காசி யாத்திரை | ||||
சுற்றுலா என்பதற்கும் யாத்திரை | ||||
என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. | ||||
சுற்றுலா என்பது கேளிக்கைக்கு | ||||
முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்வது. | ||||
யாத்திரை என்பது முழுக்க முழுக்க பக்தி, | ||||
ஆன்மிகம், சடங்குகள், இறைவழிபாடு | ||||
போன்றவற்றை அடிப்படையாகக் | ||||
கொண்டது. | ||||
பண்டைக் காலம் தொட்டே யாத்திரை | ||||
என்பது ஹிந்துக்களின் வாழ்வோடு | ||||
பின்னிப் பிணைந்த ஒன்றாகவே இருந்து | ||||
வந்துள்ளது. யாத்திரைகள் பல இருந்தாலும் | ||||
‘காசி யாத்திரை’ புனிதமானதாகக் | ||||
கருதப்படுகிறது. காசிக்குச் சென்று | ||||
கங்கையில் நீராடினால் பாவங்கள் | ||||
தொலைந்து விடும் என்ற நம்பிக்கை | ||||
காலம் காலமாக இருந்து வருவதே | ||||
இதற்குக் காரணம். | ||||
காசி யாத்திரை முறைகள் | ||||
காசி யாத்திரையை நாம் முதலில் | ||||
இராமேஸ்வரத்தில் துவங்க வேண்டும். | ||||
அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி, | ||||
ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் | ||||
நீராடி பின் இறைவனை வேண்டி, | ||||
சேதுக்கரையில் மணலால் லிங்கம் செய்து | ||||
பூஜித்து யாத்திரையைத் துவங்க வேண்டும். | ||||
காசி ஆலயங்கள் | ||||
சடங்குகளை முறையாகச் செய்து விட்டு | ||||
இறைவழிபாட்டிற்குச் செல்லலாம். | ||||
பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே | ||||
காசியில் சிவன், விஷ்ணு, துர்க்கை, | ||||
விநாயகர், ஆஞ்சநேயர், பைரவர் என பல | ||||
மூர்த்தங்கள் எழுந்தருளியிருக்கின்றனர். | ||||
பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் | ||||
காசியில் அமைந்துள்ளன. அவற்றுள் | ||||
தரிசிக்க வேண்டிய முக்கிய | ||||
தெய்வங்களைப் பற்றி : | ||||
விஸ்வேசம் மாதவம் டுண்டிம் | ||||
தண்டபாணிம்ச பைரவம் | | ||||
வந்தே காசீம் குஹாம் கங்காம் | ||||
பவானீம் மணிகர்ணிகாம் || | ||||
விஸ்வேசம் | ||||
விஸ்வேசம்’ என்று குறிப்பிடப்படுவது | ||||
காசி விஸ்வநாதரை. இந்தியாவின் | ||||
முதன்மையான ஜோதிர்லிங்கத் தலம் இது. | ||||
ஆலயத்தின் உள்ளே உள்ள கிணற்றில் | ||||
பழமையான லிங்கம் இருப்பதாய் ஐதீகம். | ||||
பிந்து மாதவர் ஆலயம் | ||||
மாதவம்’ என்பது பிந்து மாதவரைக் | ||||
குறிக்கும். இராமேஸ்வரத்தில் சேது | ||||
மாதவராகவும், திரிவேணி சங்கமத்தில் | ||||
வேணி மாதவராகவும் எழுந்தருளியிருக்கும் | ||||
விஷ்ணு, காசியில் பிந்து மாதவராகக் | ||||
காட்சி தருகிறார். இவரது ஆலயம் | ||||
பஞ்ச கங்கா காட்டில் அமைந்திருக்கிறது. | ||||
பிரம்மா வழிபட்ட சிறப்புக்குரியவர். | ||||
சங்கு, சக்கரத்துடன் கதாயுதம் ஏந்திக் | ||||
காட்சி தருகிறார். ஆலயத்திற்கு வெளியே | ||||
விஷ்ணு பாதம் இருக்கின்றது. அதற்கு | ||||
கங்கை நீரை அபிஷேகம் செய்து, | ||||
மலர்களைத் தூவி வழிபடுகின்றனர். | ||||
டுண்டி கணபதி | ||||
டுண்டி’ கணபதி காசியின் முக்கியமான | ||||
தெய்வங்களுள் ஒன்று. காசியின் சிறிய | ||||
சந்துகளில் பல கடைகளுக்கு நடுவே | ||||
ஒளிந்து கொண்டிருக்கும் இவரை தேடித் | ||||
தான் கண்டுபிடிக்க வேண்டும். காசிக்குச் | ||||
செல்பவர்கள் மணிகர்ணிகையில் | ||||
நீராடிவிட்டு தேவ, ரிஷி, பித்ரு கடன்களை | ||||
முடித்து விட்டு பின்னர் டுண்டி கணபதியை | ||||
வணங்க வேண்டும். டுண்டி விநாயகரைக் | ||||
காலையில் வணங்கினால் ஒருவருடைய | ||||
அனைத்து இடையூறுகளும் நீங்கி | ||||
வாழ்க்கையில் வளமுண்டாகும். | ||||
“சகல சித்திகளையும் அளிக்கும் டுண்டி | ||||
விநாயகரை ஒருவன் அனுதினமும் | ||||
தொழுது வந்தால் | ||||
அளவற்ற நன்மைகளை அடைகிறான்” | ||||
என்கிறது ஸ்காந்த புராணம். | ||||
தண்டபாணி ஆலயம் | ||||
‘தண்டபாணி’ ஆலயம் கால பைரவர் | ||||
ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது. | ||||
காசியின் தண்டல் நாயகர் இவர் | ||||
அதனால்தான் இப்பெயர். கால பைரவரின் | ||||
தளபதியான இவர், காசியில் உள்ள | ||||
கணங்களுக்கெல்லாம் அதிபதியும் கூட. | ||||
சலவைக் கல்லால் ஆன ஆலயத்தில் இரு | ||||
கைகளிலும் ஒரு தண்டத்தைப் | ||||
பிடித்துக்கொண்டு குத்திட்டு அமர்ந்துள்ளார் | ||||
தண்டபாணி. கழுத்திலும், தலையைச் | ||||
சுற்றியும் ருத்திராட்ச மாலைகள் அழகு | ||||
செய்கின்றன. கால பைரவரின் ஆக்ஞைக்கு | ||||
உட்பட்டு தண்டனைகளை நிறைவேற்றுபவர் | ||||
இவர்தான். ‘தண்டுபாணி’என்று சொல்லி | ||||
வட நாட்டவர்கள் இவரை வழிபடுகின்றனர். | ||||
கால பைரவர் | ||||
காசி நகரத்தின் காவல் தெய்வமும், | ||||
க்ஷேத்திர பாலகரும் ‘கால பைரவர்’தான். | ||||
இவர் கட்டுப்பாட்டில்தான் காசி மாநகரே | ||||
உள்ளது. இவர் கண்ணசைவின்றி காசியில் | ||||
ஏதும் நிகழாது என்பது ஐதீகம். இவரைத் | ||||
தரிசிக்காமல் காசி யாத்திரை பூர்த்தி | ||||
ஆவதில்லை. உருண்டையான முகம், | ||||
பெரிய கண்கள், அடர்ந்த மீசை என | ||||
கம்பீரமாக இவர் காட்சி தருகிறார். உள்ளே | ||||
நுழைந்து பைரவரை வணங்கியதும் | ||||
ஆலயத்தில் உள்ள பண்டா மயிற்பீலியால் | ||||
நம் முதுகில் தட்டுவார். அதனைத் | ||||
தொடர்ந்து ‘தண்டம்’ வழங்கப்படுகிறது. | ||||
தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். | ||||
அதைப் பக்தர்களின் தலையில் வைத்து | ||||
ஆசீர்வதிக்கிறார்கள். கோயில் வாயிலில் | ||||
’காசிக்கயிறு’என்னும் கறுப்புக் கயிறு | ||||
விற்கிறார்கள். காசிக்குவந்து சென்றதற்கும், | ||||
கால பைரவரைத் தரிசித்து அவர் அருள் | ||||
பெற்றதற்கும் அதுவே அடையாளம். | ||||
அந்தக் கயிறுகளை வாங்கி, அதனை | ||||
பைரவரின் திருவடியில் வைத்து வணங்கி | ||||
தாங்களும் கட்டிக் கொள்வதுடன் காசி | ||||
யாத்திரை நிறைவேறியதும் | ||||
நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு | ||||
அளிக்கலாம். ஆதிசங்கரர் காசி பைரவர் | ||||
மீது “கால பைரவாஷ்டகம்.” என்றொரு | ||||
அற்புதத் துதியை இயற்றியுள்ளார். | ||||
காசி | ||||
இங்கே காசி என்று குறிப்பிடுவது ஆதிகாசி. | ||||
இது ஒருசிறு கோயில். இங்கு ஒரு சிறிய | ||||
லிங்கமும், சிவமூர்த்தியும் இருக்கின்றன. | ||||
குஹாம் | ||||
மிருத்யுயேஞ்சஸ்வரர் ஆலயம் அருகே ஒரு | ||||
குளம் உள்ளது. இதுதான் ஆதி கங்கை | ||||
என்று சிலர் கூறுகின்றனர். இதன் அருகே | ||||
உள்ள குகையே குஹாம் என்று | ||||
அழைக்கப்படுகிறது. | ||||
கங்காம் | ||||
இது ஆதிகங்கை இருந்த இடம். இங்குதான் | ||||
பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு | ||||
வந்தான் என்கிறது புராணம். | ||||
ஆதிகங்கையின் நீரை தலையில் | ||||
