திருவெண்ணைநல்லூர் |
இறைவன் பெயர் :
தடுத்து ஆட்கொண்ட நாதர், கிருபாபுரீஸ்வரர், வேணுபுரீஸ்வரர் |
இறைவி பெயர் : வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை |
திருக்கோவிலூரில்
இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றின் தென்கரையில் |
திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. |
திருக்கோவிலூரில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். |
இவ்வாலயம்
தினந்தோறும் காலை 6-00 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5-00 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
ஆலய தொடர்புக்கு: 93456 60711 |
இத்தலத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். |
கிழவராக வந்து , சிவா லிங்கத்தில் ஐக்கியமாகும் முன் , கருவறை வாசலில் |
சிவபெருமான் கழற்றி வைத்த பாதுகைகள் இன்றும் இத்தலத்தில் உள்ளது. |
சுந்தரருக்கும்,
கிழவராக வந்த சிவபெருமானுக்கும் பெரியோர்களால், பஞ்சாயத்து நடத்தப்பட்ட மண்டபம் இன்றும் உள்ளது. |
பரமன் சாய்ந்திருந்த தூண் இன்றும் வெதுவெதுப்பாக உள்ளது. |
அருச்சுனனுக்கு மகப்பேறு அளித்த விஜய லிங்கம் உள்ளது. |
தேவேந்திரன் பூஜித்த சுந்தர லிங்கம் உள்ளது. |
மஹாவிஷ்ணு பூஜித்த சங்கர லிங்கம் உள்ளது. |
தன்
மீது திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு , முருகன் மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம் இது. |
தருமனும், பாஞ்சாலியும் தனித்திருந்ததை பார்த்ததால் உண்டான பாவத்தை , |
அருச்சுனன், இங்கு இறைவனை நோக்கி தவமிருந்து போக்கிக் கொண்டான். |
கருவுற்ற பசுவை வேள்வி செய்த
பாவத்தை, வித கோத்திரர் எனும் அந்தணர் , இங்கு வந்து அருள்துறை தீர்த்தத்தில் நீராடி, |
இறைவனை பாடி பணிந்து போக்கிக் கொண்டார். |
மகிஷனை
வதம் செய்த ஆக்ரோஷம் தீர நதியில் குளித்து , மங்களம் பெற்றதால் , அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர் . |
அம்பிகை , நான்கு திருக்கரங்களுடன் , நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். |
சங்கநிதி,
பதும நிதி, ஸ்ரீ சக்கரத்துடனும், சிம்ம வாகனத்துடனும் இருக்கும் |
அம்பிகையை
தரிசனம் செய்வது என்பது, முற்பிறவியின் பயனே ! |
தல புராணம் |
திருமண
நாளன்று, திரு நாவலூரில் திருமணக்கோலத்தில் இருந்த சுந்தரரை, ஈசன் தடுத்து ஆட்கொள்கிறார். |
சுத்தரருக்கும்,
சிவபெருமானுக்கும் வழக்கு நடந்த இடம் இதுவே. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர், |
" பித்தா பிறை சூடி " என்ற புகழ்பெற்ற பாடலை பாடிய தலம் இதுவே. |
தாருகாவனத்து
முனிவர்கள் இறைவனை கொல்ல , வேள்வியில் தோன்றிய யானையை ஏவினர். |
அவர்கள் எண்ணம்
ஈடேரவில்லை. அவர்கள் ஆணவம் அழிந்து, இத்தலத்தில், இறைவனை நோக்கி தவம் புரிந்தனர். |
இறைவனும்,
அவர்களின் தவறை மன்னித்து அருள் புரிந்தார். எனவே இத்தலம் அருள் துறை என பெயர் பெற்றது. |
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா |
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை |
வைத்தாய் - பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் |
அத்தா உனக் காளாய் இனி அல்லேன் எனலாமே. |
திருப்புகழ் |
தனதன தத்தன தனதன தத்தன |
தனதன தத்தன தனதன தத்தன |
தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான |
......... பாடல் ......... |
பலபல தத்துவ மதனையெ ரித்திருள் |
பரையர ணப்படர் வடவன லுக்கிரை |
படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் |
பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு |
பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு |
பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே |
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத |
வொலிமலி யத்திரு நடனமி யற்றிய |
கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் |
கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ |
டனகச கத்துவம் வருதலு மிப்படி |
கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே |
புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை |
நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர |
புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே |
புனமலை யிற்குற மகளய லுற்றொரு |
கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய |
புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா |
மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை |
கிழவிய றச்சுக குமரித கப்பனை |
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே |
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய |
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத |
மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே. |
