Saturday, 13 February 2016

அகஸ்திய மகரிஷியை தரிசிக்க

அகஸ்திய மகரிஷியை தரிசிக்க

மந்திரம் 

ஓம் சிம் பம் அம் உம்  மம் 
மகத்தான அகஸ்தியரே 
என் குருவே  
வா வா 
வரம் அருள்க 
அருள் தருக 
அடியேன் தொழுதேன் 


வழிமுறை 


அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக  
ஒரு விரிப்பு அல்லது  பலகையை அமைக்கவும்.

அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு 
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.

தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை 
நிரப்பி  வைக்க வேண்டும். 

காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை 
நிவேதனமாக வைக்கவும் 

இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை , 
அகஸ்தியரின் பெயரை அல்லது 
மூல மந்திரத்தை கூறிவிட்டு , 
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.

9 மணி ஆனதும்,  தீபத்தை வணங்கிவிட்டு , 
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும். 

இவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள்  
( அசைவம் தவிர்த்து, உணவில்  உப்பு, 
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர , 
அகஸ்தியர்  காட்சி தந்தருளுவார். 
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .

விரதமிருக்கும் இந்த நாட்களில் ( தெரியாமல் கூட )
மது , மாமிசம் சேர்க்கக்கூடாது .  உடலுறவை 
தவிர்க்க வேண்டும். துக்க ஜனன வீடுகளுக்கு 
செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

முற்பிறவியில்,  கடுமையான பாவங்களைச் 
செய்திருந்தால், இந்த கட்டுரையை  வாசிக்கும் 
சந்தர்ப்பம்கூட அமையாது. ஓரளவு பாபம் 
செய்திருந்தால், கனவில் அகஸ்தியர் தோன்றுவார்.






No comments:

Post a Comment