Sunday 11 May 2014

அபிராமி அந்தாதி ( 68 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  68



பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும் ,
படர்  விசும்பும்.
ஊரும்,  
முருகு,
சுவை,
ஒளி, 
ஊறொலி  
ஒன்றுபடச்  சேரும் , 
தலைவி சிவகாம சுந்தரி  
சீரடிக்கே ! 

சாரும்  தவமுடையார்  
படையாத 
தனமில்லையே !  

ஐம்பெரும் பூதங்கள் ,  தங்களின்  இயற்கை குணங்கள் 
அனைத்தையும் ஒன்றாக  இணைத்துக் கொண்டு 
தஞ்சமடைவது , தலைவி  சிவகாம சுந்தரியின் 
சிறப்புமிக்க  திருவடிகளை !  
இத்தகைய  சிறப்பு மிக்க  அபிராம வல்லியின் 
பாதங்களைச்  சேரும்,   அவளருள்  பெற்ற 
அடியார்கள் , தனக்கே  உரியதென்று 
பெறாத செல்வம்  ஒன்றுமே   இல்லை .


தொடரும் ..... 





No comments:

Post a Comment