திருவெம்பாவை
பாடல் 5
மால் அறியா ,
நான் முகனும் காணா மலையினை ,
நாம் போலறிவோம் என்றுள்ள
பொக்கங்களே பேசும்
பாலூறு(ம்) தேன்வாய்(ப் ) படிறீ !
கடை திறவாய் !
ஞாலமே ,
விண்ணே ,
பிறவே அறிவரியான் கோலமும் ,
நம்மை ஆட்கொண்டருளி
சீராட்டும் சீலமும் பாடி ,
" சிவனே ! சிவனே ! "
என்று ஓலமிடினும் , உணராய் !
உணராய் காண் !
ஏலக்குழலி !
பரிசேலோர் எம்பாவாய் !
தோழியர் :
" திருமாலும், நான்முகனும் காணமுடியாத மலையை
நாம் அறிவோம் என்று ( உணர்ந்தவளைப்போல )
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் ,
பாலும் , தேனும் போன்ற இனிய சொற்களை உடைய
வஞ்சகியே ! கதவைத்திற !!
இவ்வுலகமும், விண்ணுலகமும் ,
பிறவுலகங்களும் அறிவதற்கு அரிய ,
சிவபிரானின் திருக்கோலத்தையும்,
அவர் நம்மை ஆட்கொண்டு ,
நம் குற்றங்களை போக்கியருளும் பெருமையையும் பாடி,
" சிவனே ... சிவனே ! " என்று ,
நாங்கள் ஓலமிட்ட்டபோதும் ,
சற்றும் உணர்ச்சி இல்லாமல் இருக்கின்றாயே !
நீ உணர்ச்சி அடைவாய் !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே !
என்கள் தோழியே !
பதில் சொல்வாய் !
தொடரும் .............
No comments:
Post a Comment