Saturday 10 May 2014

அபிராமி அந்தாதி ( 65 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  65 



ககனமும், வானமும் , 
புவனமும்  காண , 
விற் காமன்  அங்கம்  
முன் தகனம் செய்த  
தவம் பெருமாற்கு 

தடக்கையும், செம்முகமும் 
முந்நான்கு , இரு மூன்றெனத் 
தோன்றிய மூதறிவின் 
மகனும் உண்டாயதன்றோ ? 
வல்லி !
நீ செய்த  வல்லபமே ! 


  
இந்த  பூவுலகும், வானுலகும், மற்றுமுள்ள 
அண்டங்களும்  அறியும்வண்ணம், 
காமனை  தகனம் செய்த  , 
சிறந்த  தவ யோகியான  சிவ பெருமானுக்கு, 
ஓராறு  முகமும், ஈராறு கரங்களையும் 
கொண்ட சிறந்த ஞானியுமான   
குமரனை  உண்டாக்கியது, 
உன் செயல் அல்லவா ?
அபிராம வல்லியே ! 


தொடரும் .....






No comments:

Post a Comment