Saturday 10 May 2014

அபிராமி அந்தாதி ( 66 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  66



வல்லபம்  ஒன்றறியேன்  சிறியேன் ,
நின் மலரடிச்  செம் பல்லவம் அல்லது 
பற்றொன்று இலேன் ,

பசும் பொற் பொருப்பு 
வில்லவர் தம்முடன்  வீற்றிருப்பாய் ! 

வினையேன்  தொகுத்த 
சொல்  அவமாயினும், 
நின்  திரு நாமங்கள்  
தோத்திரமே ! 



தங்க நிறம் கொண்ட  மேரு மலையை 
வில்லாகக் கொண்ட  சிவபெருமானுடன் 
வீற்றிருக்கும், அபிராம  வல்லியே !

சிற்றறிவினை  உடைய  நான், 
உன் பெருமை வாய்ந்த செயல்கள் 
ஒன்றையும்   அறியேன்.

சிவந்த தளிரைப் போன்ற  
நின் திருவடியைத்தவிர  
வேறொன்றின் மேல்  பற்றில்லை, எனக்கு .

உன்மேல், அந்தாதியாக  தொகுத்த 
பல  சொற்களுக்கு  அர்த்தமில்லாது  போனாலும்,
இடையிடையே  கூறிய 
உன்  திருப்பெயர்களெல்லம் 
உன்னைத் தொழுது  போற்றும்,
தோத்திரங்களே ! 


தொடரும்  .....










No comments:

Post a Comment