Wednesday 7 May 2014

அபிராமி அந்தாதி ( 64 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  64 



வீணே , 
பலிகவர் தெய்வங்கள்  பால் சென்று ,
மிக்க  அன்பு  பூணேன் !

உனக்கு  அன்பு பூண்டு கொண்டேன் !

நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் !

ஒருபொழுதும்  திருமேனிப் பிரகாசம் 
அன்றிக் காணேன்,  
இருநிலமும்,
திசை நான்கும் ,
ககனமுமே !

வீணாக உயிரைக்  கொல்லும்  ,
சிறு தெய்வங்களிடம்  பக்தி  கொள்ளேன் !

உன்னிடம் மட்டுமே  பக்தி  கொள்வேன் !

ஒரு காலத்திலும்  உன்னையன்றி , 
வேறொருவரைத் துதியேன் !

இப்பூமியிலும்,
நான்கு திசைகளிலும் , 
ஆகாயத்திலுமாய் 
எங்கும்  நிறைந்திருக்கும் 
நின் திருமேனியின் திரு ஒளியைத் தவிர 
வேறொன்றையும்  காணேன் !


தொடரும் .....





No comments:

Post a Comment