அபிராமி அந்தாதி
பாடல் 71
அழகுக்கு ,
ஒருவரும் ஒவ்வாத வல்லி !
அருமறைகள் ,
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் !
பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள,
யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே !
இரங்கேல் !
உனக்கென் குறையே .... ?
பற்றிக் கொள்வதற்கு ,
தன் அழகுக்கு நிகரில்லாதவளும்,
நான்கு வேதங்களையும் அணிகலன்களாக
பாதத்தில் அணிந்து, சிவந்திருக்கும் பாதங்களை
உடையவளும்,
குளிர்ச்சியும், பெருமையும் உடைய பிறையை
தன் திருமுடியில் சூடியிருக்கும் ,
அழகிய , யாமளை எனும் திரு நாமம் கொண்ட .
கொம்பு இருக்க,
நடந்ததை எண்ணி வருந்தி நிற்கும் நெஞ்சமே !
கலங்காதே !
இனி, உனக்கு ஒரு உறையும் இல்லை !
தொடரும் ......
பாடல் 71
அழகுக்கு ,
ஒருவரும் ஒவ்வாத வல்லி !
அருமறைகள் ,
பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் !
பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள,
யாமளைக் கொம்பிருக்க,
இழவுற்று நின்ற நெஞ்சே !
இரங்கேல் !
உனக்கென் குறையே .... ?
பற்றிக் கொள்வதற்கு ,
தன் அழகுக்கு நிகரில்லாதவளும்,
நான்கு வேதங்களையும் அணிகலன்களாக
பாதத்தில் அணிந்து, சிவந்திருக்கும் பாதங்களை
உடையவளும்,
குளிர்ச்சியும், பெருமையும் உடைய பிறையை
தன் திருமுடியில் சூடியிருக்கும் ,
அழகிய , யாமளை எனும் திரு நாமம் கொண்ட .
கொம்பு இருக்க,
நடந்ததை எண்ணி வருந்தி நிற்கும் நெஞ்சமே !
கலங்காதே !
இனி, உனக்கு ஒரு உறையும் இல்லை !
தொடரும் ......
No comments:
Post a Comment