வீரட்டேஸ்வரர்
கோவில், திருக்கோவிலூர் |
இறைவன் பெயர் : வீரட்டேஸ்வரர் |
இறைவி பெயர் : சிவானந்தவல்லி |
இவ்வாலயம்
தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் |
இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும். |
ஆலய தொடர்புக்கு: 93456 60711 |
இத்தலத்தில்,
இறைவன் சுயம்பு மூர்த்தியாக, பைரவ சொரூபமாக அருள்பாலிக்கின்றார். |
இது சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம் |
திரிபுர பைரவி உற்பத்தி ஸ்தலம் . |
சப்த மாதாக்கள் உற்பத்தியான ஸ்தலம். |
64 பைரவர்கள் , 64 பைரவிகள் உற்பத்தியான ஸ்தலம் . |
தல விருட்சம் : சரக் கொன்றை . |
சிவபெருமான் வீரச்
செயல்கள் புரிந்த அட்டவீரட்டத் தலங்களில் அந்தாகாசுரனை வதைத்த தலம், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும், |
ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று |
சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம், |
தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவனும், |
திருமுறை கண்ட
சோழன் என்று போற்றபடுவனும் ஆன ராஜராஜன் பிறந்த தலம் என்று பல |
பெருமைகளை உடையது திருக்கோவலூர் தலம். |
தல வரலாறு: |
பார்வதி,
சிவபெருமானின் இரு கண்களை ( சூரியன், சந்திரன் ) விளையாட்டாக மூடியதால், எங்கும் இருள் சூழ்கிறது. |
அந்த
இருளே , அந்தகாசுரன் என்னும் அரக்கனாக உருவெடுக்கிறது. அந்தகாசுரனை அழிக்க சிவபெருமான் யுத்தம் புரியும்போது, |
அசுரனின் தலையில் , கதையால் ஓங்கி அடிக்கிறார். அசுரனின் |
தலையிலிருந்து
பீரிட்ட இரத்தம் பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் |
உற்பத்தி ஆக, யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. |
அசுரர்களின்
உற்பத்தியை தடுக்க, உமையவள், காளி சொரூபம் கொண்டு, அந்தகாசூரனின் தலையிலிருந்து விழும் இரத்தத் துளிகளை , |
கையில் கபாலம் கொண்டு எந்துகிறாள். |
அசுரனின்
தலையிலிருந்து வெளிப்பட்ட ரத்தங்கள், ரத்தக் கோடுகளாகி , எட்டத் திசையிலும் , குறுக்கும் |
நெடுக்குமாக 8 , 8
ஆக, 64 ( சதுரங்கள் ) பதங்களாக விழுகிறது. அந்த பதங்களில் , சிவபெருமான் , தன் அருளால் |
64 பைரவர்களை
உற்பத்தி செய்து, அந்த பதங்களில் இருத்தி, அசுர உற்பத்தியை தடுத்து, அந்தகாசுரனை வதம் |
செய்து,
தேவர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார். ( இதுவே, இக்காலத்தில் வாஸ்து சாந்தி என்று கிரக பிரவேச |
காலங்களிலும்,
வீடு கட்டும் காலங்களிலும் செய்யப்படும் வாஸ்து சாந்தி தோஷ நிவர்த்தியாகும் ) |
இவ்வாறு , அந்தகனை அழித்து , அஞ்ஞானத்தை நீக்கி , மெய்ஞானத்தை அருளியவர் , |
வீரட்டானேசுவரர் ஆவார். |
வீரட்டேஸ்வரர்
கோவிலும், அம்பாள் சிவானந்தவல்லி கோவிலும் தனித்தனி கோவில்களாக சுற்று மதிலுடன் |
மேற்கு நோக்கி
அருகருகே அமைந்துள்ளன. சுவாமி கோவிலுக்கு இடதுபுறம் அம்பாள் கோவில் |
அமைந்துள்ளது.
இரண்டு கோவில்களுக்கும் 3 நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரங்களுக்கு முன்னால் விசாலமான வெளியிடம் உள்ளது |
சுவாமி கோவில்
கோபுர வழியே உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம், முன்னால் நந்தி உள்ளதைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் சந்நிதி ஏதுமில்லை. |
முகப்பு வாயிலில் மேலே பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டுள்ளன. முன்தூணில் |
இடதுபுறம் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம் உள்ளது. வலதுபுறம் கணபதியின் |
சந்நிதி உள்ளது.
