Wednesday 17 December 2014


திருவெம்பாவை 

பாடல்  2

பாசம்  பரஞ்சோதிக்கு  என்பாய் , 
இராப்பகல்  நாம் பேசும்போது எப்போதும்.
இப்போதார்  அமளிக்கே  
நேசமும் வைத்தனையோ ,
நேரிழையாய் ?

நேரிழையீர் !
சீசி...  இவையும் சிலவோ ,
விளையாடி  ஏசுமிடம் ?

ஈதோ ...
விண்ணோர்கள்  ஏத்துதற்கு கூசும் 
மலர் பாதம் தந்தருள 
வந்தருளும் தேசன் 
சிவலோகன் 
தில்லை சிற்றம்பலத்துள் 
ஈசனார்க்கு அன்பு !
ஆர் யாம் ?
ஆரேலோர் எம்பாவாய் !


தொடரும் ....


தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம், 
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய். 
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ? 
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ? 
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

No comments:

Post a Comment