Tuesday 26 December 2017



ஈங்கோய்  மலை 

திரு ஈங்கோய் மலை எனப்படும் இந்த தலம்
திருச்சி மாவட்டத்தில், திருச்சியில் இருந்து 
சுமார் 50 கி.மீ  தொலைவிலும், முசிறியில் 
இருந்து நாமக்கல் செல்லும் பாதையில் 6 கி. மீ 
தொலைவிலும் உள்ளது 

மூவர் பெருமக்களால் பாடப்பெற்ற இந்த தலம் 
காவிரியின் வடகரையிலுள்ள 63 வது தலமாகும் .

Google வரைபடத்தில், NC063 Maragathaleswara Swamy Temple 
என குறிப்பிடப்பட்டுள்ள இந்த தலத்தின் அமைவிடத்தைக் 
காண இங்கே சொடுக்கவும் 

இம்மலையின் அடிவாரத்தில் , சித்தர் போகரின் 
ஆலயமும், கைலாச நாதர் ஆலயமும் உள்ளது.
இவைகளின் இருப்பிடத்தைக் காண 
இங்கே சொடுக்கவும் 

இறைவன்  : மரகதாலீஸ்வரர் 
இறைவி      : மரகதாம்பிகை, மரகதவல்லி 

இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக 
அருள்பாலிக்கின்றார்.

பிருங்கி முனிவர் அம்மனை வழிபடாது, ஈசனை 
மட்டுமே வணங்கி வந்தார், இறைவன் வழிபாட்டில் 
அம்மனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் 
என்ற காரணத்தினால், இறைவனின் திருவிளையாடலின் 
மூலமாக இங்கு வந்த உமையவள், தனக்கு 
இறைவனின் உடலில் இடதுபாகத்தைத் தரும்படி 
தவமிருக்கிறாள். இறைவனும் காட்சி  அளித்து ,
இடதுபாகத்தைத் தருவதாக உறுதி அளிக்கின்றார்.
அம்மனின் சக்திபீடங்களில், இது சாயா சக்திபீடம் 
என கருதப்படுகிறது.

தென்திசைக்கு வந்த அகத்தியர், இந்த தலத்திற்கு 
வந்தபோது, ஆலயம் மூடப்பட்டிருந்ததால் , தனக்கு 
காட்சி அளிக்கும்படி இறைவனை வேண்டுகிறார். 
அப்போது ' அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் 
நீராடிவிட்டு வந்தால் தன்னை தரிசிக்கலாம் என 
அசரீரியாய், இறைவன் உரைக்கின்றார். 

அடிவாரம் வந்து தீர்த்தத்தில் நீராடியவுடன் " ஈ " வடிவம் 
பெற்ற அகத்தியர், மலை மேலே சென்று, மூடப்பட்டிருந்த 
கதவின் சாவித்துவாராம் வழியே உள்ளே சென்று 
இறைவனை தரிசித்துத் திரும்புகிறார். 

அகத்தியர் ஈ வடிவத்தில் இறைவனை வழிபட்டதால் 
இத்தலம் ஈங்கோய் மலை என்றழைக்கப்படுகிறது. 
இறைவனுக்கு ஈங்கோய் நாதர் என்ற பெயரும் உண்டு.

இறைவனின் நண்பரான சுந்தரர் பொன் வேண்டி 
இந்த தளத்திற்கு வந்தபோது, அவருடன் விளையாட 
எண்ணிய இறைவன், புளிய மரத்தில் ஒளிந்து கொள்கிறார்.
எவ்வளவு வேண்டியும் காட்சி அளிக்காத இறைவன், 
தந்கத்தினாலான ஒரு புளியம்பழத்தை  அருளுகிறார்,
சுந்தரர் அதை எடுத்தவுடன், அதுவும் மறைந்துவிடுகிறது. 
விரக்தி அடைந்த சுந்தரர், தனக்கு கிடைக்காத புளி 
யாருக்கும் கிடைக்கவேண்டாம் என சபித்துவிட்டு 
திரும்பிவிடுகின்றார்.

இந்த ஆலயத்தின் தல விருக்ஷம் புளியமரம், ஆனால் 
இப்னு புளியமரம் இல்லை.

