Monday 6 March 2017


கடலாடி  2

கடலாடி வன்னீஸ்வரர் கோவிலில் இருந்து வந்த வழியே சிறிது தூரம் சென்றால், கரைகண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். இந்த சாலை புதிதாக அமைக்கப்பெற்றிருப்பதால், சிறிது  கரடு முரடாகவே உள்ளது. கூகுள் வரைபடத்திலும்  காண முடியாது. அருகில் உள்ளவர்களை , கரை கண்டீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதை என விசாரித்துக்கொள்ள வேண்டும். 

வயல்களின் ஊடே, வளைந்து நெளிந்து செல்லும் பாதை. வாகனத்தில் இருந்து இறங்கி,  சிறிது தூரம் நடக்கவும் வேண்டியிருக்கும் .

மிக மிக பழமையான கோவில்.  
ஆறுமுகனின் திருவடி பட்ட இடம்.
பாவங்கள் கரைந்த இடம். 


செய்யாரின் வடகரையில் அமைந்துள்ள ஆலயம்.
இறைவன் :  கரைகண்டீஸ்வரர் 
இறைவி     :  பிருஹந்நாயகி 



நன்றி : Google Maps 





எமது  அடுத்த பயணம், செய்யாற்றின் வட கரையில் உள்ள காஞ்சி எனும் திருத்தலத்தை  நோக்கி..........



No comments:

Post a Comment