Wednesday 26 February 2014

சிவ புராணம் - மாணிக்க வாசகர்

மாணிக்க வாசகர்   
அருளிய
சிவ புராணம் 

தொல்லை இரும்பிறவி
சூழும்  தளை  நீக்கி
அல்லல்  அறுத்து
ஆனந்தம்  ஆக்கியதே...

எல்லை
மருவா  நெறியளிக்கும்
வாதவூர்  எங்கோன்
திருவாசகம்
எனும்  தேன் !

சிவ  புராணம் 

நமச்சிவாய   வாஅழ்க ,
நாதன் தாள்  
வாழ்க !

இமைப் பொழுதும் 
என் நெஞ்சில் 
நீங்காதான் 
தாள்  வாழ்க !

கோகழி  ஆண்ட 
குரு  மணி,
தன்  தாள்  வாழ்க !

ஆகமம் ஆகி 
நின்றண்ணிப்பான் 
தாள் 
வாழ்க !

ஏகன்,
அநேகன்,
இறைவன் 
அடி  வாழ்க !

வேகம் 
கெடுத்தாண்ட 
வேந்தன் 
அடி வெல்க !

பிறப்பறுக்கும் 
பிஞ்ஞகன்  தன் 
பெய்கழல்கள் 
வெல்க !

புறத்தார்க்கு 
சேயோன் தன் 
பூங்கழல்கள் 
வெல்க !

கரம் குவிவார் 
உள் மகிழும் 
கோன்  கழல்கள் 
வெல்க !

சிரம் குவிவார் 
ஓங்குவிக்கும் 
சீரோன் ....
கழல் வெல்க !

ஈசன் 
அடி  போற்றி,
எந்தை 
அடி போற்றி !

தேசன் 
அடி போற்றி,
சிவன்சே வடி போற்றி !

நேயத்தே நின்ற 
நிமலன் 
அடி  போற்றி !

மாயப் பிறப்பறுக்கும் 
மன்னன் 
அடி 
போற்றி !

சீர்ஆர் 
பெருந்துறை நம் 
தேவன்  
அடி போற்றி !

ஆராத  இன்பம் 
அருளும் 
மலை 
போற்றி !

சிவன் 
அவன் என் 
சிந்தையுள் 
நின்ற...
அதனால்,

அவன்  
அருளாலே,
அவன் தாள் 
வணங்கி,

சிந்தை 
மகிழச் 
சிவ  புராணம் 
தன்னை,

முந்தை  
வினை  முழுதும் 
ஓய 
உரைப்பன்  யான் !

கண் நுதலான் ....
தன்  கருணை 
கண் காட்ட 
வந்தெய்தி,

எண்ணுதற்கு  
எட்டா 
எழிலார் 
கழல் இறைஞ்சி,

விண்  நிறைந்தும்,
மண் நிறைந்தும் 
மிக்காய்!
விளங்கொளியாய் !

எண்ணிறந்து 
எல்லை...
இலாதானே!
நின் 
பெருஞ்சீர் ..!

பொல்லா  
வினையேன்,
புகழுமாறு 
ஒன்றறியேன் !

புல்லாகி,
பூடாய்,
புழுவாய்,
மரமாகி,

பல் 
விருகமாகிப் 
பறவையாய்ப் 
பாம்பாகி,

கல்லாய்,
மனிதராய்ப் 
பேயாய்க் 
கணங்களாய்,

வல் 
அசுரராகி,
முனிவராய்த் 
தேவராய்ச் 

செல்லாஅ  
நின்ற 
இத் தாவரச் 
சங்கமத்துள்,

எல்லாப் 
பிறப்பும்,
பிறந்திளைத்தேன்,
எம் பெருமான் !

மெய்யே !
உன் பொன்னடிகள் 
கண்டின்று 
வீடுற்றேன் !

உய்ய 
என்  உள்ளத்துள் 
ஓங்காரமாய் 
நின்ற 

மெய்யா !
விமலா !
விடைப்பாகா !

வேதங்கள் 
ஐயா 
என ஓங்கி
ஆழ்ந்தகன்ற 
நுண்ணியனே !

வெய்யாய் !
தணியாய் !
இயமானன்  
ஆம் விமலா!

பொய்யாயின 
எல்லாம் 
போயகல 
வந்தருளி,

மெய்ஞ் ஞானமாகி 
மிளிர்கின்ற 
மெய்ச்சுடரே !

எஞ்ஞானம் 
இல்லாதேன்..
இன்பப் பெருமானே ! 

அஞ்ஞானம் தன்னை 
அகல்விக்கும் 
நல்லறிவே !


ஆக்கம் 
அளவிறுதி 
இல்லாய் !

அனைத்துலகும்,
ஆக்குவாய்:
காப்பாய்;
அழிப்பாய்;
அருள் தருவாய் !

போக்குவாய் ...
என்னை 
புகுவிப்பாய் 
நிந்தொழும்பில் ;

நாற்றத்தின் 
நேரியாய் !
சேயாய் !
நணியானே !

மாற்றம் 
மனம் கழிய 
நின்ற 
மறையோனே !

