அபிராமி அந்தாதி
பாடல் 61
நாயேனையும்,
இங்கு ஒரு பொருளாக
நயந்து வந்து,
நீயே,
நினைவின்றி ஆண்டு கொண்டாய் !
நின்னை,
உள்ள வண்ணம்
பேயேன் அறியும்
அறிவு தந்தாய் !
என்ன பேறு பெற்றேன் !
தாயே !
மலைமகளே !
செங்கண் மால்
திருத் தங்கச்சியே !!
உலகத்து உயிர்களுக்கெல்லாம் அன்னையே !
மலை மகளே !!
அழகிய சிவந்த கண்களை உடைய திருமாலின் தங்கையே !!
நாயைப் போன்ற என்னையும்,
உன் திருவருளுக்கு உரியவனாகக் கருதி,
எனக்குத் தெரியாமலேயே , என்னை ஆட்கொண்டாய் !
உன்னை, நீ உள்ள வண்ணம் , இந்தப் பேயேனும் அறிய, அறிவு தந்தாய் !
அடியேன் , எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன், தாயே !!!
தொடரும் ......
பாடல் 61
நாயேனையும்,
இங்கு ஒரு பொருளாக
நயந்து வந்து,
நீயே,
நினைவின்றி ஆண்டு கொண்டாய் !
நின்னை,
உள்ள வண்ணம்
பேயேன் அறியும்
அறிவு தந்தாய் !
என்ன பேறு பெற்றேன் !
தாயே !
மலைமகளே !
செங்கண் மால்
திருத் தங்கச்சியே !!
உலகத்து உயிர்களுக்கெல்லாம் அன்னையே !
மலை மகளே !!
அழகிய சிவந்த கண்களை உடைய திருமாலின் தங்கையே !!
நாயைப் போன்ற என்னையும்,
உன் திருவருளுக்கு உரியவனாகக் கருதி,
எனக்குத் தெரியாமலேயே , என்னை ஆட்கொண்டாய் !
உன்னை, நீ உள்ள வண்ணம் , இந்தப் பேயேனும் அறிய, அறிவு தந்தாய் !
அடியேன் , எத்தகைய பாக்கியத்தை அடைந்தேன், தாயே !!!
தொடரும் ......
No comments:
Post a Comment