Tuesday 13 May 2014

அபிராமி அந்தாதி ( 71 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  71



அழகுக்கு ,
ஒருவரும்  ஒவ்வாத  வல்லி !

அருமறைகள் ,
பழகிச் சிவந்த  பாதாம்புயத்தாள் ! 

பனி மாமதியின்  
குழவித் திருமுடிக்  கோமள,   
யாமளைக் கொம்பிருக்க, 

இழவுற்று  நின்ற  நெஞ்சே !
இரங்கேல் !
உனக்கென்  குறையே .... ? 


பற்றிக் கொள்வதற்கு ,

தன் அழகுக்கு  நிகரில்லாதவளும்,

நான்கு  வேதங்களையும்  அணிகலன்களாக 
பாதத்தில் அணிந்து,  சிவந்திருக்கும்  பாதங்களை 
உடையவளும்,  

குளிர்ச்சியும், பெருமையும் உடைய  பிறையை 
தன் திருமுடியில்  சூடியிருக்கும் , 
அழகிய , யாமளை எனும் திரு நாமம் கொண்ட .
கொம்பு  இருக்க, 
நடந்ததை  எண்ணி  வருந்தி நிற்கும்  நெஞ்சமே !
கலங்காதே !
இனி,  உனக்கு ஒரு உறையும் இல்லை ! 


தொடரும் ......







No comments:

Post a Comment