தெளித்துக் கொண்டால்தான் கங்கையில் | ||||
முழுமையாக நீராடிய பலன் கிடைக்கும். | ||||
பவானி | ||||
காசி விசாலாட்சியே பவானி ஆகப் | ||||
போற்றப்படுகிறாள் என்பதாக ஒரு கருத்து | ||||
உண்டு. பவானி என்பது காசியில் உள்ள | ||||
துர்கை அம்மன் ஆலயமே என்றும் சிலர் | ||||
கருதுகின்றனர். விசாலாட்சி ஆலயம், | ||||
விஸ்வநாதர் ஆலயத்திற்குப் பின்புறம் | ||||
சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. | ||||
தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி | ||||
நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி | ||||
இருக்கிறாள். வெள்ளிக் கவசத்தில், | ||||
சாந்தமான திருமுகத்துடன், கருணை | ||||
பொங்கும் திருவிழிகளுடன் அன்னை | ||||
காட்சி தருகிறாள். இவ்வாலயம் | ||||
அன்னையின் 51 சக்தி பீடங்களில் | ||||
ஒன்றாகக் கருதப்படுகிறது. அன்னையின் | ||||
பின்புறம் உற்றுக் கவனித்தால் மற்றொரு | ||||
திருவுருவத்தைக் காண இயலும். அதுவே | ||||
‘பவானி’ என்று சிலர் கூறுகின்றனர். காசி | ||||
நகரத்தாரின் பொறுப்பில் இவ்வாலயம் | ||||
அமைந்துள்ளது. | ||||
மணிகர்ணிகா | ||||
மணிகர்ணிகா தீர்த்தம் மிகப் புனிதமானது. | ||||
காசித் திருத்தலத்தின் மிக முக்கியமான | ||||
படித்துறை இது. இங்குள்ள மயானம் மிகப் | ||||
புனிதமானதாகப் போற்றப்படுகின்றது. | ||||
இங்கு தகனம் செய்வது மோட்சத்தைத் | ||||
தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. | ||||
உடல்கள் வண்டியில் கொண்டுவரப்பட்டு, | ||||
மணி கர்ணிகையில் நீராட்டப்பட்டு பின்னர் | ||||
தகனம் செய்யப்படுகின்றது. இங்கு நீராடி | ||||
நீத்தார் கடன்களைச் செய்வதன் மூலம் | ||||
முன்னோர்கள் மேலுலகம் செல்வதாக | ||||
நம்பிக்கை. இங்கு நீராடி | ||||
மணிகர்ணிகேஸ்வரரை தரிசித்த | ||||
பின்தான் காசியின் பிற தெய்வங்களை | ||||
வணங்கச் செல்ல வேண்டும் என்ற நியதி | ||||
உள்ளது. இங்குள்ள இறைவன் உள்ளது. | ||||
இங்குள்ள இறைவன் மணிகர்ணேஸ்வரர் | ||||
என்று போற்றப்படுகிறார். காசியில் | ||||
மரிப்போரின் காதுகளில் ஈசன் குனிந்து | ||||
ராம நாமத்தை ஓதும் போது அவர் | ||||
காதுகளில் அணிந்துள்ள குண்டங்கள் | ||||
தரையில் படுவதால் இறைவனுக்கு | ||||
இப்பெயர். (மணி – குண்டலம்; கர்ணிகா – | ||||
காது). “மணிகர்ணிகையில் குளித்து | ||||
மணிகர்ணிகேஸ்வரரைத் | ||||
தியானிப்பவர்களுக்கு மீண்டும் பிறவி | ||||
இல்லை. மணிகர்ணிகையில் ஒருமுறை | ||||
மூழ்கி எழுந்தால் அது அனைத்துப் | ||||
புண்ணிய நதிகளிலும் நீராடிய பலனைத் | ||||
தரும். மணிகர்ணிகைக்குச் சமமான | ||||
தீர்த்தம் எந்த லோகத்திலும் இல்லை” | ||||
என்கிறது ஸ்காந்த புராணம். | ||||
அன்னபூரணி | ||||
காசியின் அதி முக்கிய தெய்வங்களுள் | ||||
ஒன்று அன்னபூரணி. காசி முழுக்க முழுக்க | ||||
அன்னையின் அருளாட்சிதான். | ||||
கங்கா ஆரத்தி | ||||
காசிக்குச் செல்பவர்கள் தவற விடக்கூடாத | ||||
ஒன்று கங்கா ஆரத்தி. தசாஸ்வமேத | ||||
காட்டில் தினசரி நடக்கும் நிகழ்வு இது. | ||||
மாலை சுமார் 6.30க்கு ஆரம்பித்து 7.30க்கு | ||||
முடியும். இளம் வயதுள்ள ஏழு ஆண்கள் | ||||
கங்கை நதிக்குச் செய்யும் பூஜையே | ||||
‘கங்கா ஆரத்தி’ எனப்படுகிறது. முதலில் | ||||
புனிதமான சங்கை ஊதி, மணியை அடித்து | ||||
பூஜையை ஆரம்பிக்கின்றனர். அடுத்தடுத்து | ||||
ஊதுபத்தி, சாம்பிராணி, மலர்கள் என | ||||
ஒவ்வொன்றின் மூலமும் ஆரத்தி | ||||
நடைபெறுகிறது. பார்க்கக் கண்கொள்ளாக் | ||||
காட்சியாக இது இருக்கும். | ||||
இவை தவிர காசியில் தரிசிக்க வேண்டிய | ||||
ஆலயங்கள் பல இருக்கின்றன. | ||||
கேதாரேஸ்வரர் ஆலயம், ஹனுமான்காட் | ||||
ஆஞ்சநேயர், துர்கா மந்திர், வராகி அம்மன் | ||||
கோவில், துளசி மானஸ் மந்திர், சங்கட் | ||||
மோசன் ஹனுமான் ஆலயம் போன்றவை | ||||
இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை. | ||||
கௌடி மாதா | ||||
எல்லா ஆலய தரிசனங்களையும் முடித்து | ||||
விட்டு இறுதியில் கௌடி மாதா என்னும் | ||||
சோழி அம்மன் கோவிலை அவசியம் | ||||
தரிசிக்க வேண்டும். ‘காசீ பல் ஹம் கோ; | ||||
கௌடீ பல் தும்கோ’ என்று சொல்லி | ||||
சோழிகளைக் கையால் அளைந்து இங்கே | ||||
வழிபட வேண்டும் என்பது ஐதீகம். படி | ||||
ஏறிச் சென்றுதான் இவளைத் தரிசிக்க | ||||
வேண்டும். இந்த அம்மன் முன் | ||||
வைக்கப்பட்டிருக்கும் சோழிகளைக் | ||||
கையால் அளைந்து இவளை வணங்கி | ||||
விடை பெற்றால்தான் காசி யாத்திரை | ||||
காசியில் பூர்த்தி ஆவதாக ஐதீகம். | ||||
கங்கை நீரைக் கொண்டு வந்து, | ||||
இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்படிக | ||||
லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுடன்தான் | ||||
காசி யாத்திரை என்பது முழுமையாகப் | ||||
பூர்த்தி ஆகிறது. | ||||
உண்மையில் காசி யாத்திரை என்பது | ||||
வெறும் யாத்திரை மட்டுமல்ல; அது, | ||||
ஹிந்துக்கள் தங்களது பண்பாட்டை, | ||||
கலாசாரத்தை, வேற்றுமையில் ஒற்றுமை | ||||
காணும் ஒருமை உணர்வை | ||||
ஒருங்கிணைக்கும் ஒரு புனிதப் பயணம். | ||||
ஹிந்துக்கள் ஒவ்வொருவரும் தம் | ||||
வாழ்வில் ஒருமுறையாவது மேற்கொள்ள | ||||
வேண்டிய யாத்திரை காசி யாத்திரை | ||||
எனலாம். ஹரி ஓம் !!! |
||||
Tuesday 31 March 2020
காசி யாத்திரை
காசி மஹாத்மியம்
|
||||||||||||||
வ. சு. செங்கல்வராய பிள்ளை | ||||||||||||||
திருச்சிற்றம்பலம் |
||||||||||||||
சிவபக்த சிரோமணிகளாகிய | ||||||||||||||
நைமிசாரணிய
முநிவர்கள் சூத முநிவரை |
||||||||||||||
நோக்கி 'முநிபுங்கவரே! எங்கள் | ||||||||||||||
வினைகளைப் போக்கக் கூடிய | ||||||||||||||
சிவசரிதங்கள் தங்கள் திருவாக்கால் | ||||||||||||||
எண்ணில்லாதன உரைத்தீர். | ||||||||||||||
க்ஷேத்திரங்களுக்கெல்லாம் நாயகமாகிய | ||||||||||||||
ஸ்ரீ காசி நகரத்தின்
சிறப்பையுந் தயை |
||||||||||||||
கூர்ந்து உரைத்தருளல்
வேண்டும்' என்று |
||||||||||||||
கேட்டுக்கொள்ள, சூத முநிவரும் | ||||||||||||||
மனமகிழ்ச்சியுடன் 'அன்பர்களே, உங்கள் | ||||||||||||||
இஷ்டத்தை நிறைவேற்றுகின்றேன்' என்று | ||||||||||||||
சொல்லிப் பின்வருந் திவ்ய சரிதத்தை | ||||||||||||||
அவர்களுக்கு உரைத்தருளுகின்றார்: | ||||||||||||||
திருவளர்ந்தோங்கும் பரதகண்டத்தில் | ||||||||||||||
சிம்ஹள தீபம் என்னும் தேசத்தில் | ||||||||||||||
சிம்ஹத்வஜன் என்றொரு அரசன் | ||||||||||||||
இருந்தான். அவன் சகல நற்குண நற் | ||||||||||||||
செய்கைகளும் வாய்ந்தவன். போரில் | ||||||||||||||
மஹாவீரன். அவனுடைய
மனைவி பெயர் |
||||||||||||||
