Friday, 24 January 2014

விபூதி தரிக்கும் முறை

விபூதி  தரிக்கும்   முறை.


கங்காளன்  பூசும்  கவசத்  திருநீற்றை  

மங்காமல்  பூசி  மகிழ்வரே  யாமாகில் 

தங்கா  வினைகளும்  சாரும்  சிவகதி 

சிங்கார மான  திருவடி  சேர்வரே
--திரு மூலர்.

ஏதோ  பூசுகிறோம்  என்றில்லாமல் ,  அது  ஒரு  மாபெரும்  கவசம்
என்ற  நினைவுடன்,  பயபக்தியுடன்  அதற்குரிய  இடங்களில்  திருநீறு  அணிவது  மிகுந்த நலம்  பயக்கும்.

1.   சிரசு  நடுவில்
2.   நெற்றி
3.  மார்பு
4.  தொப்புளுக்கு  சற்று மேலே
5.  இடது  புஜம்
6.  வலது  புஜம்
7.  இடது  கை  நடுவில்  ( மூட்டு )
8.  வலது  கை  நடுவில்
9.  இடது கை  மணிக்கட்டு
10. வலது  கை  மணிக்கட்டு
11. இடது  இடுப்பு
12. வலது  இடுப்பு
13. இடது கால்  நடுவில்  ( முழங்கால் )
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்கு  கீழே
16. கண்டத்தைச் சுற்றி  ( கழுத்து முழுவதும், முன்பக்கமும், பின்பக்கமும் )
17. வலது காதில்  ஒரு பொட்டு
18. இடது காதில்  ஒரு  பொட்டு .


திருமேனி  தானே  திருவருள்  ஆகும் 
திருமேனி   தானே  திருஞானம்  ஆகும் 
திருமேனி  தானே  சிவநேயம்  ஆகும் 
திருமேனி  தானே  தெளிந்தார்க்கு  சித்தியே 
-- திரு மூலர்.


திருச்சிற்றம்பலம்.






No comments:

Post a Comment