வீரட்டன திருத்தலங்கள்
கடந்த இரண்டு வருடங்களாக, தை அமாவாசையன்று , திருக்கடையூர் சென்று அன்னை அபிராமியை தரிசித்து வந்த நானும், என் நண்பரும், இந்த வருடமும் திருக்கடையூர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாக " இந்த பயணத்தை , அனைத்து வீரட்டான திருத்தலங்களையும் தரிசிக்கும் பயணமாக மாற்றக்கூடாது ? " என்ற எண்ணம் தோன்றியது.
தேவயான விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் .
கடந்த இரண்டு வருடங்களாக, தை அமாவாசையன்று , திருக்கடையூர் சென்று அன்னை அபிராமியை தரிசித்து வந்த நானும், என் நண்பரும், இந்த வருடமும் திருக்கடையூர் செல்ல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாக " இந்த பயணத்தை , அனைத்து வீரட்டான திருத்தலங்களையும் தரிசிக்கும் பயணமாக மாற்றக்கூடாது ? " என்ற எண்ணம் தோன்றியது.
தேவயான விவரங்களை சேகரிக்க ஆரம்பித்தேன் .
காவிரியின் கரைக் கண்டி வீரட்டானம் |
கடவூர் வீரட்டானம் காமரு சீர் அதிகை |
மேவிய வீரட்டானம் வழுவை வீரட்டம் |
வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக்கு இடமாம் |
கோவல்நகர் வீரட்டம் குறுக்கை வீரட்டம் |
கோத்திட்டைக் குடிவீரட்டானம் இவை கூறி |
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுகச் சென்றால் |
நமன்தமரும் சிவன்தமர் என்று அகல்வர் நன்கே. ( தேவாரம் ) |
உரை : |
காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், |
கடவூர் வீரட்டானம், |
விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், |
வழுவூர் வீரட்டானம், |
பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், |
இடபத்தை ஊர்தியாக உடைய
சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், |
குறுக்கை வீரட்டானம், |
தலைமையும் மேன்மையுமுடைய விற்குடி வீரட்டானம் |
என்னும் வீரட்டானங்கள் எட்டினையும் |
முறைப்பட முன்னர் ஒருமுறை மொழிந்து பின்னர் அம்முறையே நாவில் |
பழகிப் பலகாலும் போற்றுவார்க்கு அருகில் இயமதூதர்கள் ஒருகால் செல்ல |
நேரிடின் இவர் சிவபெருமானுக்கு அடியர் என்று உடனே உணர்ந்து |
அவரைவிட்டு வெகு தொலைவு அகல
நீங்குவர் . எட்டு வீரட்டான திருத்தலங்களையும் கருத்தில் கொண்டு, மற்றும் சில திருத்தலங்களையும் சேர்த்து , ஒரு பயண திட்டத்தை உருவாக்கியுள்ளோம். Feb - 8 . திருகோவிலூர் , திருவெண்ணைநல்லூர். திருவதிகை கீழப்பெரும்பள்ளம் திருவெண்காடு திருக்கடையூர் Feb - 9 திருக்கடையூர் திருமெய்ஞானம் , திருப்பறியலூர் திருக்குறுக்கை திரு வழுவூர் திருவிற்குடி திரு நாகேச்வரம் திருவிடைமருதூர் திருவையாறு பிப் 10 திரு கண்டியூர் திரு கண்டியூர் ஸ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் ஆலயம் திருமுது குன்றம் ( விருதாசலம் ) முகாசா பரூர் ( சித்தர் கோரக்கர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ) " அவன் அருளாலே அவன்தாள் வணங்கி " பின்னர் நான் சேகரித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன் . |
No comments:
Post a Comment