மந்தாரலக்ஷ்மி. பெண்டிர்க்குரிய | ||||||||||||||
நால்வகைக் குணமும் பொருந்தியவள். | ||||||||||||||
அழகிற் சிறந்தவள். தன் கணவன் மேல் | ||||||||||||||
நிறைந்த காதலும் பக்தியும் உடையவள். | ||||||||||||||
எவ்வாற்றானும் மேன்மையுற்றும் புத்திர பாக்கியம் | ||||||||||||||
இல்லாக் குறையால் | ||||||||||||||
அரசனுக்குத் தினந்தோறும் கவலை | ||||||||||||||
வளர்ந்து கொண்டே வந்தது. புத்திரப் | ||||||||||||||
பேற்றைக் குறித்துப் பலவித தருமங்களை | ||||||||||||||
மன்னவன் உவப்போடு செய்தான். | ||||||||||||||
கோயில்களுக்குத் தீப கட்டளை, அன்ன | ||||||||||||||
கட்டளை முதலிய ஏற்படுத்தினான். | ||||||||||||||
தினந்தோறும் குடை, உடை, பசு, பூமி | ||||||||||||||
முதலிய தானங்கள் செய்தான். | ||||||||||||||
என்ன செய்தும் புத்திரோற்பத்தி | ||||||||||||||
அடையாமையால் அரசன் மிகக் | ||||||||||||||
கவலையுடன் தன் மனைவியை நோக்கி, | ||||||||||||||
ஹே! மந்தார லக்ஷ்மி! மனோமணி! | ||||||||||||||
நாம் இருவரும் பாக்கிய ஹீனர்கள். ஒரு | ||||||||||||||
குழந்தையின் தாமரைப் பூப் போலும் | ||||||||||||||
முகத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் | ||||||||||||||
நமக்கு இல்லாமற் போய் விட்டது. | ||||||||||||||
இங்ஙனம் புத்திரனில்லாது இப்போது | ||||||||||||||
வருந்தும்படி நாம் முன் ஜன்மத்தில் | ||||||||||||||
என்ன பாவஞ் செய்தோமோ? | ||||||||||||||
புத்திரனில்லாதவனுக்கு நாடும் நகரமும் | ||||||||||||||
நாநா பதார்த்தங்களும், தனங்களும், | ||||||||||||||
சுற்றமும் யாது பயனைத் தரும்? | ||||||||||||||
அவனுக்கு இம்மையினுந் துக்கம், | ||||||||||||||
மறுமையினுந் துக்கம். நமது கர்ம | ||||||||||||||
வினையைப் பார்த்தாயா? பிதிர்த்தொழில் | ||||||||||||||
செய்ய மக்களில்லாவிட்டால் நமக்கு | ||||||||||||||
நல்ல கதி எங்கனங் கிடைக்கும்?' என்று | ||||||||||||||
கூறி இருவருங் கவலுந் தருணத்தில் | ||||||||||||||
ஆநந்த ஸ்வரூபியாகிய
ஸ்ரீ நாரத முநிவர் |
||||||||||||||
அரசனது சபா மண்டபத்திற்கு வந்தார். | ||||||||||||||
அரசன் அவரைப் பேராநந்தத்தோடு | ||||||||||||||
எதிரேற்று வந்தித்துப் பூசித்து | ||||||||||||||
சிம்ஹாசனத்தில் வீற்றிருக்கச் செய்தான். | ||||||||||||||
பின்பு அவரது பாதார விந்தத்தில் வீழ்ந்து | ||||||||||||||
நமஸ்கரித் தெழுந்து அவரை நோக்கி, | ||||||||||||||
வீணாதரரே! முநிபுங்கவரே! உமது பாத | ||||||||||||||
பதுமத்தை யான் காண்பதனாலேயே | ||||||||||||||
எனக்கு எல்லா நன்மையுங் கைகூடின. | ||||||||||||||
எனது துக்கமெல்லாம் ஒழிந்தன. நான் | ||||||||||||||
மக்கட் பேறடைய யாதோர் ஐயமும் | ||||||||||||||
இல்லை. புண்ணிய புருஷர்கள் ஒருவன் | ||||||||||||||
திருஷ்டியிற் பட்டபோதே நன்மைகள் | ||||||||||||||
எல்லாம் அவனை நாடிவரும். இன்று | ||||||||||||||
நான் பரிசுத்தனாயினேன்; மிகப் | ||||||||||||||
பிரசித்தனாயினேன்; சிம்ஹள தேசத்து | ||||||||||||||
அரசர்களுள் மிக்க நிலை பெற்றவன் | ||||||||||||||
ஆயினேன். ஹே! மந்தாரலக்ஷ்மி! இங்கே வா! | ||||||||||||||
முநிபுங்கவரது பாத தாமரையைச் | ||||||||||||||
சிரசிற்றரித்துக் கொள். இவரோ திவ்யர். | ||||||||||||||
மஹா முநிவர். பிரமபுத்திரர். நினைத்த | ||||||||||||||
காரியத்தை நிமிஷத்தில் முடிக்க | ||||||||||||||
வல்லவர். இவர் கடாக்ஷம் பெற்றாய்; | ||||||||||||||
புத்திரப் பேறுற்றாய் எனப் பலவாறு கூறி, | ||||||||||||||
முநிபுங்கவரைப் பணிந்து நின்றான். | ||||||||||||||
இவ்வார்த்தைகளைச் செவியேற்ற | ||||||||||||||
ஸ்ரீ நாரத முநிவர; சந்திரிகை போலும் | ||||||||||||||
ஒளி பொருந்திய புன்சிரிப்போடு தமது | ||||||||||||||
அமுத வாயைத் திறந்து, | ||||||||||||||
"பூபதே! நீ ஸ்ரீ நீலகண்டப் பெருமானைப் | ||||||||||||||
பூசித்தல் வேண்டும். அவரே தேவாதி | ||||||||||||||
தேவர். மூவர்கள் முதல்வர், அடியார்க்கு | ||||||||||||||
நல்லார், நச்சினார்க் கினியர். அவரை | ||||||||||||||
வழிபட்டால் உனக்குமங்களம் உண்டாகும். | ||||||||||||||
உனது பூர்வ கர்ம வினையால் உனக்குச் | ||||||||||||||
சந்ததி யில்லாதாயிற்று. நீ முன் | ||||||||||||||
ஜன்மத்தில் அந்தணருடைய பொருளை | ||||||||||||||
மோசஞ் செய்து கவர்ந்தாய். உன் | ||||||||||||||
முற்பிறப்பின் வரலாற்றைக் கூறுகிறேன்; | ||||||||||||||
கேட்பாயாக -- | ||||||||||||||
'நீ குந்தள தேசத்தில் அந்திய வமிசத்திற் | ||||||||||||||
பிறந்து வளர்ந்தாய். பலர் பொருளைக் | ||||||||||||||
கவர்ந்து வீடு, வாசல் முதலிய கட்டிக் | ||||||||||||||
கொண்டாய். தாடங்கன் என்பது உன் | ||||||||||||||
பெயர். உன்னுடைய பண ஆசையால் நீ | ||||||||||||||
ஒரு முறை பிராமணர் வீதியில் | ||||||||||||||
தேவேந்திரனுக்குச் சமமான செல்வத்தை | ||||||||||||||
யுற்ற கோவிந்தசருமன் என்பவனுடைய | ||||||||||||||
வீட்டில் இரவிற் கன்னம் வைத்துச் | ||||||||||||||
சுவரைத் தொளைத்து உள்ளே புகுந்து | ||||||||||||||
நவனும் அவன் மனைவியும் குழந்தையும் | ||||||||||||||
உறங்குவதைக் கண்டு ஆண்டுள்ள | ||||||||||||||
பொருள்க ளெல்லாவற்றையுங் | ||||||||||||||
களவாடினாய். அப்போது அங்கே வைரக் | ||||||||||||||
கடுக்கன், பொற்றோடு, பொன் அறைநாண், | ||||||||||||||
பொற்சிலம்பு முதலிய அணிந்து உறங்கும் | ||||||||||||||
குழந்தையை அதிக குதூகலத்துடன் | ||||||||||||||
மெதுவாய் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு | ||||||||||||||
வெளியே வந்து அருகிலுள்ள காட்டில் | ||||||||||||||
நுழைந்து, ஆபரணங்களெல்லாவற்றையும் | ||||||||||||||
எடுத்துக்கொண்டு, குழந்தையைக் | ||||||||||||||
கழுத்தைப் பற்றித் திருகி முறித்து ஓர் | ||||||||||||||
ஆழ்ந்த கிணற்றில் எறிந்து சென்றாய். | ||||||||||||||
வீட்டிற் கோவிந்த சருமனும் அவன் | ||||||||||||||
மனைவியும் தங்குழந்தையைக்காணாது | ||||||||||||||
பிரமித்து வாய்விட்டலறினார்கள். | ||||||||||||||
இங்ஙனம் இவர்கள் அழ, இத் துக்க | ||||||||||||||
சமாசாரம் ஊர் முழுவதும் பரவிற்று. | ||||||||||||||
அவ்வூர் அரசன் செங்கோல் நடாத்துஞ் | ||||||||||||||
சீரிய குணத்துச் செல்வன். அவன் | ||||||||||||||
இதனைக் கேட்கவே, வேதனை யகத்து | ||||||||||||||
மிக்குக் காவலரைக் கூவி, 'நீங்கள் | ||||||||||||||
நாற்புறத்துங் காற்றிற் பறந்தோடித் | ||||||||||||||
துருவித் திருடனை உடனே கொணருதிர்' | ||||||||||||||
எனப் பணித்தான். அங்ஙனம் புறப்பட்ட | ||||||||||||||
காவலருட்சிலர் தாடங்கனாய உன்னைப் | ||||||||||||||
பிடித்தார்கள்.
