Saturday 18 January 2014

அபிராமி அந்தாதி. ( 1 )

அபிராமி  அந்தாதி.


மாணிக்கவாசகப்  பெருமான்  தன்னுடைய சிவபுராணத்தை  முடிக்கும்போது

"  சொல்லிய  பாட்டின் 
           பொருளுணர்ந்து  சொல்லுவார் 
  செல்வர்  சிவபுரத்தின் 
           உள்ளார்  சிவனடிக்கீழ் 
  பல்லோரும்  ஏத்தப் 
           பணிந்து    " 
என்று  பாடுகிறார்.

அபிராமி அந்தாதியில்  உள்ள  பாடல்களை  அதன் பொருள்  உணர்ந்து
பாராயணம்  செய்தால், சகல  நன்மைகளும்  கிடைக்கும்  என்பது  உறுதி .


மாணிக்க வாசகர், அதே சிவபுராணத்தில்,

" அவன் அருளாலே  அவன் தாள்  வணங்கி..."

என்று பாடுகிறார்.  அபிராமி அந்தாதியில்  உள்ள  பாடல்களைப்   பாராயணம்  செய்யவும்  அவள்  அருள்  வேண்டும்.  அபிராமியின்  அருள்  பெற்று,  பாடல்களின்  பொருள்  உணர்ந்து  பாராயணம்  செய்திடுவீர்!

பிள்ளையார்  காப்பு.

தாரமர்  கொன்றையும் 
                 சென்பகமாலையும்  சாத்தும்

தில்லை  ஊரர்  தம் பாகத்து  
                  உமை  மைந்தனே ! 

உலகேழும்  பெற்ற  
                  சீர்  அபிராமி  அந்தாதி  

எப்போதும்  என்  
                  சிந்தை  உள்ளே,  

காரமர்  மேனிக்  
                 கணபதியே !
நிற்கக்     கட்டுரையே !




நூல் 

உதிக்கின்ற  செங்கதிர்   உச்சித்  திலகம் !  

உணர்வுடையோர்  மதிக்கின்ற   மாணிக்கம்.!

மாதுளம்  போது !

மலர்  கமலை  துதிக்கின்ற  மின்கொடி  !

மென்கடிக்  குங்குமத்  தோயமென்ன  

விதிர்கின்ற  மேனி, 

அபிராமி,  எந்தன்  விழுத் துணையே !                                        பாடல்  1



அபிராமியே  உற்ற  துணை  என்ற  சரணாகதி.

தொடரும்....


         



         

No comments:

Post a Comment