சிவராத்ரியின்போது, மூன்று நாட்கள் சூரிய ஒளி 
இறைவனின் மீது விழும்போது, லிங்கத்தின் நிறம் மாறி காட்சி அளிக்குமாம்.

தீபாராதனையின் போது, லிங்கத்தில் ஜோதி 
ஜொலிப்பதைக் காணலாம்.

கோஷ்டத்தில் ஒரு தக்ஷிணாமூர்த்தி, 
விமானத்தில் வினை தக்ஷிணாமூர்த்தி ,
கால் மாறி அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி  
என வித்தியாசமான உருவங்களில் 
தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

அம்பாள் சன்னதி கோஷ்டத்தில்,
மகிஷாசுரனின் தலைமேல் நின்ற 
கோலத்தில் ஒரு துர்க்கையையும்,
சாந்த ஸ்வரூபிணியாக 
மற்றொரு துர்க்கையையும் 
தரிசிக்கலாம்.

500 படிகள் ஏறிச்சென்று இறைவனை 
தரிசிக்க வேண்டும்.:

நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 9.00 முதல் மாலை 6.00வரை.

ஆலயத்து தோற்றங்களில் சில :




மலை அடிவாரத்தில் உள்ள சித்தர் போகரின் 
ஆலய தோற்றம் 

கைலாச நாதர் ஆலயத்தோற்றம் 



படங்கள் உதவி : Google Maps 




 தொட்டியம் 

தொட்டியம் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
முசிறியில் இருந்து 14 கி.மீ தொலைவிலும்,
திருச்சியில் இருந்து சுமார் 57 கி,மீ  தொலைவிலும்
உள்ளது.
அதன் அவைவிடத்தைக் காண இங்கே சொடுக்கவும்
https://www.google.co.in/maps/@10.9201272,78.5218805,11.75z

இவ்வூரில் உள்ள சிவன் கோவிலின் இருப்பிடத்தைக்
காண இங்கே சொடுக்கவும்
https://www.google.co.in/maps/@10.9867978,78.3382683,15.75z

கைலாய நாதன் திரிபுர சம்ஹாரம் செய்யும் பொருட்டு
செல்லும்போது இந்த தலத்தில் நான்முகன் ஹோமம்
செய்த அக்னி குண்டத்தில் எழுந்தருளி நர்த்தனம்
செய்ததாக ஐதீகம்

இறைவன் : அனலாடீஸ்வரர்
இறைவி     : திரிபுர சுந்தரி


இந்த ஆலயத்தின் சில புகைப்படங்கள் :



புகைப்படங்கள் : Google  Maps  நன்றி










Saturday 23 December 2017


சுகவனேஸ்வரர் ஆலயம் 

சேலம் 

சேலம் நகரின் மையப்பகுதியில்  அமைந்துள்ளது 
சுகவனேஸ்வரர் ஆலயம். 

ஆலயத்தின் அமைவிடத்தைக் காண 
இங்கே சுடுக்கவும்.




இறைவன்:  சுகவனேஸ்வரர்
இறைவி    : ஸ்வர்ணாம்பிகை 

ஆலயம் திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 முதல் 12.00 வரை 
மாலை 4.00 முதல் 8.30வரை 

முல லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். 
லிங்கத்தின் முடியில் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது.

இது  திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகும்.

இங்குள்ள விகடசக்கர விநாயகரை வழிபட்டால் ,
குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய " பாலாரிஷ்டம் "
தொல்லைகள் நீங்கும்.

தல வரலாறு :

பிரமன் தன் படைப்பில் ஒவ்வொன்றும் எவ்வாறு 
வித்தியாசமாக இருக்கிறது என்ற ரகசியத்தை சில 
முனிவர்களுக்குச் சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த 
சுகர் எனும் முனிவர், அந்த ரகசியத்தை சரஸ்வதி தேவியிடம் 
கூறிவிடுகிறார். இதை அறிந்த பிரம்மா, சுக முனிவரை 
கிளியாக மாறும்படி சபித்துவிடுகிறார்.

சுக முனிவர் சாப விமோசனம் வேண்ட, பிரமனும்,
இந்த பகுதியில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபாட்டு 
வந்தால், தகுந்த நேரத்தில் சாப விமோசனம் கிடைக்கும் 
என்று அருளுகிறார். 

