Wednesday 7 May 2014

அபிராமி அந்தாதி ( 62 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  62


தங்கச் சிலை கொண்டு 
தானவர்  முப்புரம்  சாய்த்து ,
 மத வெங்கண் 
கரியுரி  போர்த்த செஞ்சேவகன் 
மெய் அடைய 
கொங்கைக் குரும்பைக் 
குறியிட்ட நாயகி !

கோ கனகச் 
செங்கைக் கரும்பும்,
மலரும் ,
எப்போதும்  என்  சிந்தையதே !


தங்க நிறம் கொண்ட  மேருமலையை  
வில்லாகக் கொண்டு ,
அசுரர்களின்  திரிபுரத்தை அழித்தவனும் ,
சிவந்த கண்களையுடைய மத யானையின் 
தோலைப் போர்த்தியவனுமாகிய 
சிவனின் உடலில்,
உன் அங்கங்களின் அடையாளத்தை 
பதித்திட்ட  நாயகியே !

தாமரை மலரைப் போன்ற
சிவந்த உன் கைகளில் உள்ள 
கரும்பு வில்லும், 
மலரம்புகளும் 
எப்போதும் என் மனதில்  நிற்கும் !

தொடரும் .....












No comments:

Post a Comment