கடலாடி 2
கடலாடி வன்னீஸ்வரர் கோவிலில் இருந்து வந்த வழியே சிறிது தூரம் சென்றால், கரைகண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். இந்த சாலை புதிதாக அமைக்கப்பெற்றிருப்பதால், சிறிது கரடு முரடாகவே உள்ளது. கூகுள் வரைபடத்திலும் காண முடியாது. அருகில் உள்ளவர்களை , கரை கண்டீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதை என விசாரித்துக்கொள்ள வேண்டும்.
வயல்களின் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் பாதை. வாகனத்தில் இருந்து இறங்கி, சிறிது தூரம் நடக்கவும் வேண்டியிருக்கும் .
மிக மிக பழமையான கோவில்.
ஆறுமுகனின் திருவடி பட்ட இடம்.
பாவங்கள் கரைந்த இடம்.
செய்யாரின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம்.
இறைவன் : கரைகண்டீஸ்வரர்
இறைவி : பிருஹந்நாயகி
நன்றி : Google Maps
எமது அடுத்த பயணம், செய்யாற்றின் வட கரையில் உள்ள காஞ்சி எனும் திருத்தலத்தை நோக்கி..........
No comments:
Post a Comment