கிளி வடிவில் இங்கு வந்த சுக முனிவர், அங்கிருந்த 
மற்ற கிளைகளுடன் சேர்ந்துகொண்டு, ஒரு புற்றுக்குள் 
சுயம்பு வடிவில் இருந்த சிவனை வழிபட்டுக்கொண்டிருக்கும்  வேளையில், அங்கு வந்த 
வேடன் ஒருவன், புற்றின் அருகே கூட்டமாய் இருந்த 
கிளிகளை விரட்ட , கிளிகள் யாவும் புற்றின் மீது 
பதுங்கின. கோபம் கொண்ட வேடன் , கிளிகளை விரட்ட,
புற்றை வெட்டும்போது, சுக முனிவரைத் தவிர மற்ற 
கிளிகள் எல்லாம் மாண்டன. 

சுக முனிவர், இறைவன் மீது வெட்டுப்படாமல் இருக்க,
சுயம்புவின் முடிமேல் அமர்ந்து சிறகை விரித்துக் காக்க,
வேடன் மறுபடியும் தன வாளை வீசுகிறான். வீசப்பட்ட 
வாள் , கிளையை வெட்டியது மட்டுமல்லாமல், லிங்க த்தையும்                      பதம்  பார்க்க, வெட்டுப்பட்ட லிங்கத்தில் இருந்து இரத்தம் 
பீறிட, இறைவன் வெளிப்பட்டு சுக முனிவருக்கு சாப 
விமோசனம் அருளுகிறார்.

சேராமானுக்கும், ஆதிசேஷனுக்கும் இறைவன் 
தரிசனம் தந்த தலம் .

நவக்கிரகங்களில், ராகுவும் செவ்வாயும் இடம் மாறி 
உள்ளதால், இது ஒரு சிறந்த பரிகாரத் தலம்.

ஒரு பக்கம் சாய்வாக இருக்கும் லிங்கத்தின் முடியில், 
வேடனால் வெட்டுப்பட்ட தழும்பு உள்ளது, 

ஆவுடையார் பிற்பாகம் இரண்டு பிரிவாகவும், 
விஷ்யு பாகம், சோமசுந்தரம் ஒரே பாகமாக 
சேர்க்கப்பட்டுள்ளது. இது மற்ற சிவ தலங்களில் 
காண முடியாத ஒன்று.


நன்றி:
ஆலய பட உதவி : Google  Maps 





2, கைலாசநாதர் ஆலயம் 

கைலாச நாதர் ஆலயம் , சுகவனேஸ்வரர் 
ஆலயத்தில் இருந்து சுமார் 1.2 கி. மீ. 
தூரத்தில் அமைந்துள்ளது. 

இவ்வாலயத்திற்கு செல்லும் வழியினைக் 
காண இங்கே சொடுக்கவும்.


Google Map  வெளியிடப்பட்டுள்ள  இவ்வாலயத்தின் 
தோற்றங்களில் சில உங்கள் பார்வைக்கு :



நன்றி : Google Maps 




Wednesday 20 December 2017

தாராமங்கலம்
ஓமலூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும்,
சேலத்தில் இருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும்
உள்ளது

இங்கு, இளமீசர் ஆலயமும், கைலாச நாதர் ஆலயமும்
உள்ளது.
இந்த ஊர் இருக்குமிடத்தைக்காண இங்கே சொடுக்கவும்

தாராமங்கலத்தில் ஆலயங்கள் அமைந்திருக்கும் இடத்தைக்காண
இங்கே சொடுக்கவும்.