கைகளிலும், உடல் மீதும், |
||||||||||||||
இரத்தக் கறை இருக்கக் கண்டு உன்னை | ||||||||||||||
அவர்கள் இறுகப் பிணித்து நையப் | ||||||||||||||
புடைக்கவே, நோய் தாளாது நீ | ||||||||||||||
உண்மையை ஒப்புக்கொண்டாய். நீ | ||||||||||||||
கவர்ந்த சொத்துக்களை உன்னிடமிருந்து | ||||||||||||||
பற்றிக் கொண்டு துஷ்டனாகிய | ||||||||||||||
உன்னையும் கழுமுனையி லேற்றும்படி |
||||||||||||||
அரசன் ஆக்ஞாபித்தான். ராஜ வீதியின் | ||||||||||||||
கோடியில் ஒரு புறத்தில் உன்னைக் | ||||||||||||||
கழுவேற்றினார்கள். | ||||||||||||||
தாடங்கனாகிய நீ கழுமுனையில் | ||||||||||||||
தினந்தோறும் மரணவாஸ்தையோடு | ||||||||||||||
துடித்துக் கொண்டிருந்தாய். அப்போது | ||||||||||||||
காசி யாத்திரை செய்கின்ற புண்ணியசீலர் | ||||||||||||||
ஒருவர் அவ்வூரில் இரவில் நீ இருந்த | ||||||||||||||
இடத்திற்குச் சமீபத்தில் வந்து தங்கினார். | ||||||||||||||
அவர் உன் கூக்குரலைக் கேட்டு உன்னை | ||||||||||||||
உற்றுப் பார்த்துப் பயந்து பின் வாங்கினார். | ||||||||||||||
அப்போது நீ அவரை நோக்கி, 'ஐயரே! | ||||||||||||||
அஞ்சுதல் வேண்டாம், தயை செய்து | ||||||||||||||
சமீபத்தில் வாருங்கோள்' என்று சொல்ல, | ||||||||||||||
அவரும் சமீபித்து வந்தார். வருதலும் நீ | ||||||||||||||
அவரை நோக்கி, 'ஐயரே! தனது தீய | ||||||||||||||
நடத்தையால் வரும் ஆபத்துக்களை | ||||||||||||||
ஒருவன் நீக்க முடியுமா? நான் செய்த | ||||||||||||||
தீமையோ மிகவுங்கொடியது. அவனவனது | ||||||||||||||
கர்ம பலத்தை அவனவனே அனுபவித்தல் | ||||||||||||||
வேண்டும். நீங்கள் தீர்த்த யாத்ரிகர் | ||||||||||||||
போலத் தோன்றுகின்றது. புண்ணிய | ||||||||||||||
தீர்த்தங்களில் ஆடி வரும் நீங்கள் எனது | ||||||||||||||
வேண்டுகோள் ஒன்றைச் செவியேற்றருள | ||||||||||||||
வேண்டும்; கங்கைக் கரையிற் கயா | ||||||||||||||
சிரார்த்தம் வெகு விசேஷமென்று நான் | ||||||||||||||
கேள்விப்பட்டிருக்கின்றேன். அங்கே | ||||||||||||||
நீங்கள் சிரார்த்தம் செய்வதால் வரும் | ||||||||||||||
பலனில் நூற்றில் ஒரு கூறு தனியாய் | ||||||||||||||
எனது நற்கதிக்கென்று தத்தஞ் செய்ய | ||||||||||||||
வேண்டுகின்றேன். இதுவே என் | ||||||||||||||
பிரார்த்தனை. இப்பிறப்பில் இனி ஒன்றும் | ||||||||||||||
என்னால் இயலாதாதலின் இவ்வுதவிக்குக் | ||||||||||||||
கைம்மாறு நான் மறுபிறப்பிலேனுஞ் | ||||||||||||||
செய்கிறேன், என்று இரந்து கேட்டுக் | ||||||||||||||
கொண்டாய். இம்மொழியைக் கேட்ட | ||||||||||||||
தயாளுவாகிய அவ்வழிப்போக்கர் | ||||||||||||||
அங்ஙனே செய்கிறேன், அஞ்சுதல் | ||||||||||||||
வேண்டா' என வாக்குத்தத்தஞ் செய்து | ||||||||||||||
சென்றார். | ||||||||||||||
இங்ஙனம் நாலைந்து நாள் நீ | ||||||||||||||
கழுமுனையில் துன்புற்றாய். அப்போது | ||||||||||||||
ஓர்நாள் நள்ளிருளிற் பேய்க் கூட்டங்கள் | ||||||||||||||
உன் அருகிற் போந்து சூழ்ந்தன | ||||||||||||||
பேய்க் குழாத்தில் இருந்த ஒரு பெண் | ||||||||||||||
பேய், 'தெய்வமே! இப்பூமியில் எனது | ||||||||||||||
சாபத்தைப் போக்குவாரும் உண்டோ? ஒரு | ||||||||||||||
மனிதன்கூட எனக்கு அருகில் | ||||||||||||||
வருகின்றானில்லையே" என்று | ||||||||||||||
ஏக்கத்தோடு கதறி நின்றது. இதனைக் | ||||||||||||||
கேட்ட ஏனைய பேய்கள்
'உனக்குச் சாபம் |
||||||||||||||
எங்ஙனம் வந்தது?' என அப்பெண் பேய் | ||||||||||||||
சொல்லலுற்றது: | ||||||||||||||
"கேளுங்கோள் என் கதையை. யான் | ||||||||||||||
முன் ஜன்மத்திற் பெண்கள் சிகாமணியாய் | ||||||||||||||
வேசியர் குலத்துக்கு ஓர் | ||||||||||||||
ரத்நமாலிகையாய்ப் பிறந்தேன். என் | ||||||||||||||
இச்சைபோன வழியெல்லாஞ் | ||||||||||||||
சுகித்திருந்தேன். குபேர நிதியும் | ||||||||||||||
தேவேந்திர போகமும் என்னிடத்து | ||||||||||||||
ஒருங்கு இருந்தன.
தனப் பெருமையாலும் |
||||||||||||||
சௌந்தரியப் பெருமையாலும் நான் | ||||||||||||||
அரசர்களுக்கும் அஞ்சவில்லை. | ||||||||||||||
ரூபலாவண்யத்தாலும், வெகு ரம்யமாய்ச் | ||||||||||||||
சல்லாபஞ் செய்யுஞ் சாமர்த்யத்தாலும், | ||||||||||||||
ஆடல், பாடல் முதலியவற்றிலிருந்த | ||||||||||||||
முதற்றர தேர்ச்சியாலும், மற்றும் | ||||||||||||||
வேசியர்க்கு வேண்டிய லக்ஷணங்களாலும் | ||||||||||||||
வேசியர் யாவரினும் மேம்பட்டு | ||||||||||||||
வேசியர்திலகம் எனப் பிரசித்தி பெற்றேன். | ||||||||||||||
பொருள் பறிப்பதில் எனக்கு இருந்த | ||||||||||||||
சாமர்த்யம் வேறு எவருக்குங் கிடையாது. | ||||||||||||||
இங்ஙனஞ் செல்வ மமதையாற் கண் | ||||||||||||||
கெட்டிருந்ததால் நான் ஒரு பெரிய | ||||||||||||||
தோஷத்திற்கு இடந்
தந்தேன். ஒரு நாள் |
||||||||||||||
அந்தி வேளையில் எனது தோழியரோடு | ||||||||||||||
விளையாடிக்களித்து மாளிகையின் | ||||||||||||||
மேன்மாடியி லிருந்தேன். அப்போது | ||||||||||||||
வாயிலிருந்த
தம்பலத்தை மென்று கீழே |
||||||||||||||
உமிழ்ந்தேன். அந்தோ! என் பாபம்! அது கீழே |
||||||||||||||
தெருவிற் போய்க்கொண்டிருந்த ஒரு | ||||||||||||||
விப்பிர சிகாமணியின்
தலை மீது வீழ்ந்தது. |
||||||||||||||
அம் மறையோன் நிமிர்ந்து நோக்கி, 'அடீ! | ||||||||||||||
வேசி! நீ நசிப்பாயாக!
