Thursday, 19 March 2020

பிச்சையும் பிட்ஷையும்

பிச்சையும் பிட்ஷையும்


படித்ததில் பிடித்தது
( படித்த வலத்தளம் )

பிச்சைக்கும் பிட்சைக்கும் நிறைய 
வித்தியாசம் உண்டு. 

பிச்சை என்பது எதைக் கொடுத்தாலும் 
வாங்கிக் கொள்வது, 
ஆனால் அரிசியை மட்டும் தான் 
பிட்சையில் அளிக்க முடியும். 

பிச்சை எடுப்பவர் விதி வசத்தால் 
வாழ முடியாது.,வறுமையில் விழுந்தவர். 

ஆனால் பிட்சை கேட்பவர் வாழ வழி 
இருந்தும் சொத்து சுகங்கள் இருந்தும் 
அவைகளை உதறி விட்டு துறவிக் 
கோலம் பூண்டவர். 

பிச்சை அளிப்பது நம் கருணையாகும். 

பிட்சை கேட்பவருக்கு நாம் பிட்சை 
போடுவது கடமையாகும். 

பிச்சை கேட்பவருக்கு இல்லை 
என்று சொன்னால் நமக்கு குறை 
ஒன்றும் நேராது. பிச்சையிட்ட 
புண்ணியம் வேண்டுமானால் 
இல்லாமல் போகலாம். 

பிட்சை கேட்டு வருபவருக்கு மறுப்பது 
என்பது பாவச் செயலாகும். ஏன் 
என்றால் பிட்சை கேட்டு வருபவர் 
நம்மிடம் இருந்து அரிசியை மட்டும் 
பெறுவதில்லை. நாம் செய்யும் 
தீவினைகளையும் அவர் நமக்காக 
சேர்த்தே பெற்றுச் செல்கிறார்.


சித்தர்கள் பிட்சை பெற்று அரிசியை 
அமுது செய்து ஒரு கவளம் மட்டுமே 
உண்பர். மீதம் உள்ளதை காக்கை, 
குருவிகளுக்கு போடுவர். 

பின்பு பானையை கவிழ்த்து வைத்து 
விடுவர். அதாவது உறங்கச் செல்லும் 
போது அவர்களிடம் அவரது 
உடம்பைத் தவிர வேறு
எதுவும் இருக்காது; 
இருக்கவும் கூடாது.


ஹரி ஓம் !!!!

Wednesday, 18 March 2020

மௌனம்

மௌனம் 






படித்ததில் பிடித்தது !
மௌனத்துக்குப் பல படித்தரங்கள் 
உண்டு.

ஒயாது மிகைபடப் பொருளற்ற 
பேச்சுக்களைப் பேசிக்கொண்டு 
இருப்பதைத் தவிர்த்து, பொருள் உள்ள 
பேச்சுக்களை மட்டும் பேசுவது 
மௌனமாகும்.
பொருள் உள்ள பேச்சுக்களை 
மிகைபடப் பேசுவதைத் தவிர்த்து  
அவைகளை அளவுபடப் பேசுதல் 
மௌனமாகும்.
பேச வேண்டிய  எந்த ஒரு நல்ல 
விஷயத்தையும் பிறர் கேட்டாலொழியப் 
பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த 
மௌனமாகும்.
பிறர் பேசும்படி தூண்டினாலும் 
அப்பேச்சு பிறருக்கோ தனக்கோ அதிகம் 
பயன்படாது என்று தெரிந்த பின் பேசாது 
அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த 
மௌனமாகும்.
இப்படி மௌனத்திலேயே போகப் 
போக மனம் அடங்கியிருப்பதற்கு அந்த 
மௌன நிலையே ஆதாரம் ஆகிறது
ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் 
மனதுக்குள்ளே விதவிதமான எண்ணங்கள் 
உதித்துக் கொண்டிருக்கும். 
அது கிட்டத்தட்ட 
பேசுதற்குக் சமமாகிறது. 
அத்தகைய எண்ணங்களும் உதிக்காமல்   
இருப்பதுதான்   மௌனம் !
இறை சிந்தனை வலுத்து வந்தால் வேறு 
எண்ணங்கள் அடிபட்டுப்போகும். 
கடவுளைப் பற்றிய  ஒரே எண்ணம் 
நிலைத்து நின்றுவிட்டால் அது பண்பட்ட 
நிலை. 
அந்தப் பண்பட்ட நிலையில் மனதை 
நிறுத்திவிட்டால் மௌனம் ஆங்குப் 
பூர்த்தியாகிறது. 
எஞ்சியிருப்பது
பிரம்ம சொரூபம் மட்டுமே !