ஒளவையாரால் வழிபடப்பட்ட விநாயகர் இவர். சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் |
குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு |
அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக |
பூஜை செய்ய,
விநாயகர் காட்சி தந்து பொறுமையாக பூஜை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார். இத்தல கணபதியை |
வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து |
விநாயகர்
அகவல் பாடி பூஜையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் |
கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். |
இவ்வாறு ஒளவையைத்
தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக |
இந்த வரலாறு காணப்படுகிறது. வாயிலின் இடதுபுறம் வள்ளி தெய்வயானை சமேத |
ஆறுமுகப்பெருமான்
சந்நிதி உள்ளது. பக்கத்தில் கஜலட்சுமி சந்நிதியும், நடராசசபையும் உள்ளன. |
திருப்புகழ்
தலம்: திருக்கோவிலூர் ஒரு திருப்புகழ் தலமாகும். இத்தல முருகப்பெருமானை அருணகிரிநாதர் |
தனது திருப்புகழில்
பாடியுள்ளார். ஓரு திருப்புகழ் பாடல் இத்தலத்திற்கு உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறுமுகராக ஆறு திருமுகத்துடனும் |
12 திருக்கரங்களுடனும் தேவியர் இருவருடம் மயில் மீது அமர்ந்து |
அருள்பாலிக்கின்றார். |
தலமூர்த்தியாகிய
அந்தகாசுர சம்ஹார மூர்த்தி விசேஷமானது. பக்கத்தில் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார் ஆகியோரின் உற்சவத் |
உள்ளன. துவாரபாலகரை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் திருமேனிகள் |
வீரட்டேஸ்வரர்
சுயம்பு சிவலிங்கத் திருமேனி, பெரிய உருவத்துடன் தரிசனம் தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் |
துர்க்கை ஆகியோரைக் காணலாம். துர்க்கை எட்டுக் கரங்களுடன் |
காட்சியளிக்கின்ற
நின்ற திருக்கோலம் மிகவும் விசேஷமாகவுள்ளது. விழிகள் மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன |
அம்பாள் கோயில்
தனியே 3 நிலை கோபுரத்துடன் உள்ளது. முன்மண்டபத்தில் இருபுறமும் துவாரகாலகர்களாக |
விநாயகரும்
சுப்பிரமணியரும் உள்ளனர். சந்நிதிக்கு முன்னால் நந்தி பலிபீடம் உள்ளன. அம்பாள் |
அபயவரதத்துடன்
கூடிய நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறாள். |
விநாயகர் அகவல் |
சீதக் களபச் செந்தா மரைப்பூம் |
பாதச் சிலம்பு பலவிசை பாடப் |
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் |
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் |
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05) |
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் |
அஞ்சு கரமும் அங்குச பாசமும் |
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் |
நான்ற வாயும் நாலிரு புயமும் |
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10) |
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் |
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் |
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான |
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே! |
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15) |
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் |
தாயா யெனக்குத் தானெழுந் தருளி |
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் |
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் |
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20) |
குருவடி வாகிக் குவலயந் தன்னில் |
திருவடி வைத்துத் திறமிது பொருளென |
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் |
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே |
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25) |
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி |
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் |
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் |
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) |
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30) |
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி |
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே |
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் |
ஐம்புலக் கதவை குழாத்துடன் காட்டி |
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35) |
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே |
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் |
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி |
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் |
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40) |
குண்டலி யதனிற் கூடிய அசபை |
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து |
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் |
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே |
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45) |
குமுத சகாயன் குணத்தையும் கூறி |
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் |
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் |
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் |
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50) |
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் |
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் |
கருத்தினில் கபால வாயில் காட்டி |
இருத்தி முத்தி யினிதெனக் கருளி |
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55) |
முன்னை வினையின் முதலைக் களைந்து |
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் |
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) |
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன |
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60) |
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) |
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் |
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் |
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி |
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65) |
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி |
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் |
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி |
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை |
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70) |
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட |
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72) |
( திருச்சிற்றம்பலம் ) |
Saturday 13 February 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment