Tuesday 13 May 2014

அபிராமி அந்தாதி ( 70 )

அபிராமி  அந்தாதி  

பாடல்  70



கண்  களிக்கும்படி 
கண்டு கொண்டேன் ! 

கடம்பாடவியில் ,
பண்களிக்கும் குரல்  வீணையும்,
கையும் ,
பயோரமும் , 
மண்  களிக்கும் 
பச்சை  வண்ணமுமாகி , 

மதங்கர் குலப் 
பெண்களில்  தோன்றிய 
எம்பெருமாட்டி தன் 
பேரழகே  !  


கடம்ப  வனத்தில்,
பாடலும்   மகிழும்  வண்ணம்  குரலெழுப்பும்    வீணையும் ,
அதனை  ஏந்திய  கைகளும்,
திருத்தன  பாரமும் , 
இப்பூவுலகம்  மகிழும்  பச்சை நிறமும்  கொண்டு ,
மதங்கர்  எனும்  யாழ் பாணர்  குலப் பெண்களில் 
ஒருத்தியாக  தோன்றிய  எம்பெருமாட்டியை ,
கண்குளிர  தரிசனம் செய்தேன் ! 


தொடரும் ........





No comments:

Post a Comment