திருவெம்பாவை
பாடல் 2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் ,
இராப்பகல் நாம் பேசும்போது எப்போதும்.
இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ ,
நேரிழையாய் ?
நேரிழையீர் !
சீசி... இவையும் சிலவோ ,
விளையாடி ஏசுமிடம் ?
ஈதோ ...
விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும்
மலர் பாதம் தந்தருள
வந்தருளும் தேசன்
சிவலோகன்
தில்லை சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு !
ஆர் யாம் ?
ஆரேலோர் எம்பாவாய் !
தொடரும் ....
தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !
போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.
No comments:
Post a Comment