Tuesday 13 May 2014

அபிராமி அந்தாதி ( 72 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  72


என்  குறை  தீர,
நின்று  ஏத்துகின்றேன் !

இனி  யான்  பிறக்கின் ,
நின்  குறையே  அன்றி ,
யார்  குறை காண் ?

இருநீள்   விசும்பின் 
மின் குறை காட்டி ,
மெலிகின்ற 
நேரிடை  மெல்லியலாய் ! 

தன் குறை தீர,
என்கோன் ,
சடைமேல்  வைத்த 
தாமரையே !  



இருண்ட  வானத்தில்  தோன்றும்  
மின்னலும்  நாணும்  வண்ணம் ,  
மெல்லிய  இடையை  உடையவளே !

சிவனும்,  தன்  குறை  தீர்வதற்காக ,
தன்  சடாமுடிமேல்  வைத்துக் கொண்ட 
உன் திருவடி தாமரைகளை ,

என் குறைகளெல்லாம்  தீரும்  
வண்ணம்  வணங்குகின்றேன் ! 

இப்பூவுலகில், 
யான்  மறுபடியும் பிறந்தால், 
அது  உன் குறையே  அன்றி,
வேறு யார்  குறையும் அல்ல ! 

தொடரும் ....







No comments:

Post a Comment