துஷ்டே! நீ பிசாசாகக் |
||||||||||||||
கடவது' எனச் சபித்தான். | ||||||||||||||
இதனைக் கேட்ட நான் மனங் கலங்கி | ||||||||||||||
விரைவிற் கீழிறங்கி ஓடி அவன் பாதத்து | ||||||||||||||
வீழ்ந்து நமஸ்கரித்து, 'அறியாது செய்த | ||||||||||||||
அபராதத்தை, அந்தணர் பெருமான் | ||||||||||||||
க்ஷமித்தருளல் வேண்டும். கருணாநிதியே! | ||||||||||||||
பெரியோர் சிறு நாய்களின் பிழையைப் | ||||||||||||||
பொறுத்தல்
வேண்டுமன்றே' எனப் பல நய |
||||||||||||||
வசனங் கூறி எனது
வீட்டுக்கு அழைத்து வந்து |
||||||||||||||
அப்யங்க ஸ்நாநஞ் செய்வித்து | ||||||||||||||
சோடசோபசாரங்களுஞ் செய்தேன். | ||||||||||||||
அன்னமும் பாலும் புசிப்பித்தேன். வெண் பட்டுஞ் | ||||||||||||||
செம்பொன்னும் அளித்தேன். | ||||||||||||||
பன்முறை பணிந்து வணங்கினேன். | ||||||||||||||
அவ்வந்தணர்
பெருமானும் உள்ளம் உவந்து |
||||||||||||||
நன்றாகுக' எனக் கூறி என்னை நோக்கி, | ||||||||||||||
தாமரைக் கண்ணீ! என் மனத்திற் கோபம் அடங்கி | ||||||||||||||
உவகை உண்டாயிற்று, உனக்குச் | ||||||||||||||
சாப விமோசனந் தருகின்றேன். நீ பேய் | ||||||||||||||
உருவத்தோடு பூமியிற் பல இடங்களிலுந் | ||||||||||||||
திரிவாய். எப்போது
உன்னை ஒரு மனிதன் |
||||||||||||||
பாணிக்கிரஹணஞ்
செய்வானோ அப்போது |
||||||||||||||
உனக்குச் சுகம்
உண்டாகும்' எனக் கூறிச் |
||||||||||||||
சென்றான். அன்றே நானும் இப்பேய் | ||||||||||||||
உருவத்தை யடைந்தேன். பல இடங்களிலும் | ||||||||||||||
உழன்றேன். பிராணி வர்க்கங்கள் என்னைக் | ||||||||||||||
காணும்போதே பயப்பட்டு ஓடுகின்றன. | ||||||||||||||
அப்படி யிருக்க என்னை எவன் | ||||||||||||||
பாணிக்கிரஹணஞ் செய்வான்? ஈஸ்வரா! | ||||||||||||||
என்ன
தௌர்ப்பாக்கியம்! நான் யாரோடு |
||||||||||||||
நோகேன்! யார்க்கெடுத் துரைப்பேன்! | ||||||||||||||
என்னைக் கலியாணஞ் செய்து | ||||||||||||||
கொள்பவனுக்கும் சுபமுண்டாகும் என | ||||||||||||||
அவ்வந்தணர் கூறியுள்ளார். யாரும் | ||||||||||||||
பயத்தால் எனக்குச் சமீபத்திலும் | ||||||||||||||
வருகிறதில்லை;
எனக்குத் தினந்தோறும் |
||||||||||||||
துக்கம் பெருகுகின்றது" -- என்று இவ் | ||||||||||||||
வண்ணம் தன் வரலாற்றை விஸ்தாரமாய்க் | ||||||||||||||
கூறி அப்பெண் பேய் புலம்பிற்று. | ||||||||||||||
இவ்விருத்தாந்தங்க ளெல்லாவற்றையும் | ||||||||||||||
கழுமுனையிலிருந்து கவனமாய்க் | ||||||||||||||
கேட்டுக்கொண் டிருந்த தாடங்களாய நீ, | ||||||||||||||
பேய் மணியே! உன்னை நான் கலியாணஞ் | ||||||||||||||
செய்து கொள்ளுகிறேன். ஆனால் நானோ | ||||||||||||||
மகாதுஷ்டன்,
கழுமுனையி லிருப்பவன். |
||||||||||||||
காலனூர்க்கேருந் தருணத்தினன். ஆயினும் | ||||||||||||||
இருவருக்கும் நன்மை உண்டாகுமாதலால் | ||||||||||||||
உன்னைக் காந்தருவ விவாகஞ் | ||||||||||||||
செய்துகொள்ளுகிறேன்; உன்னைச் | ||||||||||||||
சாபத்தினின்றும் மீட்பேன்' என்று சொல்ல, | ||||||||||||||
அப்பிசாசும் உடனே தன் குழுவினின்றும் | ||||||||||||||
பிரிந்து தானுங் கழு முனையிலேறிப் | ||||||||||||||
பாணிக்கிரஹணஞ் செய்து கொண்டது. | ||||||||||||||
பின்னர் மறுபிறப்பில்
அப்பேய் |
||||||||||||||
ராஜகுமாரியாய்ப்
பிறந்தது. சாக்ஷாத் அந்த |
||||||||||||||
ராஜகுமாரியே உன் மனைவி மந்தாரலக்ஷ்மி. | ||||||||||||||
தாடங்கனாய நீயோ,
கயாசிரார்த்த பலனில் |
||||||||||||||
அற்பமாகிய ஒரு சிறு கூறு | ||||||||||||||
அவ்வழிப்போக்கர் உனக்குத் தத்தம் | ||||||||||||||
பண்ணினதால், இத்துணைக் கீர்த்தியையும் | ||||||||||||||
பெருமையையும்
இப்பிறப்பில் அடைந்து, |
||||||||||||||
இந்த சிம்ஹள தேயத்துக்கு அரசனா | ||||||||||||||
யிருக்கின்றாய். நீ செய்த சிசு ஹத்தியே |
||||||||||||||
உனக்குச் சந்ததி யில்லாமற் செய்துவிட்டது. | ||||||||||||||
ஆதலின், மன்னவ, நீ காசிக்குப் போய்க் |
||||||||||||||
கங்கைக் கரையிற் கயா சிரார்த்தம் செய்து |
||||||||||||||
முற்பிறப்பில் அவ்வழிப்போக்கருக்கு நீ | ||||||||||||||
வாக்களித்தபடியே கடனை நிறைவேற்றினால், | ||||||||||||||
சிவசாமீப
பதவியிலிருக்கும் அவரும் சிவ |
||||||||||||||
சாரூபம் பெற்று சிவ கணத்தவருள் | ||||||||||||||
ஒருவராவார்; உனக்குந்
தவறாது புத்திரப் |
||||||||||||||
பேறுண்டாகும்.
சிம்ஹத்வஜ! நீ கவலுதல் |
||||||||||||||
வேண்டாம். காசிக்குச்
செல்லுக, கங்கா |
||||||||||||||
ஸ்நாநஞ் செய்க, விசுவநாதருக்கன்பனாகுக. | ||||||||||||||
நாகபூஷணரது அன்பு
கிடைக்க வேண்டின் |
||||||||||||||
பாகீரதி ஸ்நாநஞ் தான்
அதற்கு ஔஷத மாகும். |
||||||||||||||
காசித் தலத்தின் பெருமையையும் | ||||||||||||||
அவ் விசுவேசரது
பெருமையையும் யான் |
||||||||||||||
என்னென்றெடுத்துரைப்பேன். ஆயிரம் | ||||||||||||||
நாவுடைய ஆதிசேடனாலுஞ் சொல்ல | ||||||||||||||
முடியாது. ஆயினும் என் ஆசை அடங்க | ||||||||||||||
யான் சிறிது கூறுவேன்:-- | ||||||||||||||
காசிநாதரை வணங்காத
மனிதன் வஞ்சகன். |
||||||||||||||
ஒருவன் காசிக்குப் போகின்றேன் என்று | ||||||||||||||
தனது பாதத்தை முன்னிட்டு முன்னிட்டு | ||||||||||||||
வைத்தால் அவனுடைய பாபங்களெல்லாம் | ||||||||||||||
பின்னிட்டுப் பின்னிட்டு ஓடிப்போகும். | ||||||||||||||
காசிக்குப் போகின்றேன் நான்' என்ற | ||||||||||||||
உரைகளைக்கேட்ட அளவில் | ||||||||||||||
பிரமஹத்தியாதிகள் பயப்பட்டு ஓடும். | ||||||||||||||
கங்கா' என்னும் பதத்திலுள்ள | ||||||||||||||
அக்ஷரங்களைத் தியானஞ்செய்தால் | ||||||||||||||
மனிதன் சுத்தனாவான். நமது கையின் | ||||||||||||||
பயன் விசுவேசரைத் தொழக் கூப்புவதே. | ||||||||||||||
காலின் பயன் அவர்கோயிலை வலம் | ||||||||||||||
வருவதே. செவியின் பயன் அவர் புகழைக் | ||||||||||||||
கேட்பதே. கண்ணின் பயன் அவர் |
||||||||||||||
ஸ்தலத்தைக் காண்பதே.
தலையின் பயன் |
||||||||||||||
அவரை வணங்குவதே.
