திருவெம்பாவை
பாடல் 6
மானே !
நீ நென்னலை ,
" நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் " என்றலும் ,
நாணாமே போன திசை பகராய் !
இன்னும் புலர்ந்தின்றோ ?
,வானே , நிலனே ,
பிறவே பிறவரியான் ,
தானே வந்து
எம்மை தலையளித்து ,
ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு ,
உன் வாய் திறவாய் !
ஊனே உருகாய் !
உனக்கே உறும் !
எமக்கும் , ஏனோர்க்கும் ,
தம் கோனை ,
பாடேலோர் எம்பாவாய் !
தோழியர் :
மானைப் போன்று அழகியவளே !
நீ நேற்று , " நாளை , நானே வந்து உங்களை எழுப்புவேன்"
என்று கூறி விட்டு, வெட்கமில்லாமல் இன்று எங்கு
போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ?
வானுலகமும், பூமியும், பிற எல்லாமும் அறிவதற்கு
அரிய சிவபெருமான் , தானே வந்து , கருணையுடன் நம்மை
ஆட்கொள்கிறான் ! சிவனின், வானென நெடிதுயர்ந்த
கழலடிகளை பாடி வந்த எமக்கு பதில் சொல்வாய் !
சிவனை , உடல் உருக தொழுவாய் !
இவ்வாறு இருப்பது உனக்குத்தான் பொருந்தும் !
எங்களுக்கும், மற்ற எல்லோருக்கும் தலைவனாய்
இருக்கும் சிவபிரானைப் பாடுவாய் !!
¦¿ýÉ¨Ä - §¿üÚ; ¾¨ÄÂÇ¢òÐ - ¸Õ¨½Üà §¿¡ì̾ø;
°ý - ¯¼ø.
பாடல் 6
மானே !
நீ நென்னலை ,
" நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் " என்றலும் ,
நாணாமே போன திசை பகராய் !
இன்னும் புலர்ந்தின்றோ ?
,வானே , நிலனே ,
பிறவே பிறவரியான் ,
தானே வந்து
எம்மை தலையளித்து ,
ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு ,
உன் வாய் திறவாய் !
ஊனே உருகாய் !
உனக்கே உறும் !
எமக்கும் , ஏனோர்க்கும் ,
தம் கோனை ,
பாடேலோர் எம்பாவாய் !
தோழியர் :
மானைப் போன்று அழகியவளே !
நீ நேற்று , " நாளை , நானே வந்து உங்களை எழுப்புவேன்"
என்று கூறி விட்டு, வெட்கமில்லாமல் இன்று எங்கு
போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ?
வானுலகமும், பூமியும், பிற எல்லாமும் அறிவதற்கு
அரிய சிவபெருமான் , தானே வந்து , கருணையுடன் நம்மை
ஆட்கொள்கிறான் ! சிவனின், வானென நெடிதுயர்ந்த
கழலடிகளை பாடி வந்த எமக்கு பதில் சொல்வாய் !
சிவனை , உடல் உருக தொழுவாய் !
இவ்வாறு இருப்பது உனக்குத்தான் பொருந்தும் !
எங்களுக்கும், மற்ற எல்லோருக்கும் தலைவனாய்
இருக்கும் சிவபிரானைப் பாடுவாய் !!
¦¿ýÉ¨Ä - §¿üÚ; ¾¨ÄÂÇ¢òÐ - ¸Õ¨½Üà §¿¡ì̾ø;
°ý - ¯¼ø.
No comments:
Post a Comment