திருவெம்பாவை
பாடல் 7
அன்னே... இவையும் சிலவோ ?
பல அமரர்க்கு உன்னற்கு
அறியான் ஒருவன் ,
இருஞ்சீரான் சின்னங்கள் கேட்ப
சிவனென்றே வாய் திறப்பாய் !
தென்னா என்னும் முன்னம்
தீ சேர் மெழுகு ஒப்பாய் !
என்னானை,
என் அரையன் , இன்னமுது
என்று எல்லோமும் சொன்னோம்
கேள் பலவேறாய் !
இன்னம் துயிலுதியோ ?
வன்னெஞ்சப் பேதையர்போல்
வாளா கிடத்தியால் என்னே துயிலின் ,
பரிசேலோர் எம்பாவாய் !!
தோழியர் : அம்மா ! இவையும் உன் குணங்களில் சிலவோ ?
பல தேவர்களின் நினைத்தலுக்கும் அரியவனான சிவனின்
சின்னங்களை கேட்டமாத்திரத்தில் , " சிவ , சிவ " என்பாய் !
" தென்னாடுடைய சிவனே " என்று ஆரம்பித்த மாத்திரத்தில் ,
தீயிலிட்ட மெழுகுபோல உருகிடுவாய் !
எம்பெருமானை. " என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே "
என்று நாங்கள் எல்லோரும் பலவிதமாய் சொல்லியும் ,
இன்னம் உறங்குகின்றாயோ ?
உறக்கத்தின் காரணமாக, வன்மையான் நெஞ்சம் கொண்டவரைப்
போல, சிறு அசைவும் இல்லாமல் இருக்கின்றாயே !
பதில் சொல்வாய் !
தொடரும்...........
பாடல் 7
அன்னே... இவையும் சிலவோ ?
பல அமரர்க்கு உன்னற்கு
அறியான் ஒருவன் ,
இருஞ்சீரான் சின்னங்கள் கேட்ப
சிவனென்றே வாய் திறப்பாய் !
தென்னா என்னும் முன்னம்
தீ சேர் மெழுகு ஒப்பாய் !
என்னானை,
என் அரையன் , இன்னமுது
என்று எல்லோமும் சொன்னோம்
கேள் பலவேறாய் !
இன்னம் துயிலுதியோ ?
வன்னெஞ்சப் பேதையர்போல்
வாளா கிடத்தியால் என்னே துயிலின் ,
பரிசேலோர் எம்பாவாய் !!
தோழியர் : அம்மா ! இவையும் உன் குணங்களில் சிலவோ ?
பல தேவர்களின் நினைத்தலுக்கும் அரியவனான சிவனின்
சின்னங்களை கேட்டமாத்திரத்தில் , " சிவ , சிவ " என்பாய் !
" தென்னாடுடைய சிவனே " என்று ஆரம்பித்த மாத்திரத்தில் ,
தீயிலிட்ட மெழுகுபோல உருகிடுவாய் !
எம்பெருமானை. " என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே "
என்று நாங்கள் எல்லோரும் பலவிதமாய் சொல்லியும் ,
இன்னம் உறங்குகின்றாயோ ?
உறக்கத்தின் காரணமாக, வன்மையான் நெஞ்சம் கொண்டவரைப்
போல, சிறு அசைவும் இல்லாமல் இருக்கின்றாயே !
பதில் சொல்வாய் !
தொடரும்...........
No comments:
Post a Comment