திருப்புன்கூர் |
இறைவன் பெயர் : சிவலோகநாதர் |
இறைவி பெயர் : சௌந்தர நாயகி, சொக்கநாயகி |
வைத்தீஸ்வரன்
கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மி. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், |
மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. |
அதனுள் -
அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. |
கோயில் வரை வாகனங்கள் செல்லும். |
இவ்வாலயம்
தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
புங்க மரத்தடியின்
கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. |
திருநாளைப் போவார்
நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் |
தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு
செய்தருளிய தலம் திருப்புன்கூர். |
நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள்
செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். |
அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும். |
அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு |
தரிசனம் கொடுக்க
நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். |
எல்லா சிவன்
கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும்.
ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை |
.இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் |
ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும் |
இத்தலத்தில்
ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் |
வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும். |
கோவில்
அமைப்பு: மூவர்
பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. |
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் |
விசாலமான திறந்த
முற்றவெளி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், |
சுப்பிரமணியர்
சந்நிதியும் தலமரமும் பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும், பெரிய நந்தியையும் (சற்று விலகியுள்ளது) |
கடந்து சென்றால் உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் |
வண்ணச்சுதையில்
பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர். துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால் |
உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி.
சுந்தரவிநாயகர் சந்நிதி முதலியவை உள்ளன. |
அடுத்துள்ள
சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு -
தரிசிக்கத்தக்கது. |
அடுத்து சூரியன்
அக்கினி வழிபட்ட லிங்கங்கள். ஆறுமுகர்சந்நிதி, தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத |
முகங்களின் பெயரில்
அமைந்துள்ள லிங்கபாணங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. |
இடதுபுறம் அம்பாள்
சந்நிதி தனியாக வலம் வரும் அமைப்புடன் உள்ளது. நவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால் |
நேரே சுவாமி சந்நிதி. மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். |
இங்குள்ள சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும்.
சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். |
புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும்
கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம். |
இறைவன் கருவறை கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர், |
தட்சிணாமூர்த்தி,
இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர். பிரம்மா, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் |
ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் |
இத்தலத்து இறைவனை
வழிபட்டுப் பேறு பெற்றிருக்கின்றனர். இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அம்பாள் சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக |
ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது |
சுந்தரர்
பதிகம்: ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு |
வருகை புரிந்தனர்.
அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். |
இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் 12 வேலி நிலம் |
ஆலயத்திற்குக்
கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி |
12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார். |
இந்த வரலாற்றை
சுந்தரர் "அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த" என்று தொடங்கும் தனது பதிகத்தின் |
2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். |
வையகம் முற்றும் மாமழை மறந்து |
வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் |
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன |
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் |
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் |
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் |
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் |
செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே. |
சிவபெருமான்
திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக் கோயிலின் |
வாயில்
காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை தான் தடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை |
முழக்கும்படி
அருள்செய்தார். சுந்தரர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார். |
திரிபுர
அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன், என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார். |
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில் |
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல் |
காவ லாளர்என் றேவிய பின்னை |
ஒருவன் நீகரி காடரங் காக |
மானை நோக்கியோர் மாநடம் மகிழ |
மணிமு ழாமுழக் கவருள் செய்த |
தேவ தேவநின் திருவடி யடைந்தேன் |
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே |
இத்தலத்திலுள்ள
நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. இத்தலத்தில் சுந்தரர் பதிகத்தில் கூறியபடி |
நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் |
பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதைக் காணலாம். |
( திருச்சிற்றம்பலம் ) |
Saturday 5 March 2016
திருவதிகை |
இறைவன் பெயர் : அதிகை வீரட்டேஸ்வரர் |
இறைவி பெயர் : திரிபுரசுந்தரி |
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் |
மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் |
தல புராண வரலாறு: |
சிவபெருமானின்
வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் |
திரிபுர சம்ஹாரம் செய்தார்.
வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே |
பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். |
இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் |
செல்ல வசதியாக
சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். |
தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் |
சிவபெருமானிடம்
முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, |
நான்கு
வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் |
போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் |
சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. |
இறைவன் இவ்வாறு
ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை |
என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும் |
,சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும்,
சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் |
ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். |
அவர் சிரித்த
உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை. |
திருநாவுக்கரசர்: |
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு |
மகளாக திலவதியும்,
மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் |
ஈடுபாடு கொண்டு சமண
சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட |
கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து |
இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.
தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார |
அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். |
இந்நிலையில் தம்பி
தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்க முடியாமல் |
தம்பி
துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள |
திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் |
கூற்றாயின வாறு விலக்ககிலீர் |
கொடுமைபல செய்தன் நான் அறியேன் |
ஏற்றாய அடிக்கே இரவும் பகலும் |
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் |
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே |
குடரோடு துடக்கி முடக்கியிட |
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில |
வீரட்டானத் துறை அம்மானே |
என்ற பாடலுடன்
தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு |
தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் |
சைவ
சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் |
பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும். |
கோவில் அமைப்பு: |
கோவில் சுமார் 7
ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. |
கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. |
இதைத் திருநீற்று
மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், |
இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.
கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் |
108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில்
பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். |
வலப்பக்கத்தில் சற்று உயரத்தில்
திரிபுமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. |
அதன் கீழ் கஜசம்ஹாரகோலம். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தவுடன் |
உட்புறத்தில்
மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், |
வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. |
2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. |
5 நிலைகளையுடைய
இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. |
ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். |
2வது சுற்றின் தென்புறத்தில்
திருநாவுக்கரசருக்கும், அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. |
அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன.
அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது |
. அம்பிகையின் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். |
விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் நம் கருத்தைக் கவரும். |
இவைகளில் பிரச்சித்தமான வடிவம் திரிபுராந்தகர் சிற்பம். 12 திருக்கரங்கள், சூலம் ஏந்திய கை ஒன்று, |
வில்லேந்திய கை ஒன்று, ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் . |
வில் வளைத்து நிற்கிறார் |
3வது சுற்றில் தான்
மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் |
16
பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் |
பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
தருகிறது. மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. |
இறைவன் கருவறை விமானம் நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.
கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் |
இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர். |
உள் சுற்றின்
தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காணவேண்டிய ஒன்று. இதுவம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. |
இத்தகைய
பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது. மூன்று திக்குகளை நோக்கி நானகு முகங்கள் உள்ளன. |
ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம். எனவே பஞ்சமுக லிங்கம் என்று கூறுவர். |
இது
ஒரு அரிய தரிசனம் ஆகும். வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. |
யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது. |
இத்தலத்து
முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. |
இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார் |
. உற்சவரும் தன் இரு தேவியருடன் சணமுகப் பெருமானாகக் காட்சி தருகிறார். |
திருநாவக்கரசர்
உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் .தங்கி |
இத்தலப்
பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து |
சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க |
,
சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் |
என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார்.
இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றதும், |
பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் |
சமணபள்ளிகளை
இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம் |
திருவெண்ணைநல்லூர் |
இறைவன் பெயர் :
தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர் |
இறைவி பெயர் : வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை |
திருக்கோவிலூரில்
இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் |
திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. |
திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். |
இவ்வாலயம்
தினந்தோறும் காலை 6-00 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5-00 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
ஆலய தொடர்புக்கு: 93456 60711 |
இத்தலத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். |
கிழவராக வந்து , சிவா லிங்கத்தில் ஐக்கியமாகும் முன் , கருவறை வாசலில் |
சிவபெருமான் கழற்றி வைத்த பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது. |
சுந்தரருக்கும்,
கிழவராக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால், பஞ்சாயத்து நடத்தப்பட்ட மண்டபம் இன்றும் உள்ளது. |
பரமன் சாய்ந்திருந்த தூண் இன்றும் வெதுவெதுப்பாக உள்ளது. |
அருச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது. |
தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் உள்ளது. |
மஹாவிஷ்ணு பூஜித்த சங்கர லிங்கம் உள்ளது. |
தன்
மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு , முருகன் மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம் இது. |
தருமனும், பாஞ்சாலியும் தனித்திருந்ததை பார்த்ததால் உண்டான பாவத்தை , |
அருச்சுனன், இங்கு இறைவனை நோக்கி தவமிருந்து போக்கிக் கொண்டான். |
கருவுற்ற பசுவை வேள்வி செய்த
பாவத்தை, வித கோத்திரர் எனும் அந்தணர் , இங்கு வந்து அருள்துறை தீர்த்தத்தில் நீராடி, |
இறைவனை பாடி பணிந்து போக்கிக் கொண்டார். |
மகிஷனை
வதம் செய்த ஆக்ரோஷம் தீர நதியில் குளித்து , மங்களம் பெற்றதால் , அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர் . |
அம்பிகை , நான்கு திருக்கரங்களுடன் , நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். |
சங்கநிதி,
பதும நிதி, ஸ்ரீ சக்கரத்துடனும், சிம்ம வாகனத்துடனும் இருக்கும் |
அம்பிகையை
தரிசனம் செய்வது என்பது, முற்பிறவியின் பயனே ! |
தல புராணம் |
திருமண
நாளன்று, திரு நாவலூரில் திருமணக்கோலத்தில் இருந்த சுந்தரரை, ஈசன் தடுத்து ஆட்கொள்கிறார். |
சுத்தரருக்கும்,
சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் இதுவே. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர், |
" பித்தா பிறை சூடி " என்ற புகழ்பெற்ற பாடலை பாடிய தலம் இதுவே. |
தாருகாவனத்து
முனிவர்கள் இறைவனை கொல்ல , வேள்வியில் தோன்றிய யானையை ஏவினர். |
அவர்கள் எண்ணம்
ஈடேரவில்லை. அவர்கள் ஆணவம் அழிந்து, இத்தலத்தில், இறைவனை நோக்கி தவம் புரிந்தனர். |
இறைவனும்,
அவர்களின் தவறை மன்னித்து அருள் புரிந்தார். எனவே இத்தலம் அருள் துறை என பெயர் பெற்றது. |
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா |
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை |
வைத்தாய் - பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் |
அத்தா உனக் காளாய் இனி அல்லேன் எனலாமே. |
திருப்புகழ் |
தனதன தத்தன தனதன தத்தன |
தனதன தத்தன தனதன தத்தன |
தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான |
......... பாடல் ......... |
பலபல தத்துவ மதனையெ ரித்திருள் |
பரையர ணப்படர் வடவன லுக்கிரை |
படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் |
பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு |
பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு |
பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே |
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத |
வொலிமலி யத்திரு நடனமி யற்றிய |
கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் |
கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ |
டனகச கத்துவம் வருதலு மிப்படி |
கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே |
புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை |
நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர |
புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே |
புனமலை யிற்குற மகளய லுற்றொரு |
கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய |
புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா |
மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை |
கிழவிய றச்சுக குமரித கப்பனை |
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே |
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய |
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத |
மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே. |
......... சொல் விளக்கம் ......... |
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணப் படர் |
வட அனலுக்கு இரை பட ... பலபல தத்துவ சேஷ்டைகளையும், |
அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை |
வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி, |
நடநச் சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள இடம் மேவி பவனம் |
ஒழித்து இரு வழியை அடைத்து ... நடன ஜோதியை பரந்த ஆகாச |
வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில் |
சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு |
வழிகளையும் மாற்றி அடைத்து, |
ஒரு பருதி வழிப் படவிடல் ககனத்தொடு பவுரி கொ(ள்)ளச் |
சிவமயம் என முற்றிய பரம் ஊடே ... ஒப்பற்ற சூரிய ஜோதியின் |
பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ |
மயமாய் முற்றும் பரந்த பர வெளியில், |
திருவெண்ணைநல்லூர் ( 5 ) |
கலகல எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத ஒலி மலியத் திரு |
நடனம் இயற்றிய கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல் |
அதில் மூழ்கி ... கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின் |
ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த |
சுகானந்தக் கடலில் முழுகி, |
கவுரி மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக |
சகத்துவம் வருதலும் இப்படி கழிய நலக்கு இனி நிறம் என் |
நவிற்று உடல் அருள்வாயே ... பார்வதி தேவி மின்னலை ஒத்த |
சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற |
உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு |
கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை |
எனக்குத் தந்தருளுக. |
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் |
கழுக்களில் உற விடு சித்திர புலவன் எனச் சில விருது |
படைத்திடும் இளையோனே ... இழிந்தவர்களும், திருநீற்றை |
விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை |
வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை |
கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய |
(திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே, |
புன மலையில் குற மகள் அயல் உற்று ஒரு கிழவன் எனச் |
சுனை தனில் அவள் ஐப் புய(ம்) புளகிதம் உற்று இபம் வர |
அணையப் புணர் மணி மார்பா ... தினைப் புனம் உள்ள வள்ளி |
மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன் |
என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை |
புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய |
மார்பனே, |
மலை சிலை பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி அறச் சுக |
குமரி தகப்பனை மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று |
அருள் முருகோனே ... மேரு மலையை வில்லாகப் பிடித்த |
சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள், |
தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு |
வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷாயாணி என்ற) உமாதேவி |
பெற்றருளிய முருகோனே, |
மகிழ் பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய |
திருவெ(ண்)ணெய் நல் பதி புகழ் பெற அற்புத மயிலின் |
மிசைக் கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே. ... மகிழ்ச்சி |
தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த |
திருவெண்ணெய்நல்லூர்** என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க |
அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும் |
பெருமாளே. |
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. |
அதன் சுருக்கம் வருமாறு: |
நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு |
ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று |
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், |
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம |
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். |
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் |
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த |
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, |
ஆதித்த,
சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,சுழுமுனை முதலியன) உள்ளன. |
'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். |
'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். |
சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. |
'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் |
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன. |
சுவாச
நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். |
( திருச்சிற்றம்பலம் ) |
Saturday 13 February 2016
வீரட்டேஸ்வரர்
கோவில், திருக்கோவிலூர் |
இறைவன் பெயர் : வீரட்டேஸ்வரர் |
இறைவி பெயர் : சிவானந்தவல்லி |
இவ்வாலயம்
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் |
இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
ஆலய தொடர்புக்கு: 93456 60711 |
இத்தலத்தில்,
இறைவன் சுயம்பு மூர்த்தியாக, பைரவ சொரூபமாக அருள்பாலிக்கின்றார். |
இது சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் |
திரிபுர பைரவி உற்பத்தி ஸ்தலம் . |
சப்த மாதாக்கள் உற்பத்தியான ஸ்தலம். |
64 பைரவர்கள் , 64 பைரவிகள் உற்பத்தியான ஸ்தலம் . |
தல விருட்சம் : சரக் கொன்றை . |
சிவபெருமான் வீரச்
செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், |
ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று |
சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம், |
தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், |
திருமுறை கண்ட
சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல |
பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். |
தல வரலாறு: |
பார்வதி,
சிவபெருமானின் இரு கண்களை ( சூரியன், சந்திரன் ) விளையாட்டாக மூடியதால், எங்கும் இருள் சூழ்கிறது. |
அந்த
இருளே , அந்தகாசுரன் என்னும் அரக்கனாக உருவெடுக்கிறது. அந்தகாசுரனை அழிக்க சிவபெருமான் யுத்தம் புரியும்போது, |
அசுரனின் தலையில் , கதையால் ஓங்கி அடிக்கிறார். அசுரனின் |
தலையிலிருந்து
பீரிட்ட இரத்தம் பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் |
உற்பத்தி ஆக, யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. |
அசுரர்களின்
உற்பத்தியை தடுக்க, உமையவள், காளி சொரூபம் கொண்டு, அந்தகாசூரனின் தலையிலிருந்து விழும் இரத்தத் துளிகளை , |
கையில் கபாலம் கொண்டு எந்துகிறாள். |
அசுரனின்
தலையிலிருந்து வெளிப்பட்ட ரத்தங்கள், ரத்தக் கோடுகளாகி , எட்டத் திசையிலும் , குறுக்கும் |
நெடுக்குமாக 8 , 8
ஆக, 64 ( சதுரங்கள் ) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில் , சிவபெருமான் , தன் அருளால் |
64 பைரவர்களை
உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருத்தி, அசுர உற்பத்தியை தடுத்து, அந்தகாசுரனை வதம் |
செய்து,
தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார். ( இதுவே, இக்காலத்தில் வாஸ்து சாந்தி என்று கிரக பிரவேச |
காலங்களிலும்,
வீடு கட்டும் காலங்களிலும் செய்யப்படும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தியாகும் ) |
இவ்வாறு , அந்தகனை அழித்து , அஞ்ஞானத்தை நீக்கி , மெய்ஞானத்தை அருளியவர் , |
வீரட்டானேசுவரர் ஆவார். |
வீரட்டேஸ்வரர்
கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் |
மேற்கு நோக்கி
அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் |
அமைந்துள்ளது.
இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது |
சுவாமி கோவில்
கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. |
முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் |
இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் |
சந்நிதி உள்ளது.
ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் |
குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு |
அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக |
பூஜை செய்ய,
விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை |
வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து |
விநாயகர்
அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் |
கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். |
இவ்வாறு ஒளவையைத்
தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக |
இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத |
ஆறுமுகப்பெருமான்
சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன. |
திருப்புகழ்
தலம்: திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் |
தனது திருப்புகழில்
பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் |
12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து |
அருள்பாலிக்கின்றார். |
தலமூர்த்தியாகிய
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் |
உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் திருமேனிகள் |
வீரட்டேஸ்வரர்
சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் |
துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் |
காட்சியளிக்கின்ற
நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன |
அம்பாள் கோயில்
தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக |
விநாயகரும்
சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் |
அபயவரதத்துடன்
கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். |
விநாயகர் அகவல் |
சீதக் களபச் செந்தா மரைப்பூம் |
பாதச் சிலம்பு பலவிசை பாடப் |
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் |
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் |
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) |
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் |
அஞ்சு கரமும் அங்குச பாசமும் |
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் |
நான்ற வாயும் நாலிரு புயமும் |
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) |
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் |
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் |
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான |
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே! |
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) |
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் |
தாயா யெனக்குத் தானெழுந் தருளி |
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் |
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் |
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) |
குருவடி வாகிக் குவலயந் தன்னில் |
திருவடி வைத்துத் திறமிது பொருளென |
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் |
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே |
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) |
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி |
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் |
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் |
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) |
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30) |
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி |
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே |
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் |
ஐம்புலக் கதவை குழாத்துடன் காட்டி |
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35) |
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே |
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் |
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி |
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் |
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40) |
குண்டலி யதனிற் கூடிய அசபை |
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து |
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் |
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே |
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45) |
குமுத சகாயன் குணத்தையும் கூறி |
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் |
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் |
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் |
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50) |
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் |
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் |
கருத்தினில் கபால வாயில் காட்டி |
இருத்தி முத்தி யினிதெனக் கருளி |
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55) |
முன்னை வினையின் முதலைக் களைந்து |
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் |
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) |
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன |
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60) |
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) |
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் |
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் |
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி |
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65) |
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி |
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் |
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி |
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை |
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70) |
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட |
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) |
( திருச்சிற்றம்பலம் ) |
Subscribe to:
Posts (Atom)