திருப்புன்கூர் |
இறைவன் பெயர் : சிவலோகநாதர் |
இறைவி பெயர் : சௌந்தர நாயகி, சொக்கநாயகி |
வைத்தீஸ்வரன்
கோவிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் மேற்கே 3 கி.மி. சென்றால் ஒருபுறம் திருப்புன்கூர் கைகாட்டியும், |
மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவும் உள்ளது. |
அதனுள் -
அச்சாலையில் 1.5 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. |
கோயில் வரை வாகனங்கள் செல்லும். |
இவ்வாலயம்
தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
புங்க மரத்தடியின்
கீழே சிவபெருமான் தரிசனம் கொடுப்பதால திருப்புன்கூர் என்று இத்தலம் வழங்கப்படுகிறது. |
திருநாளைப் போவார்
நாயனார் (நந்தனார்) தம்மை நேராக தரிசனம் செய்து வணங்கும் பொருட்டு இத்தலத்து இறைவன் சிவலோகநாதர் |
தமக்கு முன்னால் அமர்ந்திருந்த நந்தியை சிறிது விலகி இருக்குமாறு
செய்தருளிய தலம் திருப்புன்கூர். |
நந்தனார் கீழ் குலத்தில் பிறந்தவராதலால் ஆலயத்திற்குள்
செல்வதற்கு அனுமதி இல்லாததால் வெளியில் இருந்தே வழிபடுவார். |
அப்போது இறைவன் முன் இருக்கும் நந்தி நன்றாக அவர் இறைவனைப் பார்க்க முடியாமல் மறைக்கும். |
அதற்காக கவலைப்பட்டு ஆதங்கப்பட்ட அவருக்கு |
தரிசனம் கொடுக்க
நந்தியை விலகச் சொல்லி நந்தனாரின் பக்தியை உலகிற்கு எடுத்துக் காட்டிய தலம். |
எல்லா சிவன்
கோவில்களிலும் உள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரியும்படி இருக்கும்.
ஆனால் நந்தனாருக்காக விலகிய இங்குள்ள நந்தியின் நாக்கு வெளியில் தெரிவதில்லை |
.இங்குள்ள நந்திகேஸ்வரர் மிகவும் அழகிய வேலைப்பாடுடன் |
ஒரே கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்ட சிறப்புடையதாகும். மேலும் |
இத்தலத்தில்
ஆலயத்தின் மேற்புறம் உள்ள ரிஷப தீர்த்தம் நந்தனாருக்காக விநாயகர் ஒரே இரவில் |
வெட்டிய குளம் என்ற பெருமையுடையதாகும். |
கோவில்
அமைப்பு: மூவர்
பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் ஒன்றான இவ்வாலயம் ஒரு 5 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிராகாரங்களுடனும் காட்சி அளிக்கிறது. |
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் |
விசாலமான திறந்த
முற்றவெளி உள்ளது. வெளிப்பிராகாரத்தில் குளம் வெட்டிய விநாயகர் சந்நிதியும், |
சுப்பிரமணியர்
சந்நிதியும் தலமரமும் பிரம்மலிங்கமும் உள்ளன. கவசமிட்ட கொடிமரத்தையும், பெரிய நந்தியையும் (சற்று விலகியுள்ளது) |
கடந்து சென்றால் உள் வாயிலை அடையலாம். உள்வாயிலின் மேற்புறத்தில் |
வண்ணச்சுதையில்
பஞ்சமூர்த்திகள் காட்சி தருகின்றனர். துவார விநாயகரை வணங்கி உள்வாயிலைக் கடந்தால் |
உள்பிராகாரத்தில் இடப்பால் சூரியன், நால்வருடன் கலிக்காமரும் சேர்ந்த சந்நிதி.
சுந்தரவிநாயகர் சந்நிதி முதலியவை உள்ளன. |
அடுத்துள்ள
சோமாஸ்கந்தர் - பெரிய திருமேனி இத்தலத்திற்குரிய தனிச்சிறப்பு -
தரிசிக்கத்தக்கது. |
அடுத்து சூரியன்
அக்கினி வழிபட்ட லிங்கங்கள். ஆறுமுகர்சந்நிதி, தத்புருஷ், அகோர, வாமதேவ, சத்யோஜாத |
முகங்களின் பெயரில்
அமைந்துள்ள லிங்கபாணங்கள், கஜலட்சுமி முதலிய சந்நிதிகள் உள்ளன. |
இடதுபுறம் அம்பாள்
சந்நிதி தனியாக வலம் வரும் அமைப்புடன் உள்ளது. நவக்கிரகம், பைரவர், சந்திரன் சந்நிதிகளைத் தொழுது வலம் முடித்துச் சென்றால் |
நேரே சுவாமி சந்நிதி. மூலவர் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். |
இங்குள்ள சிவலிங்கம் மண் புற்றினால் ஆன சுயம்பு மூர்த்தியாகும்.