1. இளமீசர் ஆலயம் :
சுமார் 500 வருடங்கள் பழமையான ஆலயம்.
இறைவன் : இளமீசர்
இறைவி : தையல்நாயகி
காலை 6.00 – 1.00 ; மாலை 4.00 – 8.00
பிரகாரத்தில் , பால வித்யா கணபதி,
தனி சன்னதியில் அருள்பாலிகின்றார்
மஹாவிஷ்ணு, தன் தங்கையான சிவகாமசுந்தரியை
இந்த தலத்தில் சிவனுக்கு திருமணம் செய்து
கொடுத்ததாக ஐதீகம்






2. கைலாச நாதர் ஆலயம்
சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்ததாகக் கருதப்படும்
இக்கோவில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
மேற்கு பார்த்த சிவன் கோவில்.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி  : சிவகாம சுந்தரி
தலத்தின் கீழ் பகுதியில் பாதாள லிங்கம் உள்ளது.
3 தலை, 3 கால்களுடன் ஜுரஹரேஸ்வரர்
காட்சி அளிக்கின்றார்.
எண்கோண வடிவில் உள்ள தெப்பக்குளம் உள்ளது.
தனித்தனி சன்னதிகளில்,முருகனும், அவிநாசியப்பரும்
எழுந்தருளியுள்ளனர்.
மாசி 9,10,11 ஆகிய தேதிகளில், சூரிய ஓளி, நந்தியின்
கொம்புகளின் இடையே சென்று சிவலிங்கத்தின் மீது
3ஆம் பிறை போல் விழுகின்றது.




படங்கள் உதவி : google  Maps  நன்றி !


Thursday 2 November 2017



SURYA KUND
This was a Hindu Temple constructed during Chalukyas period (AD 1026-1027). Tajmahal is nothing compared to this great temple.
This marvelous structure is situated at Modara Village in Mehasana District of Gujarat.
This is constructed at the Bank of Pushpavathi River by the then Chalukyas King Bhima 1.
Now no ritual performance of Pooja or prayer happening at this place and this structure is considered as a Monument by government.
Have you ever heard about this archeological importance structure and we never get such information because it was a Hindu Temple and it is in India. Please see the structure below





















Thanks To : Shri Kumar Mohan 

Monday 6 March 2017


கடலாடி  2

கடலாடி வன்னீஸ்வரர் கோவிலில் இருந்து வந்த வழியே சிறிது தூரம் சென்றால், கரைகண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். இந்த சாலை புதிதாக அமைக்கப்பெற்றிருப்பதால், சிறிது  கரடு முரடாகவே உள்ளது. கூகுள் வரைபடத்திலும்  காண முடியாது. அருகில் உள்ளவர்களை , கரை கண்டீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதை என விசாரித்துக்கொள்ள வேண்டும். 

வயல்களின் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் பாதை. வாகனத்தில் இருந்து இறங்கி,  சிறிது தூரம் நடக்கவும் வேண்டியிருக்கும் .

மிக மிக பழமையான கோவில்.  
ஆறுமுகனின் திருவடி பட்ட இடம்.
பாவங்கள் கரைந்த இடம். 


செய்யாரின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம்.
இறைவன் :  கரைகண்டீஸ்வரர் 
இறைவி     :  பிருஹந்நாயகி 



நன்றி : Google Maps 





எமது  அடுத்த பயணம், செய்யாற்றின் வட கரையில் உள்ள காஞ்சி எனும் திருத்தலத்தை  நோக்கி..........




கடலாடி 

வாசுதேவன்பட்டு  கோவிலில் இருந்து சுமார் 14 km தொலைவில் உள்ள ஊர் ,
கடலாடி.  


சாலை ஓரத்திலேயே அமைந்திருக்கும், இந்த ஊரில், இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. ஒன்று, ஊரின் உள்ளே  அமைந்துள்ளது.

இறைவன்   :  வன்னிஸ்வரர் 
இறைவி       :  காமாட்சி  









நன்றி : google Maps 




எங்களின்  அடுத்த பயணம், 
இந்த ஊரின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் 
கரைகண்டீஸ்வரர்  ஆலயத்தை நோக்கி......






வாசுதேவன்பட்டு 


வாசுதேவன்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்.
செய்யாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. செங்கத்தில் இருந்து போளுர்  செல்லும் சாலையில் சுமார் 24 km தூரத்தில் உள்ளது. இந்த சிற்றுரில் அப்படி என்னதான் விஷேசம் ?

அம்பிகையின் பாதம் பதிந்த இடம் என்பதே விஷேசமல்லவா?

அம்பிகை இங்கு வரக் காரணம், ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு.