நெஞ்சின் பயன் |
||||||||||||||
அவரை நினைவதே. | ||||||||||||||
சிம்ஹத்வஜ! சிவபிரான் மெய்யர்க்கே | ||||||||||||||
மெய்ய ராதலின் அவர்மாட்டுக் கெடாத | ||||||||||||||
உறுதியும்
நம்பிக்கையும் உனக்கு இருத்தல் |
||||||||||||||
வேண்டும். நல்வழி ஒன்று தோன்றும்போது |
||||||||||||||
அதனை உடனே கைப்பற்றுதல்வேண்டும். | ||||||||||||||
காசிக்குப் போவது மகாகஷ்டம்; வழியிற் | ||||||||||||||
பலவித இடையூறுகள் நேரிடக்கூடும். | ||||||||||||||
அடியார்களது உறுதியைச் சோதிப்பதிற் | ||||||||||||||
சிவபெருமானுக்கு எப்போதும் ஆசையுண்டு. | ||||||||||||||
உறுதியுள்ளவர்களுக்கு எம்பிரான் அருள் புரிவார். | ||||||||||||||
ஆதலின், சிம்ஹத்வஜ! நீ காசிக்கு | ||||||||||||||
அவசியம் போகவேண்டும். | ||||||||||||||
சந்திரசேகரமூர்த்தியின் கருணையினால் | ||||||||||||||
புத்திரபாக்கியம்
முதலிய சகல சம்பத்தும் |
||||||||||||||
உனக்கு உண்டாகும். இது நிச்சயம், நிச்சயம், | ||||||||||||||
முக்காலும் நிச்சயம்" என்று உரைத்து | ||||||||||||||
அரசனுக்கு ஆசி கூறி அவன்பால் | ||||||||||||||
விடைபெற்றுப் போயினர். | ||||||||||||||
அரசனும் அப்போதே வேறு ஆலோசனை |
||||||||||||||
ஒன்றுஞ் செய்யாது காசியாத்திரைக்கு | ||||||||||||||
வேண்டிய ஏற்பாடுகளெல்லாஞ் செய்தான். | ||||||||||||||
வைதிக பிராமண சிரேஷ்டர்களும் சிவ | ||||||||||||||
முநிவர்களுந் தன்னொடு வரத் தனது | ||||||||||||||
மனைவி மந்தாரலக்ஷ்மியுடன் புறப்பட்டான். | ||||||||||||||
காட்டுவழிக்கு இன்றி
யமையாத வில், |
||||||||||||||
அம்பு, முதலிய ஆயுதங்களையும் | ||||||||||||||
எடுத்துச் சென்றான். | ||||||||||||||
பலநாள் யாத்திரை செய்து வந்தவர்கள் | ||||||||||||||
ஒரு நாள் அந்தி வேளையில் | ||||||||||||||
விந்தமலையின் பக்கத்திலுள்ள | ||||||||||||||
காட்டிற்றங்கும்படி நேரிட்டது. அப்போது | ||||||||||||||
திடீரென்று மலையின் ஒரு சாரலினின்று | ||||||||||||||
அநேகங் கள்ளர்கள் வந்து அரசனைச் | ||||||||||||||
சூழ்ந்து
கொண்டார்கள். சூழ்ந்தவர் அரசனது |
||||||||||||||
பொக்கிஷத்தை ஒரு நொடியிற் கவர்ந்தனர். | ||||||||||||||
அவர்கள் தலைவன் மந்தாரலக்ஷ்மியைத் | ||||||||||||||
தூக்கிச் சென்றான். இதனைக் கண்ட | ||||||||||||||
அரசன் அக் கள்ளர் தலைவனைத் துரத்திச் | ||||||||||||||
சென்று யுத்தஞ்செய்யப் பிரயத்தனப்பட்டான். | ||||||||||||||
கள்ளர் தலைவன் மந்தஹாஸத்துடன் | ||||||||||||||
அரசனை நோக்கி, 'ஏடா! மூடா! இந்த | ||||||||||||||
மஹாவிந்த கோரகானன
வழியில் அந்தி |
||||||||||||||
வேளையில் வந்து பாளையத்துடன் | ||||||||||||||
இறங்கினாய். உன் மதியை யிழந்தாய்; | ||||||||||||||
நிதியை யிழந்தாய்;
தாரத்தையு மிழந்தாய். |
||||||||||||||
இங்ஙனம் இழந்தது மல்லாமல் எதிர்த்து | ||||||||||||||
மீட்கவும்
புறப்பட்டாய். இது சுத்த மதிஹீனம். |
||||||||||||||
வழிபோக்கரிடத்
திருந்து தட்டிப் பறிப்பதில் |
||||||||||||||
மஹா சாமர்த்யமுள்ள
தும்பீரன் என்பவன் |
||||||||||||||
நான். உன்னுடைய இந்த மனைவியைப் |
||||||||||||||
போல இவ்விதத்திற் கிடைத்த ஆயிரம் | ||||||||||||||
மனைவிமார் எனக்கு உண்டு. ஏடா! | ||||||||||||||
இன்றல்ல இந்த சௌரியம் எனக்குப் | ||||||||||||||
பிறந்தது. இங்ஙனம்
வழி பறித்தல் நாங்கள் |
||||||||||||||
தலைமுறை தலைமுறையாகச் செய்து வரும் | ||||||||||||||
தருமமாம்' என்று சொல்ல, | ||||||||||||||
மகாவீரனாகிய அரசன் அடங்காக் | ||||||||||||||
கோபத்தோடு 'அடே, துஷ்டா! உனது | ||||||||||||||
புன்னெறி இன்றோடு முடிவு பெறுகின்றது, | ||||||||||||||
பார்! சற்சனங்களுடைய திரவியத்தை | ||||||||||||||
அபகரிக்கிற துர்ச்சனத் தலைவா! நில்லடா. | ||||||||||||||
இதோ எனது கொடிய பாணங்களுக்கு | ||||||||||||||
உன்னை இரையாக்குகின்றேன். | ||||||||||||||
கள்ளப்பயலே! உன்னுடைய தலை இதோ | ||||||||||||||
தூள் தூளாகப் போகிறது பார். | ||||||||||||||
பிழைத்தோட வேண்டு மென்றிருந்தால் | ||||||||||||||
எனது மனைவி மந்தாரலக்ஷ்மியை | ||||||||||||||
விட்டுவிட்டுப் போடா. என்னை யாரென்று | ||||||||||||||
நினைத்தாயடா? உங்களைப்போன்ற | ||||||||||||||
மிருகங்களை அழிப்பதற்கென்றேற்பட்ட | ||||||||||||||
மிருகேந்திரனாய சிம்ஹத்வஜன் என்னும் | ||||||||||||||
அரசன் நான். சங்காருத்திரனுடைய பக்தன் | ||||||||||||||
நான். ஆயிரங் காக்கைக்கு ஓர் கல் | ||||||||||||||
போதாதா? இதோ உன்னையும் உன் | ||||||||||||||
இனத்தாரையும் ஒரு நொடியிற் | ||||||||||||||
சங்கரிக்கின்றேன்; துஷ்ட பிண்டமே! | ||||||||||||||
சண்டாள ஜன்மமே! அர்த்தத்திற்கு | ||||||||||||||
ஆசைப்பட்ட உனக்கு அநர்த்தம் | ||||||||||||||
சமீபித்துவிட்டது' என்று கூறி எதிர்த்தான். | ||||||||||||||
இங்ஙனம் வாதித்த
அரசனுக்குங் கள்ளர் |
||||||||||||||
தலைவனுக்கும் யுத்தம் வெகு | ||||||||||||||
கோரமாய் நடந்தது. கோபத்தினாற் கண் | ||||||||||||||
சிவந்து புருவத்தை நெறித்துத் தனது | ||||||||||||||
வில்லை விளைத்துச் சரமாரி பெய்தனன் | ||||||||||||||
அரசன். அவைகளை எல்லாந் தடுத்துத் |
||||||||||||||
தானும் மறுமாரி பெய்தான் தும்பீரன். | ||||||||||||||
அதிக கோலாகலத்துடன் வெகுநேரம் | ||||||||||||||
இருவர்க்கும் சண்டை நடந்தது. ஈற்றில் | ||||||||||||||
மஹா கொடியனான தும்பீரன் | ||||||||||||||
சிம்ஹத்வஜனுடைய வில்லை முறித்துச் | ||||||||||||||
சிம்ஹநாதஞ் செய்தான்.
அரசன் உடனே |
||||||||||||||
முஷ்டியுத்தத்திற்குப் பாய்ந்தடுத்தான். அந்த யுத்தத்தில் | ||||||||||||||
தும்பீரன் அரசனைப் பிண்டம் | ||||||||||||||
பிடித்து விட்டான். அரசனும் மூர்ச்சித்துத் | ||||||||||||||
தரையில் வீழ்ந்தான்.
