் : நீ இறைவன்பால் வைத்துள்ள அன்பு எமக்கு தெரியாதா
என்ன ? உள்ளம் ஒழுங்குபட இருப்பவர் நம் சிவனை
பாடாது இருப்பாரா ? இவ்வளவும் எங்களுக்கு தேவைதான் !
தொடரும் .......
No comments:
Post a Comment