காஞ்சிபுரத்தில், தவமிருந்து இறைவனை அடைந்த காமாட்சி, இறைவனிடம் இடப்பாகம் வேண்டுகிறாள். மனமிரங்கிய இறைவனும், அம்பிகையை திருவண்ணாமலை வர பணிக்கிறார். திருவண்ணாமலை நோக்கி பயணிக்கும் அம்பிகை , வாழைப்பந்தல் எனும் இடத்தில் தங்க நேரிடுகிறது. அங்கு இறைவனை பூஜிப்பதற்காக தண்ணீர் தேவைப்படுகிறது. உடன் வந்த முருகனை குறிப்பாக நோக்குகிறாள், அம்பிகை. குறிப்பறிந்த வேலவனும், மேற்கு நோக்கி வேலை எறிந்து,
ஒரு ஆற்றை உருவாக்குகிறார். சேயால் உருவாக்கப்பட்ட ஆறு சேயாறு. பின்னர் மருவி செய்யாறு ஆகிவிட்டது. 

ஆற்றில் வெள்ளம் பருகிவர, தண்ணீரின் நிறம் மாறுபடுகின்றது. காரணத்தை ஆராய்கிறான், வேலவன். வேலை எரிந்து, மலையைப் பிளந்த இடத்தில், தவம் செய்துகொண்டிருந்த ஏழு முனிவர்களின் மரணமே இந்த நிறமாற்றத்திற்குக் காரணம் என்பதை உணர்கிறான், வேலவன். 

இதனால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்குவதற்காக, சேயாற்றின் வடகரையில், ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து , இறைவனை வழிபாட்டு, தன தோஷத்தைக் கரைத்துக் கொள்கிறான், வேலவன். 

முருகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபடப்பட்ட ஏழு சிவலிங்கங்களும், கரைகண்டீஸ்வரர் என்ற பெயருடன் விளங்குகின்றது. 

முனிவர்களின் இறப்புக்கு, தானும் ஒரு காரணம் என்று கருதிய உமையவள், சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து தன் பாவங்களையும் போக்கிக்கொள்கிறாள், உமையவள். 

தாயும், சேயும் வணங்கிய இறைனை தரிசிப்பதுதான், எங்கள் குழுவின் நோக்கம்.

இந்த தளங்கள் எல்லாம், சிற்றுர்களில் சரியான கவனிப்பின்றி இருப்பதால், இறைவனை தரிசிக்க சிவராத்திரி தினத்தைத் தேர்ந்தெடுத்தோம், கோவிலை சத்தம் செய்வதற்காகவாது கோவில் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை..

இந்த ஊரில், நாங்கள் சென்றபோது, கோவில் மூடி  இருந்தாலும்,  அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது, அவர்கள் உடனடியாக,  எங்களின்  தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தனர். 

செய்யாரின் தென்கரையில், அம்பிகை வழிபட்ட முதல் தலம் , வாசுதேவன்பாட்டு.


இறைவன்  :  ஆட்கொண்டீஸ்வரர் 
இறைவி      :  சவுந்தர்யநாயகி 

நன்றி : google  Maps  




எங்களின்  அடுத்த பயணம் கடலாடி என்ற தலத்தை நோக்கி....



செங்கம் 


24/02/2017, மகாசிவராத்திரியன்று, நானும், எனது நண்பர்களும் சிவாலயங்களை தரிசிக்க, முதலில் சென்றடைந்த தலம் செங்கம். 

திருவண்ணாமலை - பெங்களூர் சாலையில், திருவண்ணாமலையில் இருந்து சுமார் 35 km தொலைவில் உள்ளது. மிகப் பழமையான சிவாலயம். மூவர் பெருமக்களில் ஒருவரான திருநாவுக்கரசரால்  தேவாரத்தில் குறிப்பிடப்பட்டு, வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளிபுத்தூர்
வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி
விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருட்டுறை தண் பெண்ணாகடம்
பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும்
கயிலாய நாதனையே காணலாமே.


சிறு வாகனம் என்றால் ஆலயம் வரை செல்லலாம். 





நன்றி ; Google Maps

Add caption

அடுத்ததாக எங்கள் பயணம் வாசுதேவன்பட்டு என்ற சிற்றுரை நோக்கி........

அடுத்ததாக