அபிராமி அந்தாதி
பாடல் 66
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் ,
நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது
பற்றொன்று இலேன் ,
பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் !
வினையேன் தொகுத்த
சொல் அவமாயினும்,
நின் திரு நாமங்கள்
தோத்திரமே !
தங்க நிறம் கொண்ட மேரு மலையை
வில்லாகக் கொண்ட சிவபெருமானுடன்
வீற்றிருக்கும், அபிராம வல்லியே !
சிற்றறிவினை உடைய நான்,
உன் பெருமை வாய்ந்த செயல்கள்
ஒன்றையும் அறியேன்.
சிவந்த தளிரைப் போன்ற
நின் திருவடியைத்தவிர
வேறொன்றின் மேல் பற்றில்லை, எனக்கு .
உன்மேல், அந்தாதியாக தொகுத்த
பல சொற்களுக்கு அர்த்தமில்லாது போனாலும்,
இடையிடையே கூறிய
உன் திருப்பெயர்களெல்லம்
உன்னைத் தொழுது போற்றும்,
தோத்திரங்களே !
தொடரும் .....
பாடல் 66
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் ,
நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது
பற்றொன்று இலேன் ,
பசும் பொற் பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் !
வினையேன் தொகுத்த
சொல் அவமாயினும்,
நின் திரு நாமங்கள்
தோத்திரமே !
தங்க நிறம் கொண்ட மேரு மலையை
வில்லாகக் கொண்ட சிவபெருமானுடன்
வீற்றிருக்கும், அபிராம வல்லியே !
உன் பெருமை வாய்ந்த செயல்கள்
ஒன்றையும் அறியேன்.
சிவந்த தளிரைப் போன்ற
நின் திருவடியைத்தவிர
வேறொன்றின் மேல் பற்றில்லை, எனக்கு .
உன்மேல், அந்தாதியாக தொகுத்த
பல சொற்களுக்கு அர்த்தமில்லாது போனாலும்,
இடையிடையே கூறிய
உன் திருப்பெயர்களெல்லம்
உன்னைத் தொழுது போற்றும்,
தோத்திரங்களே !
தொடரும் .....
No comments:
Post a Comment