......... சொல் விளக்கம் ......... |
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணப் படர் |
வட அனலுக்கு இரை பட ... பலபல தத்துவ சேஷ்டைகளையும், |
அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை |
வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி, |
நடநச் சுடர் பெரு வெளியில் கொ(ள்)ள இடம் மேவி பவனம் |
ஒழித்து இரு வழியை அடைத்து ... நடன ஜோதியை பரந்த ஆகாச |
வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில் |
சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு |
வழிகளையும் மாற்றி அடைத்து, |
ஒரு பருதி வழிப் படவிடல் ககனத்தொடு பவுரி கொ(ள்)ளச் |
சிவமயம் என முற்றிய பரம் ஊடே ... ஒப்பற்ற சூரிய ஜோதியின் |
பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ |
மயமாய் முற்றும் பரந்த பர வெளியில், |
திருவெண்ணைநல்லூர் ( 5 ) |
கலகல எனக் கழல் பரிபுர(ம்) பொன் பத ஒலி மலியத் திரு |
நடனம் இயற்றிய கனக சபைக்குளில் உருகி நிறைக் கடல் |
அதில் மூழ்கி ... கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின் |
ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த |
சுகானந்தக் கடலில் முழுகி, |
கவுரி மின்னல் சடை அரனொடு நித்தமொடு அனக |
சகத்துவம் வருதலும் இப்படி கழிய நலக்கு இனி நிறம் என் |
நவிற்று உடல் அருள்வாயே ... பார்வதி தேவி மின்னலை ஒத்த |
சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற |
உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு |
கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை |
எனக்குத் தந்தருளுக. |
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் |
கழுக்களில் உற விடு சித்திர புலவன் எனச் சில விருது |
படைத்திடும் இளையோனே ... இழிந்தவர்களும், திருநீற்றை |
விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை |
வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை |
கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய |
(திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே, |
புன மலையில் குற மகள் அயல் உற்று ஒரு கிழவன் எனச் |
சுனை தனில் அவள் ஐப் புய(ம்) புளகிதம் உற்று இபம் வர |
அணையப் புணர் மணி மார்பா ... தினைப் புனம் உள்ள வள்ளி |
மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன் |
என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை |
புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய |
மார்பனே, |
மலை சிலை பற்றிய கடவுள் இடத்து உறை கிழவி அறச் சுக |
குமரி தகப்பனை மழு கொ(ண்)டு வெட்டிய நிமலிகை பெற்று |
அருள் முருகோனே ... மேரு மலையை வில்லாகப் பிடித்த |
சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள், |
தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு |
வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷாயாணி என்ற) உமாதேவி |
பெற்றருளிய முருகோனே, |
மகிழ் பெ(ண்)ணையில் கரை பொழில் முகில் சுற்றிய |
திருவெ(ண்)ணெய் நல் பதி புகழ் பெற அற்புத மயிலின் |
மிசைக் கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே. ... மகிழ்ச்சி |
தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த |
திருவெண்ணெய்நல்லூர்** என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க |
அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும் |
பெருமாளே. |
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. |
அதன் சுருக்கம் வருமாறு: |
நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு |
ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று |
பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், |
சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம |
கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். |
இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் |
ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த |
ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, |
ஆதித்த,
சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை,சுழுமுனை முதலியன) உள்ளன. |
'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம். |
'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். |
சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது. |
'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் |
ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன. |
சுவாச
நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். |
( திருச்சிற்றம்பலம் ) |
Saturday 5 March 2016
Subscribe to:
Post Comments (Atom)
பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamin.in)
ReplyDelete