Sunday 11 May 2014

அபிராமி அந்தாதி ( 69 )

அபிராமி  அந்தாதி

பாடல்  69



தனம் தரும் ,
கல்வி தரும்,
ஒரு நாளும்  தளர்வறியா
மனம் தரும்,
தெய்வ  வடிவும் தரும்,
நெஞ்சில்  வஞ்சமில்லா
இனம் தரும் ,
நல்லன எல்லாம் தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்,

பூங்குழலாள்
அபிராமி  கடைக்கண்களே !

மணக்கும்  பூக்களைச் சூடிய  
அபிராமியின்  கடைக்கண்  பார்வை, 
அவள்  அடியவர்களுக்கு  பெருமையைத் தரும்,
நிலையான  செல்வத்தைத் தரும்,
அழியாத  கல்வியைத் தரும்,
ஒருநாளும் தளர்ச்சி அடையாத
உறுதியான மன வலிமையத் தரும் ,
தெய்வீக  அழைத் தரும் , 
நெஞ்சில்  வஞ்சமில்லாத 
உறவினரையும், நண்பரையும் தரும் ,
மற்றுமுள்ள  நல்லன எல்லாவற்றையும்  தரும், 


தொடரும் .....






No comments:

Post a Comment