Wednesday 7 May 2014

அபிராமி அந்தாதி ( 63 )

அபிராமி  அந்தாதி 

பாடல்  63 


தேறும்படி  சில  ஏதுவும்  காட்டி 
முன்செல் கதிக்கு கூறும் பொருள் 
குன்றில்  கொட்டும் தறி குறிக்கும் !

சமயம்  ஆறும் 
தலைவி  இவளாய் இருப்பது 
அறிந்திருந்தும்,
வேறு சமயம்  உண்டென்று 
கொண்டாடிய,  வீணருக்கே ! 

பெரியோர்களால்  போற்றப்பட்ட  
ஆறு சமயங்களுக்கும், 
தெய்வமாய் இருப்பது  
அபிராமியே  என்று  அறிந்திருந்தும், 
வேறு சமயங்களும்  உண்டென்று  கருதி ,
அதனைக் கொண்டாடும்  வீணர்களுக்கு, 
அவர்கள்  நற்கதி அடையும் பொருட்டு,
சில பிரமாணங்களைக் காட்டி  
அறிவிரை கூறியது,
குன்றினை தகர்ப்பது போன்றது !


தொடரும் ......



No comments:

Post a Comment