Saturday 13 February 2016

சித்தர்களை தரிசிக்க 

பெரிய ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இருந்து 
கிடைத்த தகவல்.

நாம் தரிசிக்க விரும்பும் சித்தர்களைக் காண 
ஓம் சிங் ரங் அங்  சிங் 
என்ற மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் .

வழிமுறை 

அமாவாசை அன்று இரவில் , இரவு 8 மணிக்குள்ளாக ,
ஒரு சுத்தமான அறையில் ,
கிழக்கு அல்லது வடக்கு முகமாக  
ஒரு விரிப்பு அல்லது  பலகையை அமைக்கவும்.

அதிலிருந்து 8 அடி தூரத்தில் , நம் கண்களுக்கு நேராக வருமாறு 
ஒரு நெய்தீபம், தாமரை நூலில் எரியவேண்டும்.

தீபத்தின் முன்பக்கம், ஒரு காசி சொம்பில் சுத்தமான நீரை 
நிரப்பி  வைக்க வேண்டும். 

காசி சொம்பின் முன்புறத்தி.ல் , பழங்களை 
நிவேதனமாக வைக்கவும் 

இரவு 8 மணிக்கு , விரிப்பில் அமர்ந்து கொண்டு ,
உதடு பிரியாமல் , மேற்கூறிய மந்திரத்தை , 
நாம் காண / தரிசிக்க விரும்பும் சித்தரின் 
பெயரை அல்லது மூல மந்திரத்தை கூறிவிட்டு , 
சுமார் ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும்.

9 மணி ஆனதும்,  தீபத்தை வணங்கிவிட்டு , 
காசி சொம்பில் உள்ள தீர்த்தத்தை பருகவும்.
நிவேதனமாக இடப்பட்ட பழங்களை அருந்தவும்.
இரவில் பால் சாதம் உண்ணவும். 

இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள்  
( அசைவம் தவிர்த்து, உணவில்  உப்பு, 
புளி , காரம் குறைத்து ) ஜெபித்துவர , 
விரும்பிய சித்தர் காட்சி தந்தருளுவார். 
அவரை குருவாக ஏற்று ,
வாழ்வில் வளம் காணுங்கள் .









No comments:

Post a Comment