கறந்த பால் 
கன்னலொடு 
நெய் கலந்தாற் 
போலச் 

சிறந்த 
அடியார் 
சிந்தனையுள் 
தேனூறி
நின்று,

பிறந்த 
பிறப்பறுக்கும் 
எங்கள் 
பெருமான் !

நிறங்கள் 
ஓர் 
ஐந்துடையாய்,
விண்ணோர்கள் 
ஏத்த,
மறந்திருந்தாய் 
எம் பெருமான் !

வல் வினையேன் 
தன்னை ,
மறைந்திட 
மூடிய 
மாய  
இருளை,
அறம் பாவம் 
என்னும் 
அரும் கயிற்றால் 
கட்டிப் 
புறம் தோல் 
போர்த்தெங்கும் 
புழு அழுக்கு 
மூடி,
மலம்  சோரும் 
ஒன்பது வாயில் 
குடிலை,

மலங்கப் 
புலனைந்தும் 
வஞ்சனையைச் 
செய்ய 

விலங்கு 
மனத்தால்,
விமலா!,
உனக்குக் 
கலந்த 
அன்பாகிக் 

கசிந்துள் 
உருகும்,

நலந்தான் 
இலாத 
சிறியேற்கு
நல்கி,

நிலம்தான் மேல் 
வந்தருளி 
நீள் கழல்கள் 
காஅட்டி 

நாயிற்க் 
கடையாய் 
கிடந்த 
அடியேற்குத் 

தாயிற்  
சிறந்த 
தயா ஆனா 
தத்துவனே !

மாசற்ற 
சோதி,
மலர்ந்த 
மலர்ச்சுடரே !

தேசனே 
தேன் ஆர் 
அமுதே !
சிவபுரனே !

பாசமாம் 
பற்றறுத்து 
பாரிக்கும் 
ஆரியனே !

நேச 
அருள்புரிந்து 
நெஞ்சில் 
வஞ்சம் கெடப் 

பேராது 
நின்றப் 
பெருங்கருணைப் 
பேராறே !

ஆரா 
அமுதே,
அளவிலாப் 
பெம்மானே !

ஓராதார் 
உள்ளத்து 
ஒளிக்கும் 
ஒளியானே !

நீராய் 
உருக்கியென் 
ஆருயிராய் 
நின்றானே !

இன்பமும்,
துன்பமும் 
இல்லானே,
உள்ளானே !

அன்பருக்கு 
அன்பனே !
யாவையுமாய் 
அல்லையுமாம் 

சோதியனே !
துன்னிருளே !
தோன்றாப் 
பெருமையனே !

ஆதியனே !
அந்தம் 
நடுவாகி 
அல்லானே !

ஈர்தென்னை 
ஆட்கொண்ட 
எந்தைப் 
பெருமானே !

கூர்த்த 
மெய்ஞ்ஞானத்தால் 
கொண்டுணர்வார் 
தம் கருத்தின் 

நோக்கரிய 
நோக்கே,
நுணுக்கரிய  
நுண்ணுணர்வே !

போக்கும் 
வரவும்
புணர்வுமிலாப் 
புண்ணியனே !

காக்கும் எம் 
காவலனே,
காண்பரிய 
 பேரொளியே !

ஆற்றின்ப 
வெள்ளமே,
அத்தா!  
மிக்காய் 
நின்ற 

தோற்றச் 
சுடரொளியாய்,
சொல்லாத 
நுண்ணுணர்வாய் !

மாற்றமாம்  
வையகத்தே 
வெவ்வேறே 
வந்தறிவாம் 

தேற்றனே!
தெற்றத் 
தெளிவே !
என்  சிந்தனையுள் 

ஊற்றான 
உண் ஆர் 
அமுதே !
உடையானே !

வேற்று 
விகார 
விடக்குடம்பின் 
உட்கிடப்ப 

ஆற்றேன் 
எம் ஐயா 
அரனேயோ 
என்றென்று 

போற்றிப் 
புகழ்ந்திருந்து 
பொய் கெட்டு 
மெய் ஆனார் 

மீட்டிங்கு 
வந்து 
வினைப்பிறவி 
சாராமே 

கள்ளப் 
புலக்குரம்பை 
கட்டழிக்க 
வல்லானே !

நள்ளிருளில் 
நட்டம் 
பயின்றாடும் 
நாதனே !

தில்லையுட் 
கூத்தனே,
தென் பாண்டி 
நாட்டானே !

அல்லற் 
பிறவி 
அறுப்பானே !
ஓ என்று 

சொல்லற்கு 
அரியானைச் 
சொல்லித் 
திருவடிக் கீழ்ச் 

சொல்லிய 
பாட்டின் 
பொருளுணர்ந்து 
சொல்லுவார் 

செல்வர் 
சிவபுரத்தின் 
உள்ளார் 
சிவன்  அடிக்கீழ் 
பல்லோரும் 
ஏத்தப் 
பணிந்து,


திருச்சிற்றம்பலம்.





 





 










 



 



 

















 

No comments:

Post a Comment