ஹரி ஓம் 

சிவ புராணம் ( 3 )

சிவ புராணம்
அத்தியாயம் 3


3. உலக சிருஷ்டி
சிவபெருமானின் அநுக்கிரகத்தால் சர்வ சக்திகளையும் பெற்ற பிரமதேவன் தம்முடைய பணியைச் செய்ய, பிரளயமாக எங்கும் வியாபித்திருக்கும் ஜலத்தை அடைந்தார். முதலில் தன்னைத் தோற்றுவித்த விஷ்ணுவை தியானித்துப் பின்னர் ஈசனை அஞ்சலி செய்து தமது சக்தியை நீரில் விட்டார். அந்த க்ஷணமே அது 24 தத்துவங்களோடு கூடிய அண்டமாகத் தோன்றியது. அசைவு ஏதும் இன்றி ஜடமாக இருந்த அதைக் கண்டதும் பிரமதேவன் பெரிதும் வருத்தம் கொண்டு நாராயணனைக் குறித்து பன்னிரண்டு வருடங்கள் கடுமையாக தவம் செய்தார்.
நான்முகனின் தவத்தால் மகிழ்சியுற்ற விஷ்ணு அவரெதிரில் தோன்றி “ நான்முகா… உனக்கு வேண்டுவது யாது?” என கேட்டார்.
நாராயணனைப் பலவிதங்களிலும் தோத்தரித்த பிரமதேவன்  “ பிரபோ.. ஈசன் ஆக்ஞைப்படி உலக சிருஷ்டியைத் தொடங்கிய நான் என் சக்தியைக் கொண்டு இந்த அண்டத்தைத் தோற்றுவித்தேன். ஆனால் இதுவோ உயிரற்ற ஜடமாக இருக்கிறது. தாங்கள்தான் இதற்கு உயிரூட்ட வேண்டும் “ என வேண்டினார்.
பிரமதேவனின் பிராத்தனைக்கு இணங்கிய நாராயணன் அந்த அண்டத்துள் பிராணவாயுவாக பிரவேசித்தார். உடனே அண்டம், பாதாள லோகம் முதல் சத்தியலோகம் வரை வியாபித்து பிராணனை உடையதாக ஆயிற்று. பெரு மகிழ்ச்சி உடையவராய் பிரமதேவன் சிருஷ்டியைத் தொடங்கினார்.
மனதால் சிலரைத் தோற்றுவித்தார் பிரமதேவன். மானஸ புத்திரர்களான அவர்களோ ஊர்த்துவரேதஸாக விளங்கினார்கள். அதாவது, தங்கள் சக்தியை வீணடிக்காமல் மனதைக் கட்டுப்படுத்தி ஞானமார்கத்தில் ஈடுபட்டவர்களாக விளங்கினார்கள். அதைக் கண்ட நான்முகன் மறுபடியும் சிலரை உருவாக்கினார். அவர்களும் இச்சையற்றவர்களாய் முன்னால் தோன்றியவர்களைப்போல் பகவத் தியானத்தில் லயித்துவிட்டனர்.
பிரமதேவனுக்கு பெரும் குழப்பமாகிவிட்டது. உலக சிருஸ்டி காரணமாக தம்மால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் அப்பணியில் ஈடுபடாது ஞானமார்கத்தில் இறங்கிவிட்டனரே என மிகவும் துக்கித்தார். அப்போது சிவனின் அம்சமாகிய ருத்திரன் அவர் முன்பு தோன்றினார்.
“ நான்முகா.. விசனம் ஏன் ? நான் உனக்கு துணை இருக்கிறேன் “ என்றார் ருத்திரன்.
நான்முகன் அவரை நோக்கிக் கரம் கூப்பி, “ பிரபோ.. எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். முதலில் உண்டாக்கப்பட்டவர்கள் ஞானமார்கத்தில் சென்றுவிட்டனரே என்று மீண்டும் சிலரைத் தோற்றுவித்தேன். அவர்களும் எனக்குக் கட்டுப்படாமல் பகவானைத் தியானிக்கவே தங்களுக்கு விருப்பம் என்று கூறிவிட்டனர். சிருஷ்டியில் இடையூறு நேராது அனுக்கிரகிக்க வேண்டும் “ என்று பிரார்த்தித்தார்.
“ கவலையை விடுத்து இனி சிருஷ்டியைத் தொடங்கலாம். இனி இடையூறு இருக்காது “ என ருத்திரன் அருளினார்.
பின்னர் நான்முகன் ஈசனைத் தியானித்து சிருஷ்டியைத் தொடங்கினார். சப்த ரிஷிகளைத் தோற்றுவித்தார். தமது மடியில் இருந்து நாரதரை உருவாக்கினார். தமது நிழலில் இருந்து கர்தம ரிஷியைத் தோற்றுவித்தார். பிரமனின் பெருவிரலில் இருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார்.
சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவரிடத்தில் மரீசி உண்டானார். மரீசி காசிபரைத் தோற்றுவித்தார். காசிபர் மூலம் உலகம் விருத்தி அடைந்தது.
தக்ஷப்பிரஜாபதிக்கு அறுபது பெண்கள் பிறந்தனர். அவர்களில் பதின்மூன்று பேரை காசிபருக்கு மணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு தேவர்கள், அசுரர்கள் முதலானோர் பிறந்தனர். இன்னும் விருக்ஷங்களும், பக்ஷிகளும், சர்ப்பங்களும், பர்வதங்களும் அவர்களிடத்தில் உண்டாகி உலகெங்கும் வியாபித்தன.



ஹரி ஓம் !!!

Tuesday, 10 March 2020

சிவபுராணம் அத்தியாயம் 2

சிவ புராணம் 


2. சிவ தத்துவம்

லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்த சிவபெருமானைக் கண்டதும் நான்முகனும், நாராயணனும் அவரை வணங்கினர்.

“ பிரபோ.. தாங்கள் யார் ? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையே, கருணை கூர்ந்து எங்களுக்கு விளக்க வேண்டும் “ என்று பணிவோடு வேண்டினர்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்த ஈசன் சொல்லலுற்றார்.

“ உங்கள் இருவருக்கும் மூல காரணன் நான். என்னை சிவன் என்றும் பிரம்மம் என்றும் கொள்ளலாம். அனைத்துமே என் வடிவம்தான். என் சம்பந்தமின்றி எதுவும் உண்டாவதில்லை. அண்ட சராசரங்களும் என்னால் தோற்றுவிக்கப்பட்டவையே! “

இவ்வாறு தெரிவித்த சிவன் நான்முகனைப் பார்த்து “ பிரம்மதேவா! உலக சிருஷ்டிக்காக என் ஆக்ஞையால் விஷ்ணு உன்னைத் தோற்றுவித்தான்.” என கூறினார். பின்னர் விஷ்ணுவைப் பார்த்து “ நாராயணா… ! சிருஷ்டிகளின் பாதுகாப்புக்காக நீ என்னால் உருவாக்கப்பட்டாய் என்பதனை அறிந்து கொள்.

என்னுடைய மற்றொரு அம்சமே ருத்திரன். அவன் அழிவுக்குக் காரணமாவான். பிரகிருதியிடமிருந்து பிராம்மணி என்ற சக்தி தோன்றி பிரமனை அடைவாள். அவ்வாறே லக்ஷ்மி தோன்றி உன்னை அடைவாள். காளி என்பவள் ருத்திரனை அடைவாள். நீங்கள் மூவரும் உங்கள் சக்தியரோடு சேர்ந்து சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் எனப்படும் மூவகைக் காரியங்களையும் செய்து வருவதற்காகவே என்னால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் “ என்றார்.

அப்போது விஷ்ணு மறுபடியும் சிவனை வணங்கி” பிரபோ.. ! எங்களைத் தோற்றுவித்ததற்கான காரணங்களைக் கூறினீர்கள். இருப்பினும், நாங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், அதற்கான சக்தியை நாங்கள் எவ்வாறு அடைவோம் ? என்பன போன்றவற்றையும் விவரிக்க வேண்டுகிறோம் “ என பிராத்தித்தார்.

அவர் வார்த்தைகளால் மகிழ்சியுற்ற ஈசனும், “ ஓம் தத்வமசி “ என்ற மஹா வாக்கியத்தையும், மிருத்தியுஞ்சயம், பஞ்சாக்ஷரம், சிந்தாமணி தக்ஷிணாமூர்த்தி மந்திரம் ஆகிய மஹா மந்திரங்களை விஷ்ணுவிற்கு உபதேசித்தார். பின்னர், சுவாச மார்கமாக வேதத்தையும் அவருக்கு உபதேசம் செய்தார். அவற்றைக் கிரகித்து விஷ்ணுவும் சுவாச மார்கமாகவே நான்முகனுக்கு உபதேசம் செய்தார்..