தும்பீரவேடன் |
||||||||||||||
அரசனுடைய உடம்பை எலுமிச்சம்பழத்தைப் | ||||||||||||||
பிழிவதுபோற் கசக்கி விட்டு | ||||||||||||||
மந்தாரலக்ஷ்மியையும்
உடன் கொண்டு |
||||||||||||||
தனது பரிவாரங்களுடன் போய்விட்டான். | ||||||||||||||
ஆபத்து வேளையில் அரசனோடு எஞ்சி | ||||||||||||||
நின்ற சில சந்நியாசிகள் அவனுக்கு | ||||||||||||||
மூர்ச்சை தெளிவித்தார்கள். அப்போது | ||||||||||||||
அவன் அவர்களை நோக்கி மிகுந்த | ||||||||||||||
துக்கத்துடன் கூறுகின்றான் :-- | ||||||||||||||
'அந்தோ! ஐயன்மீர்! நமது காலதோஷத்தைக் | ||||||||||||||
கண்டீர்களா? சண்டையில் தோற்ற என் | ||||||||||||||
சரீரம் மிகத் தளர்ந்தது. அவயவங்களை | ||||||||||||||
அசைக்கக்கூட முடியவில்லை. எனது | ||||||||||||||
சஸ்த்ரங்கள், அஸ்த்ரங்கள், வஸ்த்ரங்கள் | ||||||||||||||
யாவுந் தொலைந்தனவே. கஷ்டம், நான் | ||||||||||||||
ஏன் இன்னும் பிழைத்திருக்கின்றேன். | ||||||||||||||
கங்காதரா! என்னைக் கைவிட்டாயோ? | ||||||||||||||
எவ்வகைத்தான யுத்தத்திலும் எனக்கு | ||||||||||||||
ஒப்பாவார் கூட இதுவரையும் நான் | ||||||||||||||
கண்டதில்லையே! அத்தகைய மஹா | ||||||||||||||
வீரனாகிய என்னைச்
சயித்த அத் தும்பீரன் |
||||||||||||||
என்பான் எவனோ? இந்த லோகத்தானோ? | ||||||||||||||
மற்றெந்த லோகத் தானோ? என்னே அவன் | ||||||||||||||
ஆற்றல்! பாவி, எனது மந்தாரலக்ஷ்மியையுங் | ||||||||||||||
கொண்டு போய்விட்டானே. ஈசா! யான் | ||||||||||||||
பிள்ளைவரங் கேட்க வந்து பெண்டிழந்து | ||||||||||||||
போனேனே. இஃதென்ன காலகதி.' | ||||||||||||||
இங்ஙனந் தன்மனைவியை நினைத்து | ||||||||||||||
நினைத்து, மனம் பதறி அரசன் | ||||||||||||||
புலம்புகின்றான். புலம்பித் தன்னோடு | ||||||||||||||
இருந்தவர்களை நோக்கி, 'அன்பர்களே! | ||||||||||||||
பாகீரதி ஸ்நாநத்தால் வரும் யோகமும் | ||||||||||||||
புண்ணியமும் பெறுதற்கு நான் | ||||||||||||||
பாத்திரனல்லன் போலும். ஜன்மஜன்மமாய்ச் | ||||||||||||||
சேர்ந்த வினைத் தொகுதியோ இங்ஙனந் | ||||||||||||||
தடைசெய்தது? எது எப்படியானாலும் நாம் | ||||||||||||||
உறுதியைக் கைவிடக்கூடாது, எடுத்த | ||||||||||||||
காரியத்தை நிறைவேற்றியே தீர வேண்டும். | ||||||||||||||
ஸ்ரீநாரத முனிவர் உபதேசித்ததை நான் | ||||||||||||||
மறக்கவில்லை. எவ்வகையாலும் காசிக்குப் போதலே | ||||||||||||||
நன்று' எனத் துணிபுடன் கூறித் | ||||||||||||||
தன் தேகநோயையும் புறக்கணித்துப் | ||||||||||||||
புறப்பட்டான். | ||||||||||||||
தலத்தின் சீர்த்தியைப் புகழ்ந்து | ||||||||||||||
அங்கமாலை பாடியும், ஐயா மாயன் | ||||||||||||||
மைத்துனரே! உமது வஞ்சனையை | ||||||||||||||
இன்றறிந்தேன். உம்மைப்போல் என்னையும் | ||||||||||||||
ஆக்கிவிட்டீரே!
பிச்சை யெடுக்கச் செய்தீரே! |
||||||||||||||
விபூதியின்றி வேறு அணிகலனில்லாது | ||||||||||||||
போம்படி
செய்தீரே! கோவணமின்றி வேறு |
||||||||||||||
ஆடை இல்லா திருக்கவுஞ் செய்தீரே. | ||||||||||||||
நன்று! நன்று! என அவரை வசை பாடியும், | ||||||||||||||
வழியின் கஷ்டத்தை மறப்பான். | ||||||||||||||
இங்ஙனம் பன்னாள் காடு, மலை, ஆறு | ||||||||||||||
முதலியவற்றைக் கடந்து கண்டவர்க்குக் | ||||||||||||||
களிப்பளிக்குங் கங்கைக் கரையைக் | ||||||||||||||
கண்டான்; பேராநந்தங் கொண்டான்; | ||||||||||||||
குனிப்பான்; [24] சிரிப்பான்; களிப்பான்; | ||||||||||||||
யானுங் கங்கைக் கரையைக் கண்டேனே, | ||||||||||||||
கண்டேனே' எனப்பூரித்து மனமகிழ்ந்து | ||||||||||||||
சாட்டாங்க நமஸ்காரஞ் செய்தெழுந்து, | ||||||||||||||
சகல லோகத்தவரும் வணங்குகின்ற | ||||||||||||||
தேவதே! யான் உன்னை வணங்குகின்றேன். | ||||||||||||||
ஆகாச கங்கையே போற்றி போற்றி! | ||||||||||||||
லோகமாதாவே போற்றி போற்றி! அன்னாய்! | ||||||||||||||
கங்காதேவி உனது பெருமையை யான் | ||||||||||||||
என்னென் றெடுத்துரைப்பேன்' எனப் | ||||||||||||||
பலவாறு புகழ்ந்து துதிக்கின்றான் | ||||||||||||||
இங்ஙனம் கங்கையை ஸ்தோத்திரஞ் | ||||||||||||||
செய்து அதின் மூழ்கி, கயாசிரார்த்தத்தையுஞ் | ||||||||||||||
செய்து, முன் ஜன்மத்தில் அவ்வழிப்போக்கர் | ||||||||||||||
தனக்கு அளித்த பலனுக்குக் கைம்மாறான | ||||||||||||||
பிரதி பலனையுந் தந்து கங்கைக் | ||||||||||||||
கரையோரமாய்ச் செல்லும்போது காணுதற் கரிய | ||||||||||||||
ஸ்ரீ காசி மாநகரைக் கண்டான். | ||||||||||||||
கண்டதும் பேருவகை கொண்டான். | ||||||||||||||
பொன்மயமான மாடமாளிகைகளும், | ||||||||||||||
ரத்நசிகரங்களும், ரத்ன தோரணங்களும், | ||||||||||||||
யாண்டும் பேரொளி வீசுதலைக் | ||||||||||||||
கண்ணுற்றுப் பேராநந்தம் அடைந்தான். | ||||||||||||||
சுற்றிலும் விஷ்ணு,
வைரவன், சூரியன், |
||||||||||||||
சந்திரன் முதலியோருடைய ஆலயங்கள் | ||||||||||||||
விளங்க, அவற்றின் மத்தியில் எமது | ||||||||||||||
விசுவேசரது திருக் கோயிலானது செவ்விய | ||||||||||||||
ரத்தினக் கல்லாலாகிய ஒரு பதக்கத்தில் | ||||||||||||||
நடுநாயகமாய்ப் பதித்துள்ள விலையிலா | ||||||||||||||
வைரக்கல் போலத் திகழா நின்றது. | ||||||||||||||
காசி மாநகர் எங்கும் சிவமயமாய்ப் | ||||||||||||||
பொலிந்திருந்தது. திருநீறு, ருத்திராக்ஷம், | ||||||||||||||
புலித்தோல் ,கட்டுவாங்கம், சூலம் முதலிய | ||||||||||||||
கொண்டுள்ள முநிவரர் குழாம் ஒருபால்; | ||||||||||||||
சிவநாம சங்கீர்த்தனஞ் செய்யும் பக்தர் | ||||||||||||||
குழாம் ஒருபால்;
திருக்கோயிலுக்குப் பூத் |
||||||||||||||
தொடுப்பார் ஒருபால்; அலகிடுவார் ஒருபால்; ' | ||||||||||||||
இன்னிசை வீணையர்
யாழின ரொருபால்; |
||||||||||||||
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் | ||||||||||||||
ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் |
||||||||||||||
ஒருபால்; தொழுகைய ரழுகையர் |
||||||||||||||
துவள்கைய ரொருபால்'--ஆக இவ்வாறு | ||||||||||||||
சாரூப சாம்பிராச்சிய
பதவியில் வாழுங் |
||||||||||||||
கோடா கோடி, பக்த ஜனங்களைக் | ||||||||||||||
கண்ணுற்ற அரசன் புளகாங்கிதனாய்ப் | ||||||||||||||
பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி, | ||||||||||||||
மனமகிழ்ந்தான். | ||||||||||||||
பின்பு கங்கையில்
ஸ்நாநஞ் செய்து, விபூதி, |
||||||||||||||
ருத்தி ராக்ஷமணிந்து, விசுவநாதரது | ||||||||||||||
திருக்கோயிலை வலம் வருங்கால், | ||||||||||||||
கங்காநதி பாரிசத்தில்
விசித்திர மண்டபம் |
||||||||||||||
ஒன்றில் தென்றற் காற்றின் சுகத்தை | ||||||||||||||
ஏற்றுக்கொண்டு தனது மனைவியாகிய | ||||||||||||||
மந்தாரலக்ஷ்மி ஓர் சிங்காதனத்தில் | ||||||||||||||
வீற்றிருப்பதைக் கண்டான்; கண்டதும் | ||||||||||||||
பிரமித்தவனாய், 'இஃதென்னை! மாயையோ | ||||||||||||||
அல்லது கனவோ! தும்பீர வேடன் தூக்கிச் |
||||||||||||||
சென்ற எனது கண்மணி மந்தாரலக்ஷ்மியை | ||||||||||||||
ஈண்டுக் காண்கின்றேனே! அற்புதம்! | ||||||||||||||
அற்புதம்! உமாபதீ!
