திருவதிகை |
இறைவன் பெயர் : அதிகை வீரட்டேஸ்வரர் |
இறைவி பெயர் : திரிபுரசுந்தரி |
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் |
மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும் |
தல புராண வரலாறு: |
சிவபெருமானின்
வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் |
திரிபுர சம்ஹாரம் செய்தார்.
வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே |
பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். |
இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் |
செல்ல வசதியாக
சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். |
தேவர்கள் அசுரகள் தொல்லை பொறுக்கமுடியாமல் |
சிவபெருமானிடம்
முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, |
நான்கு
வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் |
போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் |
சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. |
இறைவன் இவ்வாறு
ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார். தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை |
என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்து, தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும் |
,சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும்,
சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் |
ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார். |
அவர் சிரித்த
உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை. |
திருநாவுக்கரசர்: |
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு |
மகளாக திலவதியும்,
மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் |
ஈடுபாடு கொண்டு சமண
சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வருகிறார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட |
கலிப்பகையார் போரில் இற்ந்துபோக, இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து |
இறைப்பணி செய்து வாழ்ந்து வருகிறார்.
தம்பி சமண மதத்தில் இருந்து விலகி சைவ சமயம் சார |
அருள்புரிய வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். |
இந்நிலையில் தம்பி
தருமசேனரை கொடிய சூலைநோய் தாக்குகிறது. சூலைநோயின் கொடுமை தாங்க முடியாமல் |
தம்பி
துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிச் சென்று அங்குள்ள |
திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் |
கூற்றாயின வாறு விலக்ககிலீர் |
கொடுமைபல செய்தன் நான் அறியேன் |
ஏற்றாய அடிக்கே இரவும் பகலும் |
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் |
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே |
குடரோடு துடக்கி முடக்கியிட |
ஆற்றேன் அடியேன் அதி கைக்கெடில |
வீரட்டானத் துறை அம்மானே |
என்ற பாடலுடன்
தொடங்கும் பதிகத்தைப் பாடி சூலை நோய் நீங்கப் பெற்றார். மேலும் நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு |
தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் |
சைவ
சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் |
பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும். |
கோவில் அமைப்பு: |
கோவில் சுமார் 7
ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடனும், 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. |
கோயிலுக்கு முன்னால் பதினாறுகால் மண்டபம் உள்ளது. |
இதைத் திருநீற்று
மண்டபம் என்றழைக்கிறார்கள். இம்மண்டபத் தூண்களில் ரிஷபாரூடர், அப்பர், மயில் வாகனன் முதலிய சிற்பங்களும், |
இக்கோயிலைத் திருப்பணி செய்வித்த செட்டியார் சிற்பங்களும் உள்ளன.
கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் |
108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில்
பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். |
வலப்பக்கத்தில் சற்று உயரத்தில்
திரிபுமெரித்த கோலம் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. |
அதன் கீழ் கஜசம்ஹாரகோலம். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழந்தவுடன் |
உட்புறத்தில்
மற்றொரு பதினாறுகால் மண்டபம் உள்ளது. திறந்த வெளி முற்றத்தின் தென்பக்கம் சங்கர தீர்த்தமும், |
வடப்பக்கம் 5 அடி உயரமுள்ள பத்மாசனக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. |
2வது கோபுர வாயிலின் வெளிப்புறம் விநாயகர், கொடிமரம், பலிபீடம் ஆகியவை உள்ளன. |
5 நிலைகளையுடைய
இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய நந்தியின் உருவசிலைக் காணப்படுகிறது. |
ஒருபுறம் முருகப் பெருமானும், மறுபுறம் கணபதியும் காட்சியளிக்கின்றனர். |
2வது சுற்றின் தென்புறத்தில்
திருநாவுக்கரசருக்கும், அவர் தமக்கை திலகவதிக்கும் தனித் தனியாக சந்நிதி உள்ளது. |
அதற்கடுத்து பைரவர், சனீஸ்வரர், மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன.
அதன்பின் இறைவி பெரியநாயகி சந்நிதி இருக்கிறது |
. அம்பிகையின் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். |
விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் நம் கருத்தைக் கவரும். |
இவைகளில் பிரச்சித்தமான வடிவம் திரிபுராந்தகர் சிற்பம். 12 திருக்கரங்கள், சூலம் ஏந்திய கை ஒன்று, |
வில்லேந்திய கை ஒன்று, ஒரு கால் தேர்த்தட்டிலும், மற்றொரு காலை உயர்த்தியும் . |
வில் வளைத்து நிற்கிறார் |
3வது சுற்றில் தான்
மூலவர் அதிகை வீரட்டேஸ்வரர் சந்நிதி இருக்கிறது. கருவறையில் காட்சி அளிக்கும் வீரட்டேஸ்வரர் |
16
பட்டைகளுடன் கூடிய சுயம்பு லிங்கம் ஆவார். இவருக்குப் பின்னால் கருவறைச் சுவற்றில் |
பார்வதி, சிவன் கல்யாணத் திருக்கோலம் காட்சி
தருகிறது. மூலஸ்தானத்தின் மேல் உள்ள விமானம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. |
இறைவன் கருவறை விமானம் நிழல் பூமியில் சாயாதபடிக் கட்டப்பட்டுள்ளது.
கருடன், பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர் ஆகியோர் |
இத்தலத்தில் வீரட்டேஸ்வரரை பூஜித்திருக்கின்றனர். |
உள் சுற்றின்
தென்மேற்கே உள்ள பஞ்சமுக லிங்கம் காணவேண்டிய ஒன்று. இதுவம் பல்லவர் காலத்தைச் சார்ந்தது. |
இத்தகைய
பஞ்சமுக லிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது. மூன்று திக்குகளை நோக்கி நானகு முகங்கள் உள்ளன. |
ஒரு முகம் மேல் நோக்கி உள்ளதாக ஐதீகம். எனவே பஞ்சமுக லிங்கம் என்று கூறுவர். |
இது
ஒரு அரிய தரிசனம் ஆகும். வரிசையாகப் பல சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. |
யாகசாலை, நவக்கிரக சந்நிதிகளையடுத்து, நடராச சபை உள்ளது. |
இத்தலத்து
முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. |
இத்தலத்தில் ஆறுமுகப் பெருமான் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார் |
. உற்சவரும் தன் இரு தேவியருடன் சணமுகப் பெருமானாகக் காட்சி தருகிறார். |
திருநாவக்கரசர்
உழவாரப்பணி செய்த இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் .தங்கி |
இத்தலப்
பெருமானை வழிபட்டார். சுந்தரர் இரவு மடத்தில் தூங்கிக் கொண்டு இருந்த போது அவரின் மேல் யாரோ காலால் இடிப்பது தெரிந்து |
சுந்தரர் நகர்ந்து படுத்தார். மீண்டும் யாரோ அவர் தலையில் கால் படும்படி படுக்க |
,
சுந்தரர் எழுந்து காலால் தலையை தீண்டியவரை கடுமையாகப் பேச, பின் இறைவன் தான் இவ்வாறு திருவிளையாடல் செய்துள்ளார் |
என்பதைப் புரிந்து கொண்டு அவரை வணங்கினார்.
இவ்வாறு சுந்தரர் இறைவனிடம் திருவடி தீட்சை பெற்றதும், |
பல்லவனான மகேந்திர வர்மனின் மனத்தை மாற்றிச் |
சமணபள்ளிகளை
இடித்துக் குணபரவீச்சரம் என்ற கோவிலை எழுப்பச் செய்ததும் இத்தலத்தின் பெருமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகளாம் |
Saturday 5 March 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment