Saturday 3 May 2014

அபிராமி அந்தாதி ( 61 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  61


நாயேனையும், 
இங்கு  ஒரு பொருளாக 
நயந்து வந்து,
நீயே, 
நினைவின்றி  ஆண்டு கொண்டாய் ! 

நின்னை, 
உள்ள  வண்ணம் 
பேயேன் அறியும் 
அறிவு தந்தாய் !

என்ன  பேறு  பெற்றேன் !

தாயே !
மலைமகளே !
செங்கண் மால் 
திருத் தங்கச்சியே  !!  

உலகத்து  உயிர்களுக்கெல்லாம்  அன்னையே !
மலை மகளே !!
அழகிய  சிவந்த  கண்களை உடைய  திருமாலின்  தங்கையே !! 

நாயைப்  போன்ற  என்னையும், 
உன் திருவருளுக்கு  உரியவனாகக் கருதி, 
எனக்குத் தெரியாமலேயே ,  என்னை  ஆட்கொண்டாய் ! 

உன்னை,  நீ  உள்ள வண்ணம் ,  இந்தப் பேயேனும் அறிய,  அறிவு  தந்தாய் !

அடியேன் ,  எத்தகைய  பாக்கியத்தை  அடைந்தேன், தாயே !!! 


தொடரும்  ...... 




No comments:

Post a Comment