சுயம்பு லிங்கத்தின் மீது குவளை சார்த்தியே காணப்படுகிறார். |
புணுகு சட்டம் சார்த்தும் நாளில் மட்டும்
கவசமின்றி மூலவரை தரிசிக்கலாம். |
இறைவன் கருவறை கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், பிட்சாடனர், அகத்தியர், |
தட்சிணாமூர்த்தி,
இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் ஆகியோர் உள்ளனர். பிரம்மா, இந்திரன், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர் மற்றும் |
ஏயர்கோன் கலிக்காம நாயனார், விறல் மீண்டர் ஆகியோர் |
இத்தலத்து இறைவனை
வழிபட்டுப் பேறு பெற்றிருக்கின்றனர். இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அம்பாள் சொக்கநாயகியின் சந்நிதி தனிக்கோவிலாக |
ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது |
சுந்தரர்
பதிகம்: ஒருமுறை சுந்தரரும் அவரது நண்பருமான ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் இத்தலத்திற்கு |
வருகை புரிந்தனர்.
அச்சமயம் திருப்புன்கூரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பல காலமாக மழையின்றி இருந்ததால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். |
இப்பகுதியை அரசாண்டு வந்த மன்னரிடம் 12 வேலி நிலம் |
ஆலயத்திற்குக்
கொடுத்தால் மழை பெய்யும் என்று சுந்தரர் கூற அரசனும் சம்மதித்தான். அதன்படி சுந்தரர் பதிகம் பாடி மழை பெய்யச் செய்தருளி |
12 வேலி நிலமும், பிறகு விடாது பெய்த மழையை நிறுத்த 12 வேலி நிலமும் மன்னனிடம் பெற்று இந்த திருப்புன்கூர் கோவிலுக்குச் சேர்த்தார். |
இந்த வரலாற்றை
சுந்தரர் "அந்தணாளன் உன அடைக்கலம் புகுந்த" என்று தொடங்கும் தனது பதிகத்தின் |
2-வது பாடலில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். |
வையகம் முற்றும் மாமழை மறந்து |
வயலில் நீர்இலை மாநிலம் தருவோம் |
உய்யக் கொள்கமற் றெங்களை என்ன |
ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந் தெங்கும் |
பெய்யும் மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப் |
பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளும் |
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன் |
செழும்பொ ழிற்றிருப் புன்கூருளானே. |
சிவபெருமான்
திரிபுரத்தை எரித்தபோது அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை தனது திருக் கோயிலின் |
வாயில்
காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை தான் தடனம் ஆடும்பொது அழகிய மத்தளத்தை |
முழக்கும்படி
அருள்செய்தார். சுந்தரர் தனது பதிகத்தின் 8-வது பாடலில் இதைக் குறிப்பிடுகிறார். |
திரிபுர
அசுரர்களுக்கு அருள் செய்ததை அறிந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன், என்னை ஏற்றுக் கொண்டருள் என்று தனது பாடலில் இறைவனை வேண்டுகிறார். |
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில் |
இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல் |
காவ லாளர்என் றேவிய பின்னை |
ஒருவன் நீகரி காடரங் காக |
மானை நோக்கியோர் மாநடம் மகிழ |
மணிமு ழாமுழக் கவருள் செய்த |
தேவ தேவநின் திருவடி யடைந்தேன் |
செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே |
இத்தலத்திலுள்ள
நடராச சபையில் உள்ள நடராச வடிவம் கலையழகு வாய்ந்தது. இத்தலத்தில் சுந்தரர் பதிகத்தில் கூறியபடி |
நடராஜப் பெருமான் பாதத்தில் ஓர் உருவம் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் |
பஞ்சமுக வாத்யத்தை அடித்து மணிமுழா முழக்குவதைக் காணலாம். |
( திருச்சிற்றம்பலம் ) |
Saturday 5 March 2016
Subscribe to:
Post Comments (Atom)
தமிழன் திரட்டி www.tamiln.in
ReplyDelete