மௌனம்
படித்ததில் பிடித்தது ! |
மௌனத்துக்குப் பல படித்தரங்கள் |
உண்டு. ஒயாது மிகைபடப் பொருளற்ற |
பேச்சுக்களைப் பேசிக்கொண்டு |
இருப்பதைத் தவிர்த்து, பொருள் உள்ள |
பேச்சுக்களை மட்டும் பேசுவது |
மௌனமாகும். |
பொருள் உள்ள பேச்சுக்களை |
மிகைபடப் பேசுவதைத் தவிர்த்து |
அவைகளை அளவுபடப் பேசுதல் |
மௌனமாகும். |
பேச வேண்டிய எந்த ஒரு நல்ல |
விஷயத்தையும் பிறர் கேட்டாலொழியப் |
பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த |
மௌனமாகும். |
பிறர் பேசும்படி தூண்டினாலும் |
அப்பேச்சு பிறருக்கோ தனக்கோ அதிகம் |
பயன்படாது என்று தெரிந்த பின் பேசாது |
அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த |
மௌனமாகும். |
இப்படி மௌனத்திலேயே போகப் |
போக மனம் அடங்கியிருப்பதற்கு அந்த |
மௌன நிலையே ஆதாரம் ஆகிறது |
ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் |
மனதுக்குள்ளே விதவிதமான எண்ணங்கள் |
உதித்துக் கொண்டிருக்கும். |
அது கிட்டத்தட்ட பேசுதற்குக் சமமாகிறது. |
அத்தகைய எண்ணங்களும் உதிக்காமல் |
இருப்பதுதான் மௌனம் ! |
இறை சிந்தனை வலுத்து வந்தால் வேறு |
எண்ணங்கள் அடிபட்டுப்போகும். |
கடவுளைப் பற்றிய ஒரே எண்ணம் |
நிலைத்து நின்றுவிட்டால் அது பண்பட்ட |
நிலை. |
அந்தப் பண்பட்ட நிலையில் மனதை |
நிறுத்திவிட்டால் மௌனம் ஆங்குப் |
பூர்த்தியாகிறது. |
எஞ்சியிருப்பது பிரம்ம சொரூபம் மட்டுமே ! ஹரி ஓம் |
No comments:
Post a Comment