இதனை உருவெளித் |
||||||||||||||
தோற்றமாக்கி விடாதே! பார்வதி பாகா! | ||||||||||||||
இவ்வுருவை மாயையாக்கி விடாதே! | ||||||||||||||
உனதருளின் பிரபாவத்தை ஒளிக்காதே. | ||||||||||||||
அந்தகாசுரனைச் செற்ற அண்ணலே! உன் | ||||||||||||||
கிருபா பிரபாவத்தால்
ஐந்து வர்க்கங்களில் |
||||||||||||||
என்ன அதிசய விளைவுதான் உண்டாகாது?' | ||||||||||||||
என்று சொல்லி அற்புத மனத்தனாய் | ||||||||||||||
நிற்கும்போது,
கருணாகர மூர்த்தியாகிய |
||||||||||||||
விசுவேசர் இடபவாகன ரூடராய்ப் | ||||||||||||||
பிரத்தியக்ஷமாயினர். | ||||||||||||||
விசாலாக்ஷியம்மையார் தமது இடப் | ||||||||||||||
பாகத்தில் விளங்கவும், கங்காதேவியும் | ||||||||||||||
இளம்பிறையும் சடைமீது பொலியவும், | ||||||||||||||
விநாயகக் கடவுளும்
வேற்கரத் தண்ணலும் |
||||||||||||||
தமது அருகிற்
றிகழவும், விஷ்ணு, பிரமன், |
||||||||||||||
இந்திரன் முதலிய தேவர் தலைவரும், | ||||||||||||||
அகத்தியர், பிருகு ஆகிய முநிபுங்கர் சூழவும், | ||||||||||||||
சித்தர், வித்தியாதரர், கின்னரர், இயக்கர் | ||||||||||||||
முதலிய பதினெண் கணங்களும் தமது | ||||||||||||||
புகழை எடுத்தோதவும், நாரதர், தும்புரு | ||||||||||||||
ஆகிய இருவரும் இன்னிசை பயக்கும் | ||||||||||||||
யாழும் வீணையும் வாசிக்கவும், பேரற்புத | ||||||||||||||
கோலத்தோடு எம்பிரான் விளங்குவதைக் | ||||||||||||||
கண்ட அரசன் ஆநந்த பரவசனாய்க், | ||||||||||||||
கைகளுந் தலைமீ தேறக் கண்ணில் | ||||||||||||||
ஆநந்த வெள்ளம் மெய்யெலாம் பொழிய, | ||||||||||||||
வேத முதல்வரைப் பணிந்து போற்றி, | ||||||||||||||
ஐயனே! அடியனேனை அஞ்சல் என்றருள | ||||||||||||||
வல்ல மெய்யனே!' எனத் துதித்துப் | ||||||||||||||
பாடினான்; பரவினான்; பணிந்தான். | ||||||||||||||
அப்போது கங்காதேவி ஞெரேலென | ||||||||||||||
இறங்கி மந்தார லக்ஷ்மியின் கரத்தைத் | ||||||||||||||
தனது திருக்கரத்தாற் பற்றிக் கொண்டு, | ||||||||||||||
சிம்ஹத்வஜ! வருக! உன் மனைவியைக் கொள்க!' |
||||||||||||||
எனத் திருவாய் மலர்ந்தருள, | ||||||||||||||
அரசனும் உவப்புடன் சென்று கங்கா | ||||||||||||||
தேவியை வணங்கித் தனது மனைவியைப் | ||||||||||||||
பெற்றுக் கொண்டு, கருணாநிதியாகிய | ||||||||||||||
கண்ணுதற் கடவுளைத் துதிக்கின்றான்: | ||||||||||||||
மெய்யன்போடு துதித்தலைக் கேட்ட | ||||||||||||||
சிவ பெருமான் அரசனை நோக்கி, | ||||||||||||||
'சிம்ஹத்வஜ! நமது கண நாதனாகிய | ||||||||||||||
நந்திகேசுரனைத் தும்பீரன் என்னும் | ||||||||||||||
வேடனாக அனுப்பி உனது தரும | ||||||||||||||
பத்தினியை ஈண்டுக் கொணர்வித்ததும், | ||||||||||||||
சண்டையில் உனது நிதி முதலியவற்றைக் | ||||||||||||||
கவர்வித்ததும் நாமே. இங்ஙனம் அச்சுறுத்தி | ||||||||||||||
வெருட்டினால் வந்தவழியே திரும்பிப் | ||||||||||||||
போய்விடுவாயோ அல்லது உறுதியோடும் | ||||||||||||||
அன்போடும் இந்த க்ஷேத்திரத்திற்கு | ||||||||||||||
வருவாயோ என உன்னைப் பரீக்ஷித்தோம். | ||||||||||||||
எமக்கு இப்போது முற்றுஞ் சந்தோஷமே. | ||||||||||||||
நீ புத்திமான்,
தைர்யசாலி. இப்போது நீ கயா |
||||||||||||||
சிரார்த்தம் செய்தமையால் உன் பாபம் | ||||||||||||||
எல்லாம் அறவே ஒழிந்தன. அதுவுமன்றி, | ||||||||||||||
முன் பிறப்பில் தனது சிரார்த்த பலனில் | ||||||||||||||
உனக்கு ஒருகூறு கடன்
கொடுத்த வழிப் போக்கனும் |
||||||||||||||
நமது கணங்களில் | ||||||||||||||
ஒருவனாவான். இனி நீ பாரியாஸமேதனாய் | ||||||||||||||
உன் ஊருக்குப்
போகலாம். இனி உனக்கு |
||||||||||||||
நன்மையே வரும். இன்னும் பன்னீராயிர | ||||||||||||||
வருடம் இப் பூவுலகைப் பரிபாலிப்பாய். | ||||||||||||||
உனக்கு ஓர் அருமைப் புதல்வன் பிறப்பான். |
||||||||||||||
நீ கவற்சியுற வேண்டாம். ஈற்றில் நீங்கள் |
||||||||||||||
எமது லோகத்தை
அடைவீர்கள். மந்தார லக்ஷ்மியும் |
||||||||||||||
நீயும் இம் மந்தாகினியில் | ||||||||||||||
முழுகுவீரானால் உங்கள் நகரத்து | ||||||||||||||
அரண்மனை வாவிக் கரையில் எழுவீர்கள். | ||||||||||||||
உங்களுக்கு என்றும் மங்களமே" | ||||||||||||||
எனத்திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். | ||||||||||||||
வெகு விநயத்தோடு சுவாமியின் | ||||||||||||||
திருவார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்த | ||||||||||||||
அரசன் ஆநந்தக் கடலுள் திளைத்து, | ||||||||||||||
யார்க்கும், முன்னவனே முன்னின்றால் | ||||||||||||||
முடியாத பொருளுளதோ' என வியந்து | ||||||||||||||
களிகூர்ந்தான். | ||||||||||||||
சிம்ஹத்வஜன் பலநாள் அம் மஹா | ||||||||||||||
க்ஷேத்திரத்திற்றங்கி யிருந்து அந்நகர் | ||||||||||||||
முழுமையுந் தரிசித்துத் | ||||||||||||||
துண்டி விநாயகரையும், | ||||||||||||||
கதிர்காம வேலவரையும் வணங்கிப்போற்றி, | ||||||||||||||
விசுவநாதரையும் | ||||||||||||||
விசாலாக்ஷியம்மையையும் பன்முறை | ||||||||||||||
தாழ்ந்து வணங்கி, தோத்திரஞ் செய்து | ||||||||||||||
பிரியா விடை பெற்றுச், சிவபெருமானைச் | ||||||||||||||
சிந்தித்தவனாய்ச் தனது மனைவியோடு | ||||||||||||||
மந்தாகினியில் முழுகுதலும், தங்கள் | ||||||||||||||
ஊரிலுள்ள மாளிகை வாவிக் கரையில் | ||||||||||||||
யாவரும் வியக்கும்படி இருவரும் | ||||||||||||||
எழுந்தார்கள். | ||||||||||||||
அரசனுக்கும் இறைவன் ஆக்ஞையின்படி | ||||||||||||||
ஓர் ஆண் குழந்தை
பிறந்தது. அது வெகு |
||||||||||||||
திவ்விய ரூபத்தோடு பொலிந்தது. அரசன் | ||||||||||||||
அக் குழந்தைக்குத் தாலத்துவஜன் | ||||||||||||||
என்ற நாமகரணஞ் செய்தான். பின்னர் | ||||||||||||||
கால முறையில் தனது மகனுக்குப் | ||||||||||||||
பட்டங்கட்டி முடியுஞ் சூட்டினான். | ||||||||||||||
தாலத்வஜன் மன்னுயிர்களைத் | ||||||||||||||
தன்னுயிரெனக் கருதிச் செங்கோல் | ||||||||||||||
செலுத்தி உலகைப் புரந்து வருதலைக் | ||||||||||||||
கண்டு அரசன் பேருவகை பூத்தான். | ||||||||||||||
பன்னீராயிர வருட முடிவில் | ||||||||||||||
சிம்ஹத்வஜனும் மந்தாரலக்ஷ்மியும் | ||||||||||||||
சிவபிரான் றிருவடி நீறலிற் சேர்ந்தனர். | ||||||||||||||
இருவரும் 'அவன் அருளாலே அவன்றாள் | ||||||||||||||
வணங்கி' அழியாப் புகழுக்குப் | ||||||||||||||
பாத்திரரானார்கள். தாலத்வஜனும் பன்னாள் | ||||||||||||||
இவ்வுலகை ஆண்டிருந்து அரன் | ||||||||||||||
சேவடியடைந்தான். | ||||||||||||||
காசித்தலத்தின் அருமையையும் கங்கா | ||||||||||||||
நாயகன் பெருமையையும் எடுத்தோதும் | ||||||||||||||
இக்கதையைக் கேட்போர்க்கு அழியா | ||||||||||||||
மேன்மை உண்டாகும்; அவர்செய்த | ||||||||||||||
பாபங்களெல்லாம் நசிக்கும்; புகழும் | ||||||||||||||
புண்ணியமுந் தோன்றும்; | ||||||||||||||
என்றும் சிவம் பெருகும். | ||||||||||||||
இங்ஙனம் சிவபக்த சிரோமணியாகிய | ||||||||||||||
சூதமுநிவர்; இக்கதையைப் பத்திச்சுவை | ||||||||||||||
நனி சொட்டச் சொட்டச் சொல்லியருள, | ||||||||||||||
நைமிசாரணிய முநிவர்களும் அன்பினால் | ||||||||||||||
மனமுருகி 'அரகர' என்று சொல்லித் | ||||||||||||||
தொழுதார்கள். | ||||||||||||||
Subscribe to:
Posts (Atom)