பின்னர், எதிரில் இருக்கும் ஈசனைப் பணிந்து “ பிரபோ…! தங்களுடைய தரிசன பாக்கியத்தால் நாங்கள் கிருதார்த்தர்களான நாங்கள் எக்காலத்தும் தங்களிடம் இடைவிடாத பக்தி கொண்டிருக்குமாறு அருள வேண்டும், தங்களை எந்தவிதமாக தியானித்தால் தாங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும் “ என்று கேட்டார்.

“ நாராயணா… ! நான் இப்போது எவ்வாறு காட்சி தந்துகொண்டிருக்கின்றேனோ, அதே தோற்றத்தில் லிங்கத்தில் இருப்பதாக எண்ணி தியானித்தால் போதும். என்னை தியானிப்பவர்களுக்கு நான் சகல காரிய சித்தியையும் அளிப்பேன். பிரமன் எனது வலது பக்கத்திலும், நீ என் இடது பக்கத்திலும், ருத்திரன் எனது இதயத்திலுமாக மூவரும் என்னுடன் ஐக்கியமாகி இருக்கிறீர்கள். நீங்கள் மூவரும் என் வடிவமே அன்றி வேறு அல்ல. சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் ஆகிய முத்தொழில்களும் நடைபெறவே மூவராகப் பிரித்திருக்கின்றேன். நீங்கள் சிவ ரூபத்தில் இருந்து உண்டானவர்கள். சத்தியமாயும், ஞானரூபமாயும் அழிவு என்பதே இல்லாததுமான என்னுடைய சிவ ரூபமே ஆதி காரணம் ஆகும். ஜோதியானது எப்படி ஜலம் முதலான சம்பந்தம் இருப்பினும் நாசமின்றி இருக்கிறதோ, அதுபோல நிர்குணமான எனக்கு உங்களோடு சம்பந்தம் இருப்பினும், பந்தனம் கிடையாது, சிவரூபம் தானே உற்பத்தியானது. பிரகிருதியால் தோற்றுவிக்கப்பட்டதல்ல. உங்களால் உண்டாக்கப்படும் உலகங்களுக்கு சுகம் ஏற்படவும், உங்களைப் பார்த்து உலகத்தார் பூஜிக்கவும், நீங்கள் இந்த லிங்கரூபத்தை என்றும் குன்றாத பக்தியோடு பூஜித்து வாருங்கள். உங்களுக்கு சர்வ வல்லமைகளும் கைகூடும் “

இவ்வாறு கூறிய ஈசன், அவர்களுக்கு அநேக வரங்களைக் கொடுத்து அநுக்கிரகம் செய்துவிட்டு மறைந்தார்
--0O0—

Sunday, 8 March 2020

Virupaksha Temple, Mulbagal Pin 563131


Virupaksha-Guttahalli is situated 2 Km south-west of Mulabagilu town. The village is known for Virupaksha temple complex dating back to Vijayanagara period, and ruins of a fort surrounding the complex.
We arrive from Mulbagilu fort. Virupaksha is a sleepy little village. On the village outskirts is this ancient temple protected by strong walls.
Across the street is ruins of a gateway of the same period. It looks incomplete.
Other side of the gateway. Gulli takes a cautious steps on slippery granite slabs while Deepak check a picture in his Nikon. One of the steps has a strange mark on it (see inset).
The temple-fort complex entrance. On the fort walls were sculpturing of fishes, bird and a human. A government primary school is across the street. These kids were curious about our interest in their temple :)
The temples inner wall, Gopura and pilgrims' dormitory. The Gopura has three levels. Hampi Virupaksha temple Gopura has nine levels.
Kalyana Mantapa.
Floor slabs are missing exposing the dirt. This monument needs some serious attention. Pillars depict different forms of animals, flora, human and mythological creatures.
Here are few images.
Gopura as seen from Kalyana Mantapa.
Pair of mythological creatures decorate the entrance.
A mythological creature with lion's head.
According to sources this temple was built by a chieftain Lakkana Dandesha of Muluvai province under the rule Devaraya II of Vijayanagar dynasty. The temple architecture is typical Dravida style. Besides Gokarna Mahabhaleshwar temple, Virupaksha temple is the only other temple to have two Shivalinga. Of the two Lingas, one is believed to be worshiped by Atri Maharshi and the other one is Atma-Linga.

