Saturday 27 December 2014

திருவெம்பாவை

பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் 
பழம் பொருளே !
பின்னைப் புதுமைக்கும்  பேர்த்தும் 
அப் பெற்றியனே !
உன்னைப் பிரானாகப் பெற்ற 
உன் சீரடியோம் ,
உன்னடியார் தாள் பணிவோம் !
ஆங்கவர்க்கே பாங்காவோம் !
அன்னவரே எம் கணவர் ஆவார் !
அவர் உகந்து சொன்ன பரிசே 
தொழும்பாய்  பணி செய்வோம் !
இன்ன வகையே எமக்கு 
எம்கோன்  நல்குதியேல் ,
என்ன குறையும்  இலோம் !
ஏலோர்  எம்பாவாய் !


பழமையான பொருட்களுக்கெல்லாம்  பழமையான  முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றிற்கும்  புதுமையானவனே !
உன்னைப் பிரானாகப் பெற்று, உன் அடியவர்களான நாங்கள் ,
உன் அடியவர்களையே  வணங்குவோம் !
அவர்களுக்கு நண்பர்களாவோம் !
அத்தகையவரையே , நாங்கள் திருமணம்  செய்துகொள்வோம் !
அவர்கள் சொல்லும் வகைப்படியே ,
அவர்களுக்கு அடியவராய்  பணி செய்வோம் !
இவ்வாறே எங்களுக்கு எம்பிரான்  அருள் செய்தால் ,
எங்களுக்கு  எந்த குறையும் இல்லை !



§À÷òÐõ - ÒШÁ¡É; À¡íÌ - ¿ðÒ; ÀÃ¢Í - Ó¨È; ¦¾¡ØõÒ 
- «Ê¨Á

No comments:

Post a Comment