Saturday 10 May 2014

அபிராமி அந்தாதி ( 67 )

அபிராமி  அந்தாதி 
பாடல்  67



தோத்திரம் செய்து ,
தொழுது, 
மின்போலும்  நின் தோற்றம் 
ஒருமாத்திரைப் போதும் 
மனத்தில்  வையாதவர் ,

வண்மை,
குலம் ,
கோத்திரம் ,
கல்வி,
குணம்  குன்றி ,

நாளும் குடிகள் தோறும் 
பாத்திரம் கொண்டு 
பலிக்கு  உழலா நிற்பர்,
பாரெங்குமே !


தேவி !  
உன்னைத் தொழாமலும், 
துதிக்காமலும்,
மின்னலைப் போன்று 
சுடர் விடும் உன் தோற்றத்தை, 
ஒரு மாத்திரைப் பொழுதாவது 
( ஒரு கண  நேரமாவது  )
நினைக்காமல்  இருப்பவர்கள் , 
இவ்வுலகத்தில்  எங்கிருப்பினும்,
பெருமை, 
குடிப் பிறப்பு,
கோத்திரம்,
கல்வி, 
நற்குணம்  ஆகியவற்றில் குறைபெற்று, 
வீடுகள் தோறும்   பாத்திரமெடுத்து  
பிச்சையெடுக்கும்  கதிக்கு  ஆளாவர் !  

தொடரும்......











No comments:

Post a Comment