According to the temple poojari, Atma Linga changes color through out the day; blood red in the mornings, white during afternoon and honey color in the evening. When we saw the Linga it seemed little whitish. One must spend a full day here to actually see the colors.. we were here for little more than an hour. The poojari asked us not shoot pictures of the deity. Here's a digitally rendered image.
Another specialty of this temple is the spot in front of the Garbhagudi where one can feel divine energy. The spot is a 2' x 2' x 6" pit. When you stand in the pit, closes eyes, joins hand at the palm & stretches them straight above the head and stand still for few minutes, you would feel vibrations caused by cosmic  energy. Its best to do that early mornings, after a bath and attired in fresh white clothes.

Nandi facing the Garbhagudi.
Within the temple are sculpted images of several other Gods.

Also within the walls of this temple is a Kannada inscription dated 1481 CE. The inscription gives details of contribution made by Heggadedeva an official of Vijayanagara empire during Devaraya’s rule. The contribution was made towards construction of temples, compound walls, a gold Kalasha, a Pushkarani and a Kalyana Mantapa.
Few more temples where sources mention color-changing phenomena in Shiva Lingu are-

1. Pataleswar Temple, Talakad,
2. Kantheshwara temple, Mangalore
3. Sri Kalyana Sundarareswarar Temple, Thirunallur


With the sun blazing down it was really warm. We were glad to be sitting in the car and gulping down water. Our next place on the list was Avani, the birth place of Rama's sons. Avani also has a hill with a fort and a temple dedicated to Rama's wife Sita.

thanks to :

https://karnatakatravel.blogspot.com/2013/01/virupaksha-temple-and-fort-mulbagal.html
Virupaksha fort coordinates: 13°8'37"N   78°21'58"E

விருபாக்ஷா ஆலயம்

விருபாக்ஷா ஆலயம் 
முல்பாகல் தாலுக்கா
Pin  :  563131


கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், 
முல்பாகல் தாலுக்காவில் உள்ள புகழ் 
பெற்ற சிவாலயம் விருபாக்ஷா ஆலயம்.

ஓசூரில் இருந்து மல்லூர் சாலை வழியாக
சுமார் 90 கி மீ தொலைவில் உள்ளது.

ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த 
கோவிலில் இரு திருமேனிகள் உண்ணது.

ஆத்ரேய முனிவர் மார்க தர்ஷனேஸ்வர
லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 
எம்பெருமானை நோக்கித் தவம் செய்து
வழிபட்டு வந்தார். முனிவரின் தவத்தை
மெச்சிய சிவபெருமான், காட்சி அளித்து 
அவரை ஆட்கொண்டதுடன்,  விருபாக்ஷ 
ஆத்ம லிங்கத்தையும் அளித்தார். 

தற்போது, இந்த இரண்டு லிங்கங்களும்
வழிபாட்டில் உள்ளது. 

இறைவன் அளித்த ஆத்ம லிங்கம், காலையில் 
செந்நிறமாகவும்,  நண்பகலில் வெண்மையாகவும்,
மாலையில் தேன் நிறத்திலும் மாறும் 
தன்மை உடையது.

இதன் சூத்திரம் இதுநாள் வரை யாருக்கும்
புலப்படவில்லை.

















ஹரி ஓம் !!












Thursday, 5 March 2020

ஆனை முகத்தான்  துதி !


விநாயகர்  சித்தி மந்திரம்

ஸுக்லாம்  பரதரம்
விஷ்னும்
சதிர்புஜம்
பிரசன்ன வதனம்
த்யாயேத் :
சர்வ வினோப சாந்தயே !

கணபதி  மூல மந்திரம்

ஓம் ....
ஸ்ரீம்
க்லீம்
க்லெளம்
கம்
கணபதையே !
வரவரத
சர்வ ஜனம்மே
வஸ மாயை   ஸ்வாஹா !


விநாயகர்  காயத்ரி

ஓம் ....
ஏக தந்தாய  வித்மஹே !
வக்ர துண்டாய  தீமஹி !
தந்நோ தந்தி :
ப்ரசோதயாத் !

ஓம்...
தத் புருஷாய  வித்மஹே !
வக்ர துண்டாய   தீமஹி !
தந்நோ தந்தி :
ப்ரசோதயாத் !