Wednesday 18 March 2020

மௌனம்

மௌனம் 






படித்ததில் பிடித்தது !
மௌனத்துக்குப் பல படித்தரங்கள் 
உண்டு.

ஒயாது மிகைபடப் பொருளற்ற 
பேச்சுக்களைப் பேசிக்கொண்டு 
இருப்பதைத் தவிர்த்து, பொருள் உள்ள 
பேச்சுக்களை மட்டும் பேசுவது 
மௌனமாகும்.
பொருள் உள்ள பேச்சுக்களை 
மிகைபடப் பேசுவதைத் தவிர்த்து  
அவைகளை அளவுபடப் பேசுதல் 
மௌனமாகும்.
பேச வேண்டிய  எந்த ஒரு நல்ல 
விஷயத்தையும் பிறர் கேட்டாலொழியப் 
பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த 
மௌனமாகும்.
பிறர் பேசும்படி தூண்டினாலும் 
அப்பேச்சு பிறருக்கோ தனக்கோ அதிகம் 
பயன்படாது என்று தெரிந்த பின் பேசாது 
அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த 
மௌனமாகும்.
இப்படி மௌனத்திலேயே போகப் 
போக மனம் அடங்கியிருப்பதற்கு அந்த 
மௌன நிலையே ஆதாரம் ஆகிறது
ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் 
மனதுக்குள்ளே விதவிதமான எண்ணங்கள் 
உதித்துக் கொண்டிருக்கும். 
அது கிட்டத்தட்ட 
பேசுதற்குக் சமமாகிறது. 
அத்தகைய எண்ணங்களும் உதிக்காமல்   
இருப்பதுதான்   மௌனம் !
இறை சிந்தனை வலுத்து வந்தால் வேறு 
எண்ணங்கள் அடிபட்டுப்போகும். 
கடவுளைப் பற்றிய  ஒரே எண்ணம் 
நிலைத்து நின்றுவிட்டால் அது பண்பட்ட 
நிலை. 
அந்தப் பண்பட்ட நிலையில் மனதை 
நிறுத்திவிட்டால் மௌனம் ஆங்குப் 
பூர்த்தியாகிறது. 
எஞ்சியிருப்பது
பிரம்ம சொரூபம் மட்டுமே !

ஹரி ஓம் 

No comments:

Post a Comment