அபிராமி அந்தாதி
பாடல் 62
தங்கச் சிலை கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து ,
மத வெங்கண்
கரியுரி போர்த்த செஞ்சேவகன்
மெய் அடைய
கொங்கைக் குரும்பைக்
குறியிட்ட நாயகி !
கோ கனகச்
செங்கைக் கரும்பும்,
மலரும் ,
எப்போதும் என் சிந்தையதே !
தங்க நிறம் கொண்ட மேருமலையை
வில்லாகக் கொண்டு ,
அசுரர்களின் திரிபுரத்தை அழித்தவனும் ,
சிவந்த கண்களையுடைய மத யானையின்
தோலைப் போர்த்தியவனுமாகிய
சிவனின் உடலில்,
உன் அங்கங்களின் அடையாளத்தை
பதித்திட்ட நாயகியே !
தாமரை மலரைப் போன்ற
சிவந்த உன் கைகளில் உள்ள
கரும்பு வில்லும்,
மலரம்புகளும்
எப்போதும் என் மனதில் நிற்கும் !
தொடரும் .....
பாடல் 62
தங்கச் சிலை கொண்டு
தானவர் முப்புரம் சாய்த்து ,
மத வெங்கண்
கரியுரி போர்த்த செஞ்சேவகன்
மெய் அடைய
கொங்கைக் குரும்பைக்
குறியிட்ட நாயகி !
கோ கனகச்
செங்கைக் கரும்பும்,
மலரும் ,
எப்போதும் என் சிந்தையதே !
தங்க நிறம் கொண்ட மேருமலையை
வில்லாகக் கொண்டு ,
அசுரர்களின் திரிபுரத்தை அழித்தவனும் ,
சிவந்த கண்களையுடைய மத யானையின்
தோலைப் போர்த்தியவனுமாகிய
சிவனின் உடலில்,
உன் அங்கங்களின் அடையாளத்தை
பதித்திட்ட நாயகியே !
தாமரை மலரைப் போன்ற
சிவந்த உன் கைகளில் உள்ள
கரும்பு வில்லும்,
மலரம்புகளும்
எப்போதும் என் மனதில் நிற்கும் !
தொடரும் .....
No comments:
Post a Comment